Pages

Showing posts with label நீரிழிவு அறிகுறி. Show all posts
Showing posts with label நீரிழிவு அறிகுறி. Show all posts

Friday, September 12, 2014

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி


 நாவல் பழத்தின் கொட்டையை காயவைத்து அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, வெகுமூத்திரம் இவை இரண்டும் தீரும். நாள்பட சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆவாரப்பட்டை, அத்திப்பட்டை, மருதம் பட்டை, சரக்கொன்றை பட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து நாலுக்கொன்றாய் கஷாயம் வைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு சரியாகும். வெண்ணெயில் சுத்தமான குங்குமப்பூவைக் கலந்து உட்கொண்டு வந்தால் நாளடையில் நீரிழிவுநோய் சரியாகும்.

நீரிழிவு உள்ளவர்கள் இன்சுலின் போட்டுக்கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டு இந்த ஆரைக்கீரையை 40 நாட்கள் தவறாமல் சாப்பிட்டு வந்தால் போதும், நோய் சரியாகிவிடும். கொள்ளு முளைப்பயிறை நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் உணவாகப் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது

 கொத்தமல்லித் துவையல்

500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும்.  ரத்தம் விருத்தியடையும்.

நீரிழிவு அறிகுறி: : உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை. துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.