Pages

Wednesday, April 15, 2015

கரித்துணி சுத்தம் ரொம்ப முக்கியம்!

kitchen cleaning cloth க்கான பட முடிவு

சமையலறை என்றதுமே, தீர்ந்துபோன காஸ் சிலிண்டருக்கு, முன்கூட்டியே புக் செய்வதும், விலைவாசி உயர்வால் வாங்க மறுக்கும் காய்கறிகள் குறித்தும்தான், எல்லோருக்கும் நினைவிற்கு வரும். நாள் முழுவதும் பெண்கள் கையிடுக்கில் பற்றிக்கொண்டேயிருக்கும் டவல்களை பற்றி, யாரும் பெரிதாக கவலைப்படுவதாய் தெரியவில்லை.

சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் மிகவும் முக்கியமானதும், எளிதில் அசுத்தமடைந்து, கெட்ட நாற்றத்தை அடைவதும் இந்த கரித்துணிதான். இவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காவிடில், பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எப்படியெல்லாம் சமையலறை டவல்களை, சுத்தமாக பராமரிப்பது என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. டவலை சுத்தப்படுத்துவதற்கு, நல்ல தரமான சலவைத் தூளை உபயோகிக்க வேண்டும் என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். நுண்ணுயிரிகளை கொல்லும் திறன் உள்ள டிடர்ஜன்ட்களை உபயோகிக்க வேண்டும்.

இவை பூஞ்சைகளின் உருவாக்கத்தை தடை செய்து, டவலில் உள்ள கெட்ட நாற்றத்தையும் வெளியேற்றுகிறது. டவலை துவைத்த பின், நன்கு உலர வைக்க வேண்டும். அப்படியே நீரோடு விட்டு விடக் கூடாது. இதனால், கிருமிகள் மீண்டும் அவற்றில் பெருகி விட வாய்ப்புள்ளது. பொதுவாக வெண்ணிற காட்டன் டவல்களை உபயோகிப்பது நல்லது. சிலர் அவை விரைவில் அழுக்காகி விடும் என நினைப்பர். அதில் உள்ள கறை, தெளிவாக தெரியும். கலர் துணிகளில் அழுக்கு எளிதில் தெரியாது. வெண்மையை எளிதில் வெளுத்து பளீச்சென்று ஆக்கி விடலாம். ஆனால் வண்ணத் துணிகள் கடுமையான சலவைக்கு பின், சாயம் போய் விடுகிறது.

சமையலறையில் பயன்படுத்தும் துண்டை, சுடு தண்ணீரால் சுத்தம் செய்வது கட்டாயமான ஒன்று. இதற்கு பிறகு ப்ளீச்சை உபயோகப்படுத்தலாம்.

இதிலிருந்து வரும் கெட்ட நாற்றத்தை போக்கி, புதிய வாசனையை அது உங்களுக்கு தரும். வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை, இதற்கு மாற்றாக உபயோகிக்கலாம். இதை சேர்த்து உபயோகிக்கக் கூடாது. சமையலறையில் பயன்படுத்தும் துண்டை துவைப்பதற்கு, நல்ல ஸ்பாட் அல்லது கறை தூய்மையாக்கியை உபயோகிக்கலாம். சோடியம் பை கார்பனேட்டில் இரவு முழுவதும் துணியை ஊற வைக்கவும்.

இந்த சேர்க்கை மணம், சுற்றி இருக்கும் காற்றோட்ட பகுதியில், கெட்ட வாசனையை ஏற்படுத்துகிறது. பிறகு இதை இயந்திரத்தில் துவைத்து, காயும் வரை தொங்க விட வேண்டும். இதற்கு பிறகு, சமையலறை துண்டு, நறுமணத்துடன் காணப்படும். சமையலறை துண்டை தினமும் துவைக்க வேண்டும். இரவு முழுவதும் காய வைக்க வேண்டும். இது கண்டிப்பாக நுண்ணிய உயிரினங்கள் மற்றும் வைரஸ்களை தூர தள்ளிவைக்க உதவுகிறது. இதன் மூலம், கரித்துணியை ஆரோக்கியமானதாகவும் சுத்தமானதாகவும் வைக்கலாம். 

உடல் எடையை குறைக்க இயற்கை முறைகள்

உடல் எடையை குறைக்க இயற்கை முறைகள்

உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.

* வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.

* ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.

* மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.

* ஒரு நாளைக்கு 10 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

* எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேளைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.

* பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

* பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 முதல் 10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.

* கீரைகளில் அதிகப்படியான வைட்டமின், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.

* கீரின் டீ உடல் எடையை குறைக்கும்.

* பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள். எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.

* தானியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா, ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

* சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதியாக குறைந்து விடும்.
 

கொள்ளு பொடி


 kollu podi க்கான பட முடிவு

தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்

துவரம் பருப்பு - கால் கப்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• கொள்ளுவை பத்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு வறுத்திடுங்கள். பின் துவரம் பருப்பை வறுக்க வேண்டும்.

• மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவைகளையும் வறுத்து கொள்ளவும்.

 ஆறிய பிறகு மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

•  இதை ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கலந்து இட்லி, தோசையுடன் சேர்த்து சுவையுங்கள். சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெயுடன் இந்த பொடியையும் கலந்து சாப்பிடலாம்.

உற்சாகமாக இருக்க குளிர்ந்த நீரில் குளிக்கலாம்



மனித உடலுக்கு தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும். உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான். தண்ணீரில் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடம் தண்ணீருக்கும் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைகளால் தேய்த்து விடுங்கள். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். 

Sunday, April 12, 2015

கோடை காலத்தில் முகத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசையை போக்க...


 oil skin க்கான பட முடிவு
சருமம் 3 வகையானது. உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று உள்ளது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால் முக அழகு கெடும். எண்ணெய் பசை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது. 

அவை பின்வருமாறு:

எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர் கடலைமாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஒட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். 

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

Wednesday, April 8, 2015

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

venthayam க்கான பட முடிவு

வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

* 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.

* இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

* வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

* தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

* வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அடுக்களையிலுள்ள வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ அனைவருக்கும் இயலும்.  

Tuesday, April 7, 2015

பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி


 பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி


இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது.

தற்போதை உணவு பழக்கவழக்கமும், தொழில்முறை மாற்றமும் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இப்பொழுது இளம்பெண்கள் வீட்டுவேலைகளில் அதிக ஆர்வம் காட்டாதமை இன்னொரு காரணம். உணவில் அதிக எண்ணெய் உள்ளமை, கட்டுக்கோப்பான உணவுப்பழக்கமின்மை போன்றவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது.

பெண்களிற்கு எப்பொழுதும் கொடியிடைதானே அழகு. இந்த திடீர் தொப்பைகளினால் பெண்கள் அடையும் சங்கடங்களும் அனேகம்.  உங்களுக்காகவே மிக எளிய, பயனுள்ள சில உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

• படம் Aஇல் காட்டியபடி மல்லாந்து நேராக படுக்கவும். பின்னர், இடதுகாலை நேராக மேல் நோக்கி தூக்கி, வலது கையினால் கால்நுனி விரலை தொட முயற்சிக்கவும். இதனை செய்யும் போது, அடிவயிறு இறுகும். சற்று சிரமத்தை கொடுக்கலாம். எனினும், உடலை உறுதியாக்கி முறைமாற்றி மாற்றி செய்யவும். ஆரம்பத்தில் 15 தடவைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

• அதிக பயனைத்தரும் சற்று கடினமான பயிற்சி இது. மல்லாந்து படுத்து, முதலில் புறங்கைகளை முதுகின் பின்னால் ஆதாரமாக கொடுத்து, கால்களையும், தலைப்பகுதியையும் மேல்நோக்கி தூக்கவும். இடுப்பு பகுதி மட்டுமே தரையில் பதிந்திருக்கட்டும். கால்களை 45 பாகையில் வைத்திருங்கள். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்தபடி கால்களை முன்பின்னாகவும், மேல் கீழாகவும் நகர்த்தவும்.

இடைவெளி விட்டுவிட்டு ஐந்து ஐந்து நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க முயலுங்கள். பின்னர், கைகளை பக்கவாட்டாக நகர்த்தி படிப்படியாக முகத்தை முன்னோக்கி நகர்த்துங்கள். இதேசமயத்தில் கால்களை படத்தில் உள்ளதைப் போல மடித்து முகத்தை நோக்கி கொண்டு வாருங்கள்.

இடுப்பு மட்டும் தரையில் படிந்திருக்க, வேறு ஆதாரங்கள் இல்லாமலேயே முழங்கால்களை முகத்தால் தொடும் இலங்கை நோக்கி முயலவும். ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் சில நாட்களின் பின்னர் சாத்தியமாகும். இந்த கடினமாக இருந்தாலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.