Pages

Tuesday, December 10, 2013

நலம் பல தரும் 'நந்தியா வட்டை'














மூலிகை தாவரங்களில் இருக்கும் மகத்துவம்அறிந்தே, சித்தர்கள் பல மருத்துவ வித்தைகளை கற்று தேர்ந்தனர். விஷயம் தெரிந்தவர்கள் நமது வீடுகளிலேயே மூலிகை செடிகளை வளர்த்து பயனடைகின்றனர். தோட்டங்களிலும், வெளியோரமாகவும் நாம் தினமும் பார்க்கும் நந்தியா வட்டையை அசட்டையாக பார்ப்பதை விடுங்கள்.

அதன் மகத்துவம் தெரிந்தால் ஆச்சரியம் தான் மிஞ்சும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது என்பதை நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை. இலை, மலர், வேர், வேர்பாட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய், போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியா வட்டை அதிக அளவில் பயன்படுகிறது.

செயல் திறன் மிக வேதிப்பொருட்கள்:

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலிம்பிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம் ஆகியவை இதில் உள்ளன.

பார்வை கோளாறு குணமடையும்:

இலைகளில் பால் சாறு காயங்களில் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண் நோயிலும் உதவுகிறது. நந்தியா வட்டைப்புவும், கண்களில் விழும் பூ மறைய உதவும். நந்தியா வட்டப் பூவானது நேந்திராகாசம், படலம், லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றை கொடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கிற இரண்டு இனமுண்டு; இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு, இதை கண்களை முடி கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

மலர்களின் சாறு எண்ணைய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாக பயன்படுகின்றது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள். நந்தியா வட்டப் பூ 50 கிராம், ஒரு பாட்டிலில் போட்டு நல்லெண்ணையில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை, மாலை கண்களில் விட்டு வர பூ, சதை வளர்ச்சி, பல விதமான கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

பல் வலி நீங்கும்:

நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்று போக்கு, வயிற்று கடுப்பு நீங்கும்: கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்பாட்டை வயிற்று பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது, பல் வலி போக்கும். வலி நீக்கும். கட்டை குளுமை தருவது வேரை வாயிலிட்டு மென்று துப்பிவிட பல் வலி நீங்கும்.

No comments: