Pages

Tuesday, September 16, 2014

தூக்கத்தை தொலைக்க வைத்த கணினிகள்


இன்றைய உலகில், கம்யூட்டரின் பயன்பாடு அதிகம். கம்ப்யூட்டர் இல்லாத அலுவலகம் மட்டுமல்ல; வீடும் இல்லை. அதனால், ஒவ்வொருவரும் கம்ப்யூடர் முன் அதிக நேரம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அது நல்லதா; கெட்டதா என்பது குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்துள்ளனர். அதன்மூலம், அவர்கள் கண்டுபிடித்த விஷயம், தூக்கம் தொலைகிறது என்பது தான்.

அதாவது, கம்ப்யூடர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்பவர்களுக்கு, நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. கம்ப்யூடர் திரையில் இருந்து வெளிப்படும். அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரியவந்துள்ளது.

மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்தது. இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும். இதை மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. கம்ப்யூடர் திரையில் இருந்து வெளிப்படும், நீல நிற வெளிச்சம் மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மனிதனின் கண்கள், நீல நிறத்தை, பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது. என்றும், அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தைக் கொண்டு மெலட்டோனின் ஹார்மோன்,இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். அப்படியென்றால் எங்களுக்கு தூக்கமே வராதா? என்று கேட்பவர்களுக்கு, இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது ஒன்றே சிறந்த வழி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால், நம்மில் பலர் இதை விரும்புவதில்லை; மதுவை மட்டுமே உறக்கம், உற்சாகம் தரும் மருந்தாக கருதுகின்றனர்.

Sunday, September 14, 2014

வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி


வயிற்று சதை குறைய பல உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தாலும் இது விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இதை வீட்டில் வாங்கி வைத்தும் செய்யலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் நிபுணரின் அறிவுரையின் படி மட்டுமே தொடங்க வேண்டும்.  

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும்.

1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5 தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம்.

படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்


யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலின் ஒவ்வொரு பாகத்தின் அசைவையும் உணர முடியும்.

கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி பயிற்சி முறை:  

* நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன்னால் நீட்டிக்கொள்ளவும்.

* மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை அகட்டி, மார்பை விரிக்கவும். பின்பு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வரவும்.

* 15 முதல் 20 முறை மெதுவாகச் செய்ய வேண்டும்.

கைகளை நீட்டிச் செய்யும் சுவாசப் பயிற்சி செய்யும் முறை:

* நிமிர்ந்து நிற்கவும். 

* கை விரல்களை கோத்துக்கொண்டு நிற்க வேண்டும்.

* மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை முன்னே நீட்டவும்.

* உள்ளங்கைகள் வெளியே பார்த்தபடி, கைகளை இழுத்து நீட்டவும்.

* மூச்சை வெளியேவிட்டபடி, பழைய நிலைக்கு வரவும். 15 முதல் 20 முறை இதேபோல் செய்யவும். இதேபோல் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு கீழே கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்து, மேலே உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கீழே இறக்கவும்.

கணுக்கால்களை உயர்த்திச் செய்யும் சுவாசப் பயிற்சி செய்யும் முறை:

* நேராக நின்று மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். அதேநேரத்தில் குதிகால்களை உயர்த்தி கால் விரல்களில் நிற்கவும்.

* மெதுவாக மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழிறக்கும்போதே, குதிகால்களையும் கீழே வைத்து சமநிலைக்கு வரவும். 

- இந்த சுவாசப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கோபம், படபடப்பு குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.  

Friday, September 12, 2014

புதினா கீரையின் மகிமைகள்!


புதினா கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் பெருகும். ஏதாவது ஒரு காரணத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்தால், அப்போது புதினாக் கீரையை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று போகும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு புதினா கஷாயம் சிறந்த மருந்து. கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது மாதம் முதல் காலை நேரத்தில் வாந்தி ஏற்படும். சிலருக்கு ஆகாரம் உண்டவுடன் வாந்தி ஏற்படும்.

சில பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தொடர்ந்து வாந்தி இருக்கும். இம்மாதிரியான பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த  புதினாக் கீரை சிறந்த மருந்து. புதினாக் கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, அதை 3 அவுன்ஸ் நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, பின் நீரை தெளிய வைத்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் பொருமல், வாயுத் தொல்லை உள்ளிட்டவை குணமாகும்.

புதினாக்கீரையை துவையலாகவோ அல்லது பிற உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு குறைபாடு நீங்கும். புதினாக் கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் விலகும்.

தொண்டைப் புண், மூச்சுத் திணறல் நோய்களுக்கு கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப்போடுவதால் குணம் தெரியும். புதினா இலையை நன்கு காயவைத்து போடி செய்து அதில் எட்டுக்கு ஒரு பாகம் உப்பு சேர்த்து நன்கு இடித்து கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். இதனால் பல் சொத்தை, பல் வலிக்கு தீர்வு ஏற்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி


 நாவல் பழத்தின் கொட்டையை காயவைத்து அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, வெகுமூத்திரம் இவை இரண்டும் தீரும். நாள்பட சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆவாரப்பட்டை, அத்திப்பட்டை, மருதம் பட்டை, சரக்கொன்றை பட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து நாலுக்கொன்றாய் கஷாயம் வைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு சரியாகும். வெண்ணெயில் சுத்தமான குங்குமப்பூவைக் கலந்து உட்கொண்டு வந்தால் நாளடையில் நீரிழிவுநோய் சரியாகும்.

நீரிழிவு உள்ளவர்கள் இன்சுலின் போட்டுக்கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டு இந்த ஆரைக்கீரையை 40 நாட்கள் தவறாமல் சாப்பிட்டு வந்தால் போதும், நோய் சரியாகிவிடும். கொள்ளு முளைப்பயிறை நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் உணவாகப் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது

 கொத்தமல்லித் துவையல்

500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும்.  ரத்தம் விருத்தியடையும்.

நீரிழிவு அறிகுறி: : உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை. துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

Monday, September 8, 2014

தீங்கு விளைவிக்கும் குளிர்பானம்

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் பல்வேறு வேதிப் பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இதில் சேர்க்கப்படும் காபின், இனிப்புகள், அமிலங்கள்,நிறமிகள், கார்பன்டை ஆக்சைடு போன்றவை கெடுதல் ஏற்படுத்தும். இதில், வழக்கமான இனிப்பு பொருளான, சுக்ரோஸ் சேர்க்கப்படுவதில்லை. இதற்கு, பதிலாக தானியங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை குறைந்த கலோரி,கொண்ட இனிப்பு, சாக்ரீன் போன்ற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன.

வழக்கமான சர்க்கரையைவிட, இதில் பல நூறு மடங்கு தித்திப்பு உள்ளது. இந்த இனிப்புகள் கார்போஹைடிரேட் போன்று இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிரது. இதனால் கூடுதலாக கொழுப்பு சேருகிறது. உடல் பருமனாகி, நீரிழிவு, இதயநோய்கள் ஏற்படுகின்றன.

உயிர் காக்கும் உன்னத தானம்!




ரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது ரத்தத்தைப் பிறருக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி ரத்தம்வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
ரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாக அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. ரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

ரத்த தானம் செய்வதற்கு தேவையான தகுதிகள்: 

ரத்த தானம் செய்வோரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும். ரத்த செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள் .

இருபாலருக்கும் பொதுவான தகுதிகள் :


எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராக இருத்தல் கூடாது, கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது. கீழ் கண்ட நோய் தாக்கம் ஏற்ப்பட்டவர் எனின் ரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

பெண்கள் ரத்த தானம் செய்ய தேவையா தகுதிகள் :

மாதவிடாய் காலங்களில் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். வேறு எதாவது குறைப்பாட்டிற்காக சிகிச்சை பெறுபவர்களும் ரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடைபிடிக்க வேண்டியவை:

ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணி நேரம் ஆகியிருத்தல் அவசியம். புகை பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின் , புகை பிடித்த பின்னர் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரத்த தானம் செய்வது நல்லது. ரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். ரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும்.