Pages

Monday, September 8, 2014

தீங்கு விளைவிக்கும் குளிர்பானம்

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் பல்வேறு வேதிப் பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இதில் சேர்க்கப்படும் காபின், இனிப்புகள், அமிலங்கள்,நிறமிகள், கார்பன்டை ஆக்சைடு போன்றவை கெடுதல் ஏற்படுத்தும். இதில், வழக்கமான இனிப்பு பொருளான, சுக்ரோஸ் சேர்க்கப்படுவதில்லை. இதற்கு, பதிலாக தானியங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை குறைந்த கலோரி,கொண்ட இனிப்பு, சாக்ரீன் போன்ற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன.

வழக்கமான சர்க்கரையைவிட, இதில் பல நூறு மடங்கு தித்திப்பு உள்ளது. இந்த இனிப்புகள் கார்போஹைடிரேட் போன்று இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிரது. இதனால் கூடுதலாக கொழுப்பு சேருகிறது. உடல் பருமனாகி, நீரிழிவு, இதயநோய்கள் ஏற்படுகின்றன.

No comments: