Pages

Tuesday, December 10, 2013

ஆரோக்கியத்துக்குத்தான் 'சப்போ(ர்)ட்டா இருக்கே..!

சப்போட்டா
கடவுள் படைத்த இவ்வுலகில் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு காரணத்திற்காகத்தான் படைக்க பட்டிருக்கிறது. அந்த வகையில் மனித வாழ்க்கையும் இயற்கையும் ஒன்றை ஒன்று சார்ந்தேதான் இயங்கி கொண்டிருக்கிறது.

இயற்கைக் கொடுத்த பல அற்புதங்களில் மனித வாழ்க்கைக்கு எப்பொழுதும் 'சப்போர்ட்'டாக விளங்குவதில் ' சப்போட்டா' பழம் முதல் சாய்ஸ் என்றே சொல்லலாம். அப்படி என்னதான் இருக்கிறது எனகேள்வி கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல். அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம்.

ஏனெனில் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ் அதில் அதிகம் உள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்குத் தேவையான அதிக ஆற்றலை பெற இது உகந்தது. வைட்டமின் 'ஏ' மற்றும் 'பி' இதில் அதிகம் காணப்படுவதால் நமது தோ
லின் அமைப்பு முறையை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.            

லும்பைப் பலப்படுத்தத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களை அதிகளவு கொண்டுள்ள சப்போட்டா பழத்தை, தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு பலப்படுகிறது. சப்போட்டாவிலிருந்து நமது உடலுக்கு 56/100 கிராம் அளவு நார்ச்சத்து கிடைப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையும் வராது. இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையைச் சப்போட்டா பழம் கொண்டுள்ளது.

சப்போட்டா பழச்சாறுடன் தேயிலை சாறும் சேர்த்து பருகினால் ரத்த பேதி குணமாகும். தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா பழ ஜூஸ் குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம். சப்போட்டா பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு தேக்கரண்டி சீரகத்தை நான்கு மென்று விழுங்கினால் போதும் பித்தம் பறந்தே போகும். பித்த மயக்கத்திற்கு இது நல்ல மருந்து.

சப்போட்டா பழத்தைக் கூழக்கி சிறுது சுக்கு சித்தரத்தையைப் பொடித்துப் போட்டுச் சாப்பிடலாம். ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிப்படி பார்வையைப் பலப்படுத்துவதோடு முதுமையைத் தள்ளிபோடும் ஆற்றலும் இதில் அதிகம். எனவே தினமும் ஒரு சப்போட்டா பழம் எடுத்துக் கொண்டால்போதும் உங்கள் ஆரோக்கியத்திற்கான ' புல் சப்போர்ட்' டும் சப்போட்டா பழம் வழங்குகிறது.

வைட்டமின் ஏ மற்றும் பி உள்ளதால் உடலில் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. சப்போட்டாவில் உள்ள ஆண்டியாக்கிடடண்ட் நார்சத்து மற்றும் ஊட்டசத்துக்கள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை தரும். எலும்பை பலப்படுத்த தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளதால் எலும்பை பலப்படுத்தும். சப்போட்டா பழத்தை சாப்பிட்டதும் ஒரு தேக்கரண்டி சீர்த்தை நன்கு மென்று விழுங்கினால் பித்த விலகும். விளையாட்டு வீரர்களுக்கு அதிக சக்தி தேவைப்படும் என்பதால் சப்போட்டா பரிந்துரைக்கப்படுகிறது.

காளானின் மருத்துவ குணங்கள்

காளான் மழைக்காலங்‌களில் மட்கிப் போன பொருட்களில் மீது வளரும் ஒரு பூஞ்சை இனம். இவற்றில் இயற்கையாய் வளரும் சில காளான்களில் விஷமுள்ளதும் விஷமற்றதாகவும் உள்ளன. காளான் வளர்ப்பு சிறந்த குடிசைத் தொழிலாக செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இது மிகுந்த சத்து சுவை உடையதாக உள்ளது. மருத்துவ பயன்களை கொண்டது.

இந்தியாவில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இவற்றில் மொட்டுக் காளான், சிப்பிக் காளான் மட்டுமே அதிகப் பயன் பாட்டில் உள்ளது. காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை எடுத்து தேவைப்படும் இடத்துக்கு அனுப்பும் வியத்தகு பணியை காளானில் உள்ள வேதிப்பொருட்கள் செய்கின்றன. இதனால் உடலில் தேவையில்லாத இடத்தில் அதிகப்படியான கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, இதயம் சீராக இயங்க உதவுகிறது. இதயத்தை காப்பதில் காளானின் பங்கு அதிகம் எனலாம்.

ரத்த அழுத்தத்தின் போது ரத்தத்தில் உள்ள உட்புறம் வெளிப்புறம் செல்களில் பொட்டாசியம், சோடியம் ஆகிய வற்றை அளவு சமமாக இருக்க வேண்டும். அப்பணியை காளானில் உள்ள வேதிப்பொருட்கள் திறம்பட செய்கிறது. மேலும், காளானில் உள்ள தாமிர சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் படுத்துகிறது. காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. மலட்டுதன்மை மற்றும் கருப்பை நோயுள்ள பெண்களுக்கு சிறந்த மருந்து. காளானில் அமினோ அமிலங்கள் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஜீரணம், மலச்சிக்கலை தீர்க்கும் இயல்புடையது. பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

பழங்களை தேர்வு செய்வது எப்படி?


இன்றைய வேகமான சூழலில் முறையான உணவுப் பொருட்களை சாப்பிடாததால், பல்வேறு சத்துக்குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்களை சம அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மாறிவரும் உணவுப் பழக்க வழக்கத்‌தாலும், துரித உணவுகளை உட் கொள்வதாலும், இளைய தலைமுறையினர் மாற்று உணவு கலாச்சார முறைக்கு அடிமையாகி வருகின்றனர்.

இயற்கை உணவுகளை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்து விட்ட காரணத்தால், நோய் நொடிகள் நம்மை நெருங்கி விட்டன. டப்பா உணவுகள் கமர்சியல் சத்து மாவுகளை தரம் பார்த்து நிறுவனம் பார்த்து வாங்கலாம். ஆனாலும் கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை என சிறுதானியங்களில் கிடைக்கும் சத்துக்கு நிகர் இல்லை. நமது முன்னோர்களே அதற்கு தக்க சாட்சி. குறிப்பாக நம்மில் பலர் குறிப்பிட்ட பழங்களை தவிர மற்ற பல வகைகளை சாப்பிடுவதே கிடையது. முப்பது வகையான பழங்கள் சாப்பிடக்கூடியவையாக உள்ளன.

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, கொய்யா என குறிப்பிட்ட சில பழங்களை தவிர, மற்ற பழங்களை பெரும்பாலும் சாப்பிட அக்கறை கொள்வதில்லை. ஒவ்வொரு பழங்களும் குறிப்பிட்ட விட்டமின் சத்துபொருட்களை உடலுக்கு
ருகின்றன. மலிவு விலையில் கிடைக்ககூடிய நெல்லிக்காய், சப்போட்டா, முந்திரி பழம், ஈச்சம் பழம், பேரிச்சம் பழம், வெள்ளரி போன்றவைகளை சாப்பிடுவோர் மிகக்குறைவே. இதனால் விட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட காலநிலைகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் சாப்பிடுவதும் தவறு. வெயில் காலத்தில் மாம்பழம் கிடைக்கிறது என்பதற்காக அதிகளவில் சாப்பிட்டால் சூடு பிடிக்கும். இதற்கு இயற்கை தந்த மாற்று பழம் தான் வெள்ளரி. இதில் அதிகளவில் நீர்ச்சத்து இருப்பதால், கோடை தாகத்திற்கு தண்ணீருக்கு மாற்று உணவாக கருதப் படுகிறது. பொதுவாக பழங்கள் வாங்க கடைக்கு செல்லும் போது பளபளப்பாக மீனுக்கும் தன்மையுடன் இருக்கும் பழங்களை தேர்ந்தெடுக்க கூடாது.

பெரும்பாலான பழங்கள் விரைவில் காய் நிலையில் பழுக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. இதனால் மினுக்கும் தன்மையுடைய பழங்களை தவிர்த்தல் நல்லது. பேரீச்சம் பழம் வாங்கும் போது காய்ந்த கருப்பு நிறமுடையவைகளை தெளிவு செய்ய வேண்டும். குறைந்த விலையில் மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எண்ணை தடவிய பேரிச்சம் பழங்களை வாங்கி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம்.   

மாதுளம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை வாங்கும் போது, நுகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். மணத்தை வைத்து இப்பழங்கள் சாப்பிட தகுதியானவை என்பதை தெரிந்து கொள்ளலாம். வெளிஇடங்களில் பழ ரசம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. பழரசம் செய்து சாப்பிடுவதை காட்டிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் ஈறுகள் வலுவடைவதோடு அல்லாமல் வாய் புத்துணர்ச்சி அடையும். இனி பழங்கள் வாங்குவதற்கு முன் பலமுறை யோசித்து தெளிவு செய்யுங்கள்.

நலம் பல தரும் 'நந்தியா வட்டை'














மூலிகை தாவரங்களில் இருக்கும் மகத்துவம்அறிந்தே, சித்தர்கள் பல மருத்துவ வித்தைகளை கற்று தேர்ந்தனர். விஷயம் தெரிந்தவர்கள் நமது வீடுகளிலேயே மூலிகை செடிகளை வளர்த்து பயனடைகின்றனர். தோட்டங்களிலும், வெளியோரமாகவும் நாம் தினமும் பார்க்கும் நந்தியா வட்டையை அசட்டையாக பார்ப்பதை விடுங்கள்.

அதன் மகத்துவம் தெரிந்தால் ஆச்சரியம் தான் மிஞ்சும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது என்பதை நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை. இலை, மலர், வேர், வேர்பாட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய், போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியா வட்டை அதிக அளவில் பயன்படுகிறது.

செயல் திறன் மிக வேதிப்பொருட்கள்:

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலிம்பிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம் ஆகியவை இதில் உள்ளன.

பார்வை கோளாறு குணமடையும்:

இலைகளில் பால் சாறு காயங்களில் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண் நோயிலும் உதவுகிறது. நந்தியா வட்டைப்புவும், கண்களில் விழும் பூ மறைய உதவும். நந்தியா வட்டப் பூவானது நேந்திராகாசம், படலம், லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றை கொடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கிற இரண்டு இனமுண்டு; இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு, இதை கண்களை முடி கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

மலர்களின் சாறு எண்ணைய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாக பயன்படுகின்றது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள். நந்தியா வட்டப் பூ 50 கிராம், ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணையில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை, மாலை கண்களில் விட்டு வர பூ, சதை வளர்ச்சி, பல விதமான கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

பல் வலி நீங்கும்:

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்று போக்கு, வயிற்று கடுப்பு நீங்கும்: கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்பாட்டை வயிற்று பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது, பல் வலி போக்கும். வலி நீக்கும். கட்டை குளுமை தருவது வேரை வாயிலிட்டு மென்று துப்பிவிட பல் வலி நீங்கும்.

Saturday, December 7, 2013

You Can Make A Huge Difference To The Indian Economy By Following Few Simple Steps:-

Please spare a couple of minutes here for the sake of India.

I got this article from one of my friends, but it's true. I can see this in day to day life.

Here's a small example:-

Before 12 months 1 US $ = IND Rs 45
After 12  months, now 1 $ = IND Rs 54.84

Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down.

Our economy is in your hands....

INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if
we do not take proper steps to control those, we will be in a critical situation.


More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc... which are grown, produced and consumed here.


A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is  a serious drain on INDIAN economy.


We have nothing against Multinational companies, but to protect our own interestsm we request everybody to use INDIAN products only atleast for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.


What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.....


Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.

LIST OF PRODUCTS

COLD DRINKS:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR),
BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...

INSTEAD OF  COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE
SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

INSTEAD OF  LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY,
CAMAY, PALMOLIVE


TOOTH PASTE:-
USE  NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK

INSTEAD OF  COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.


TOOTH BRUSH: -
USE PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
USE GODREJ, EMAMI

INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE:-
USE  SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF  SEVEN-O -CLOCK, 365, GILLETTE


TALCUM POWDER:-
USE  SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS

INSTEAD OF  PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER:-
USE  INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF  ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO:-
USE  LAKME, NIRMA, VELVETTE

INSTEAD OF  HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS:-
USE BSNL, AIRTEL

INSTEAD OF HUTCH

Food Items:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma

INSTEAD OF  KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W

Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA.
Let us take a firm decision today.


BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY
DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE
AFTER LOSING MANY LIVES.
THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT
TREND IS VERY THREATENING.


MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS
LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST'S LEFT
INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY
MISTAKES.


WHO WOULD LIKE TO LET A "GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY?


PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE


RUSSIA, S.KOREA, MEXICO - THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM
THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY
TRUE INDIAN.


FINALLY, IT'S OBVIOUS THAT YOU CAN'T GIVE UP ALL OF THE ITEMS
MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR
COUNTRY!

We would be sending useless forwards to our friends daily. Instead,
please forward this post to all your friends to create awareness.

"LITTLE DROPS MAKE A GREAT OCEAN."

அற்புதங்கள் செய்யும் ' அகத்திகீரை'



 தாவரங்களில் மனிதர்கள் உண்ணக்கூடிய கீரை வகைகளில் அதிக சத்துகள் நிறைந்துள்ளது. அந்த வகையில், மனிதனுக்கு தேவையான பல சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது அகத்திக்கீரை. வீட்டு தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாக அகத்திக்கீரை பயிரிடப்படுகிறது.

அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா நாடாகும். அதிக பட்சம் ௧௦ மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்ட அகத்திச்செடி மென்மையான கட்டை வகையாகும். அகத்திச்செடியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளன. இலைகள் இரட்டை சிரகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களை கொண்ட அகத்தியை சாதாரண அகத்தி என்றும், சிவப்பு பூக்களை கொண்ட அகத்தியை செவ்வகத்தி என்றும் நடைமுறையில் அழைக்கிறோம். அகத்தி கீரை மற்றும் பூக்களை மனிதர்கள் உட்கொள்ளலாம்.

இவற்றில் ஈரப்பதம் 73 சதவிகிதம், புரதச் சாத்து  83 சதவிகிதம், தாதுஊப்புகள் 3.1 சதவிகிதம், நார்சத்து 2.2 சதவிகிதம், மாவுச்சத்து 12 சதவிகிதம், கொழுப்புச்சத்து 1.4 சதவிகிதம், என்ற அளவில் உள்ளன. தாது உப்புக்களில் சுண்ணாம்பூச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் 'ஏ' தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் 'சி' போன்றவை அடங்கிஉள்ளன. அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் குணங்கள் நிறைந்துள்ளன. இந்த குணங்கள் நச்சை நீக்கும் தன்மையுள்ளதால், அலோபதி மருந்து சாப்பிடும் காலங்களில் அகத்தி கீரை, பூ போன்றவற்றை தவிற்க வேண்டும்.

அகத்தி கீரை பித்தம் போக்கும்; ஜீரண சக்தியை உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுதரும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியை கொடுக்கும்; கண் பார்வை தெளிவாக்கும். அகத்தி கீரையை நறுக்கி, வதக்கி சாப்பிடலாம். பூக்களில் மகரந்த பூக்களை நீக்கி விட்டு, வ
றுத்து சாப்பிடலாம். பூக்களை கசாயமாக்கி குடிக்கலாம். இலைச்சாறை தேனில் கலந்து சாப்பிடலாம்.

அகத்தி பூவை சமைத்து சாப்பிடும் போது மலச்சிக்கல் நீங்கும். அகத்தி கீரை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி விதம் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு நோய் நீங்கும். அகத்தி கீரை சாறு ஒரு ஸ்பூன் உடன், அதே அளவு தென் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். கீரையை அரைத்து அடிபட்ட புண் மீது வைத்து கட்டினால், காயம் குணமாகும். அகத்தி கீரை பொடியை பால் அல்லது நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

அகத்தி பூ சாறு எடுத்து, நெற்றியில் பூசினால் தலைவலி போகும். அகத்தி கீரை சாறு ஒரு துளியை முக்கில் விட்டால் ஜலதோஷம் நீங்கும். அகத்தி பட்டை கஷாயம் காய்ச்சலின் போது உட்கொள்ளலாம். கீரை உடல் சூட்டை தணித்து, பித்த நோயை நீக்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அகத்தி கீரை அருமருந்து. இது மலத்தை இளக்கி வெளியேற்றும். அகத்தி கீரை மற்றும் பூவை இரவு வேளை உணவில் சேர்த்துகொள்ளுவதை தவிர்க்க வேண்டும். அகத்தி செடியில் வேர் முதல் நுனி வரை மனித குலத்துக்கு பயனுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அகத்தி செடியை வள்ர்த்தால் ஆரோக்கியம், ஆனந்த வாழ்வும் கிடைக்கும்,

ஐம்பதை கடந்தவரா நீங்கள்?



உணவு விஷயத்தில் நாம் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்
வேண்டும்? கட்டுப்பாடாக இல்லாவிட்டால் உடலின் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும்?- விளக்குகிறார் காஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட் டாக்டர் உஷா ஸ்ரீனிவாஸ்:

மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். ஆனால், கிடைத்ததையெல்லாம் ஒரு வெட்டு வெட்டுவது என்றால் அவஸ்தைப்பட வேண்டியதுதான். ' இதைச் சாப்பிடு, இதை சாப்பிடாதே' என சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால் நோயாளிகளுக்குக் கேட்கவே வேண்டாம். உதாரணமாக நிரழிவு நோயாளிகள் தங்களுக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்டால், அது வயிற்றிலிலுள்ள காஸ்ட்ரிக் இன்டஸ்டைனைப் பாதிக்கும். வயிற்றுப் போக்கு, வாந்தி என துவங்கிவிடும். இதை 'அட்டானமிக்' நியுரோபதி என்பார்கள் மருத்துவர்கள்.

ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால், தைராய்ட் ஹார்மோன் குறைவாகச் செயல்படும். அப்போது உடல் எடை கூடிவிடும் ஆபத்து இருக்கிறது. லிவரில் கொழுப்புச் சத்து படிந்துவிடும். அப்படி ஆகும்போது, லிவர் இயக்கம் பாதிக்கப்படும். லிவரில் கொழுப்பு அதிக
காலம் தங்கிவிட்டால் அது கான்சரில் கொண்டு விடும். லிவர் பெரிதாவது, வீக்கம் ஏற்படுவது எல்லாம் அதன் இயக்கத்தைப் பாதிக்கும். சுருங்கிப் போனாலும் ஆபத்து தான்.

'சிரோஸிஸ் ஆஃப் த லிவர்' நேரும் அபாயம் இருக்கிறது. ஆசிடிடி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிட் மேலே எதிர்த்து வருவதை 'ரீஃப்ளெக்ஸ்' என்பார்கள். அதனால் உணவுக்குழாய் பாதிக்கப்படும். ஈஸஃபேகஸ் பகுதியில் புண் வந்து அது வருடக்கணக்காக இருந்துவிட்டால், அதற்கும் கேன்சர் தான் முற்றுப் புள்ளி. அதனால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

ஜீரணப்பாதையில் வரும் புற்றுநோய் (டைஜெஸ்டிவ் டிராக் கான்செர்) அந்த பாதையின் மேல் பாகத்தில் உருவாகத் தொடங்கும். உணவுக்குழாய், வயிறு அல்லது பெருங்குடலின் கீழ் பகுதியிலோ மலக்குடலிலோ இது தோன்றும். இந்த வகை நோய்களுக்குச் சிகிச்சை அளித்த பிறகும் கூட, அந்த நோய் நம்மை விட்டு போய் பூரண குணம் அடைந்துவிடுவோம், முன்னெச்சரிக்கையாக என்று எச்செரிக்கை  உணர்வை ஊட்ட, நமது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். 

உணவுக்குழாயில் வரும் புற்று நோயைத்தான் ஈஸஃபேகஸ் கேன்சர் என்கிறார்கள். இந்த நோய் பொதுவாக தங்குமிடம், உணவுக்குகுழலையும் வயிற்றுப் பகுதியும் சேர்கிற இடமாகும். இதன் அறிகுறியாக உணவு சாப்பிடுவதே மிகவும் கஷ்டமாக இருக்கும். நோய் தீவிரமாகிவிட்டால் திரவ வடிவில் இருக்கும் உணவு கூட ஜீரணமாகாமல் அவதியை உண்டாக்கும். இதனால், உடலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காததால் உடல் எடை குறையத் தொடங்கும். வயதானால் வரும் மலச்சிக்கல் இன்னொரு பிரச்னை. உணவில் நார்ச்சத்து குறைந்து விட்டால் வரும்.  நார்ச்சத்து பழங்கள் காய்கறிகள், ஒட்ஸ் மற்றும் கேழ்வரகு பொன்ற தனியங்களில் இருக்கிறது.

ரீபைன்ட் உணவு வகைகள், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, பிட்சா, சீஸ் என நமது வாழ்க்கை முறை மேற்கத்திய பாணிக்கு மாறிக் கொண்டிருக்கிறது. அப்படி ஆகும்போது மலச்சிக்கல் பாதிக்கத்தான் செய்யும். அவர்களுக்கு வாரத்தில் மோஷன் ஆச்சு என்றால் அது நார்மல். நமக்கு தினசரி 2 அல்லது 3 வேலை மோஷன் ஆனால் கூட அது நார்மல் தான். மலக்குடல் வேகத்துடன் சுருங்கும்போது, டைவர்ட்டிகுலம் எனப்படும் பகுதி, சின்ன சின்ன பாக்கெட்டுகளாக உருவாகி, கிருமித் தொற்று மற்றும் ரத்தம் கசியும் நிலை ஏற்படும்.