Pages

Sunday, September 14, 2014

படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்


யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும். இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலின் ஒவ்வொரு பாகத்தின் அசைவையும் உணர முடியும்.

கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி பயிற்சி முறை:  

* நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன்னால் நீட்டிக்கொள்ளவும்.

* மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை அகட்டி, மார்பை விரிக்கவும். பின்பு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வரவும்.

* 15 முதல் 20 முறை மெதுவாகச் செய்ய வேண்டும்.

கைகளை நீட்டிச் செய்யும் சுவாசப் பயிற்சி செய்யும் முறை:

* நிமிர்ந்து நிற்கவும். 

* கை விரல்களை கோத்துக்கொண்டு நிற்க வேண்டும்.

* மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை முன்னே நீட்டவும்.

* உள்ளங்கைகள் வெளியே பார்த்தபடி, கைகளை இழுத்து நீட்டவும்.

* மூச்சை வெளியேவிட்டபடி, பழைய நிலைக்கு வரவும். 15 முதல் 20 முறை இதேபோல் செய்யவும். இதேபோல் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு கீழே கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்து, மேலே உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கீழே இறக்கவும்.

கணுக்கால்களை உயர்த்திச் செய்யும் சுவாசப் பயிற்சி செய்யும் முறை:

* நேராக நின்று மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். அதேநேரத்தில் குதிகால்களை உயர்த்தி கால் விரல்களில் நிற்கவும்.

* மெதுவாக மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழிறக்கும்போதே, குதிகால்களையும் கீழே வைத்து சமநிலைக்கு வரவும். 

- இந்த சுவாசப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கோபம், படபடப்பு குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.  

Friday, September 12, 2014

புதினா கீரையின் மகிமைகள்!


புதினா கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் பெருகும். ஏதாவது ஒரு காரணத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருந்தால், அப்போது புதினாக் கீரையை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று போகும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு புதினா கஷாயம் சிறந்த மருந்து. கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது மாதம் முதல் காலை நேரத்தில் வாந்தி ஏற்படும். சிலருக்கு ஆகாரம் உண்டவுடன் வாந்தி ஏற்படும்.

சில பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தொடர்ந்து வாந்தி இருக்கும். இம்மாதிரியான பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த  புதினாக் கீரை சிறந்த மருந்து. புதினாக் கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, அதை 3 அவுன்ஸ் நீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, பின் நீரை தெளிய வைத்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் பொருமல், வாயுத் தொல்லை உள்ளிட்டவை குணமாகும்.

புதினாக்கீரையை துவையலாகவோ அல்லது பிற உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு குறைபாடு நீங்கும். புதினாக் கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் விலகும்.

தொண்டைப் புண், மூச்சுத் திணறல் நோய்களுக்கு கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப்போடுவதால் குணம் தெரியும். புதினா இலையை நன்கு காயவைத்து போடி செய்து அதில் எட்டுக்கு ஒரு பாகம் உப்பு சேர்த்து நன்கு இடித்து கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். இதனால் பல் சொத்தை, பல் வலிக்கு தீர்வு ஏற்படும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி


 நாவல் பழத்தின் கொட்டையை காயவைத்து அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, வெகுமூத்திரம் இவை இரண்டும் தீரும். நாள்பட சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆவாரப்பட்டை, அத்திப்பட்டை, மருதம் பட்டை, சரக்கொன்றை பட்டை, ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து நாலுக்கொன்றாய் கஷாயம் வைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு சரியாகும். வெண்ணெயில் சுத்தமான குங்குமப்பூவைக் கலந்து உட்கொண்டு வந்தால் நாளடையில் நீரிழிவுநோய் சரியாகும்.

நீரிழிவு உள்ளவர்கள் இன்சுலின் போட்டுக்கொள்வதை அடியோடு நிறுத்திவிட்டு இந்த ஆரைக்கீரையை 40 நாட்கள் தவறாமல் சாப்பிட்டு வந்தால் போதும், நோய் சரியாகிவிடும். கொள்ளு முளைப்பயிறை நன்றாக அலசி, நீர் சேர்த்து முளைக்கவிட்டுப் உணவாகப் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அதிக உடல்சூடு, தொப்பை, கெட்ட கொலஸ்ட்ரால், நீரழிவு நோய், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு கொள்ளு முளைப்பயறு மிகவும் நல்லது

 கொத்தமல்லித் துவையல்

500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும்.  ரத்தம் விருத்தியடையும்.

நீரிழிவு அறிகுறி: : உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை. துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

Monday, September 8, 2014

தீங்கு விளைவிக்கும் குளிர்பானம்

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் பல்வேறு வேதிப் பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இதில் சேர்க்கப்படும் காபின், இனிப்புகள், அமிலங்கள்,நிறமிகள், கார்பன்டை ஆக்சைடு போன்றவை கெடுதல் ஏற்படுத்தும். இதில், வழக்கமான இனிப்பு பொருளான, சுக்ரோஸ் சேர்க்கப்படுவதில்லை. இதற்கு, பதிலாக தானியங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை குறைந்த கலோரி,கொண்ட இனிப்பு, சாக்ரீன் போன்ற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன.

வழக்கமான சர்க்கரையைவிட, இதில் பல நூறு மடங்கு தித்திப்பு உள்ளது. இந்த இனிப்புகள் கார்போஹைடிரேட் போன்று இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிரது. இதனால் கூடுதலாக கொழுப்பு சேருகிறது. உடல் பருமனாகி, நீரிழிவு, இதயநோய்கள் ஏற்படுகின்றன.

உயிர் காக்கும் உன்னத தானம்!




ரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது ரத்தத்தைப் பிறருக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி ரத்தம்வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
ரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாக அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. ரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

ரத்த தானம் செய்வதற்கு தேவையான தகுதிகள்: 

ரத்த தானம் செய்வோரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும். ரத்த செய்வோரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள் .

இருபாலருக்கும் பொதுவான தகுதிகள் :


எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராக இருத்தல் கூடாது, கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது. கீழ் கண்ட நோய் தாக்கம் ஏற்ப்பட்டவர் எனின் ரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

பெண்கள் ரத்த தானம் செய்ய தேவையா தகுதிகள் :

மாதவிடாய் காலங்களில் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். வேறு எதாவது குறைப்பாட்டிற்காக சிகிச்சை பெறுபவர்களும் ரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடைபிடிக்க வேண்டியவை:

ரத்த தானம் செய்ய விரும்புவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணி நேரம் ஆகியிருத்தல் அவசியம். புகை பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின் , புகை பிடித்த பின்னர் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரத்த தானம் செய்வது நல்லது. ரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். ரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே ரத்த தானம் செய்ய வேண்டும்.

Sunday, September 7, 2014

இனிது இனிது வாழ்தல் இனிது

ஜார்ஜ் வாஷிங்டன் பற்றிய பிரபல கதை ஒன்று இன்றும் அமெரிக்காவில் பிரபலம். வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்திருக்கிறார். அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி. மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா... அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.  

செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா எனக்குக் கிடைச்சிருக்கிற சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசினதுல எனக்குப் பெரிய சந்தோஷம்...” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது. அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய விஷயத்துக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்.

அமெரிக்காவில் இன்றும் பிரபலமாக சொல்லப்படுகிற கதை இது. உண்மையென நிரூபிக்கப்படாத கதை என்றாலும், பிள்ளைகளுக்கு நேர்மையைப் போதிக்க, அங்கே அனேக பெற்றோரும் இந்தக் கதையைச் சொல்லியே வளர்ப்பார்கள். நேர்மை என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. பல நல்ல மனிதர்களும் வாழ்க்கையில் வழுக்கி விழக் காரணமே நேர்மையில் சறுக்கியது தான். ஒரு காலத்தில் பெரிய தியாகிகளாகஅறியப்பட்டவர்களாக, பல லட்சியங்களை சுமந்தவர்களாக இருந்த பலரும், ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவற்றிலிருந்து நகர்ந்து, ‘நேர்மை அத்தனை முக்கியமில்லை’ என்கிற முடிவுக்கு வந்ததால், சமூகக் குற்றங்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொண்ட கதைகளைக் கேள்விப்படுகிறோம்.

நேர்மையிலிருந்து பிறழ்கிற இந்த குணம், குடும்பங்களில் - தம்பதிக்குள் சர்வசாதாரணமாக நடக்கிற ஒன்று. கணவனும் மனைவியும் நேர்மையுடன் வாழும் போது, அவர்களுக்குள் பரஸ்பர நெருக்கமும் மரியாதையும் கூடும். இருவரில் யாரேனும் ஒருவர் அதிலிருந்து விலகும் போது இந்த இரண்டும் கெட்டுப் போகும். கணவர் பல சந்தர்ப்பங்களில் மனைவியிடம் பொய் சொல்லியிருப்பார். மனைவிக்கும் அப்படி கணவரிடம் பொய் சொல்ல வேண்டிய தருணம் ஒன்று வரும். ‘ஒரே ஒரு பொய்தானே... அவர் நம்மகிட்ட சொல்லாத பொய்யா?’ என்கிற நினைப்பில் அவரும் பொய் சொல்லப் பழகுவார். அது போகப் போக ஒரு பழக்கமாகவே மாறும். உண்மையை சொல்ல நிறைய வாய்ப்புகள் இருந்தாலுமே, ‘எவ்வளவு தூரம் பொய் சொல்ல முடியும் எனப் பார்ப்போமே’ என்று பார்ப்பதற்காகவாவது அப்படிச் செய்யத் தூண்டும். ஒருநாள் தம்பதிக்குள் ஒரு பிரச்னை பூதாகரமாக வெடித்துக் கிளம்பும் போது, இருவரும் ஒருவருக்கொருவர் நேர்மையின்றி நடந்து கொண்டது தெரிய வரும். ‘நீ என்னை ஏமாத்திட்டே...’ என்கிற பேச்சு எழும். இருவருமே அந்த நேர்மையின்மைக்குப் பல வருடங்களாகப் பழகியிருப்பார்கள் என்பதுதான் உண்மை. 

சரி... நேர்மையற்றவர்களை எப்படி அடையாளம் காண்பது?

♦ நேர்மை தவறி நடப்பவர்கள் எப்போதுமே தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவரையே காரணம் காட்டுவார்கள். சூழலைக் குறை சொல்வார்கள். எதற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பு செய்தது உறுதி செய்யப்பட்டாலுமே, அதன் பின்னணியில் உள்ள தன் உள்நோக்கம் சரிதான் என விவாதம் செய்வார்கள்.

♦ ஒழுக்கத்தையும் நேர்மையையும் பற்றி அடுத்தவருக்கு போதனை செய்வார்கள். ஆனால்,  அவற்றை மீறியே நடப்பார்கள். தான் தன் வாழ்க்கைத்துணையை விட எப்போதும், எல்லா விதங்களிலும் மேல் என நம்புவார்கள். நேர்மையாக இருப்பதென்பது முட்டாள்களின் அடையாளம் என நினைப்பார்கள்.

♦ நேர்மையான நல்ல மனிதர்கள் எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்பும், ‘என் தகுதிக்கு இந்தச் செயலைச் செய்யலாமா?’ எனக் கேட்பார்கள்.  நேர்மையற்றவர்கள் என்றால், ‘இந்தத் தவறை நான் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியுமா?’ எனக் கேட்பார்கள். முடியும் எனத் தெரிந்தால், அந்தத் தவறை செய்யத் தயங்க மாட்டார்கள். கணவன் - மனைவிக்குள்ளும் இதுவே நடக்கிறது. ‘நான் செய்வது சரியா?’ எனக் கேட்கிற துணையைவிட, ‘இதிலிருந்து தப்பித்து விடுவேனா?’ என யோசிக்கிறவரே அதிகமாக இருக்கிறார்கள்.

♦ சின்னச் சின்ன பொய்கள் தீங்கற்றவை என நினைப்பார்கள். அப்படி சின்னதாக பொய் சொல்லிப் பழகுகிறவர்கள், தொடர்ச்சியாக அடுத்தடுத்த நேர்மையற்ற காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். திருட்டு, குடி, வாழ்க்கைத்துணை அல்லாத வேறொரு நபருடன் உறவு, போதைப் பழக்கம் என அந்தத் தொடர்ச்சி எல்லைகள் மீறிப் போகலாம். துணைக்குத் தெரியாத வரையில் தப்பித்துக் கொண்டிருப்பவர்கள், ஒரு நாள் தெரிய வரும் போது, அதை மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகமாகப் பார்த்து, நிரந்தரப் பிரிவு வரை போவார்கள்.நேர்மையற்ற வாழ்க்கையில் விழுந்து விடாமலிருக்க என்ன செய்யலாம்?

♦ நமக்கு நாமே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது. துணையிடம் சின்ன பொய்யைக் கூட சொல்வதில்லை என்கிற அந்த உறுதியான ஒப்பந்தம், நிச்சயம் தவறு செய்யத் தூண்டாது.

♦ நேர்மையற்று நடக்கிற துணையிடம், தன் அதிருப்தியை கோபப்படாமலும் அதே நேரம் தெளிவாகவும் கண்டிப்பாகவும் வெளிப்படுத்துவது. உதாரணத்துக்கு ‘உன்னுடைய நேர்மையற்ற செயலை நீ தொடர்ந்தால், உறவைத் துண்டித்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கக் கூட நான் தயங்க மாட்டேன்’ எனச் சொல்லி வைக்கலாம்.
 

♦ நேர்மையாக இருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும் என நம்பலாம்.

♦ பொய்யை நியாயப்படுத்த முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். துணையிடமிருந்து தப்பிக்க, பொய்யை மறைக்கவோ, நியாயப்படுத்தவோ செய்கிற முயற்சிகள், ஆரம்பத்தில் எளிதாக இருந்தாலும், போகப் போக கணவன் அல்லது மனைவிக்கு தன் துணையின் மீதான நம்பிக்கையின்மையை வளர்க்கும்.

♦ தவறுகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ பொய்யை சொல்லி சிக்கலை ஏற்படுத்தி விட்டீர்களா? அதை ஏற்றுக் கொண்டு, ‘எதிர்காலத்தில் அந்தத் தவறைத் தொடரவே மாட்டேன்’ என துணைக்கு உறுதியளியுங்கள். இதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். எல்லோருக்கும் சாத்தியமாகாதது. பழகிக் கொண்டாலோ, இந்த மனப்போக்கானது, துணையிடம் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வளர்த்து விடும்.

♦ ‘நேர்மையாக இருந்தால் பிழைக்கவே முடியாது’ என்பது அதை

கோட்டை விடுகிற பலருடைய வாதம். உண்மையில் நேர்மையின்மை தான் ஒருவரின் வாழ்க்கையையே நாசம் செய்யக்கூடியது. பணம், புகழ், வசதிக்கு ஆசைப்பட்டு, நேர்மையின்மையைப் புறந்தள்ளி விட்டு, பிறகு வாழ்க்கையை இழந்து நிற்கிற எத்தனையோ நடிகைகளைப் பற்றியும் தற்கொலை முடிவு வரை போகிற அவலத்தையும் அடிக்கடி கேள்விப்படுகிறோமில்லையா...நேர்மையின்மை என்கிற காரணத்தினால்தான் அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் இரண்டே வருடங்களில் முடிவுக்கு வருகின்றன. நேர்மையாக வாழ்வதென்பதை ஒரு சுவாரஸ்யமான சவால் என்றே சொல்ல லாம். இதுவரை எப்படியோ.... இனி நேர்மையாக வாழ்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்றால், செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உங்களை நீங்களே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

♦ நான் நேர்மையாக இந்தக் காரியத்தைச் செய்கிறேனா?

♦ நான் செய்கிற இந்த விஷயம் யாரையாவது காயப்படுத்துமா? யாருக்காவது உதவுமா?

♦ என்னுடைய தேர்வு எனக்கு மட்டுமே அமைதியையும் சந்தோஷத்தையும் தருமா? என்னைச் சார்ந்தவர்களுக்கும் தருமா? இப்படி சுய பரிசீலனை செய்து கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கப் பழகினால் நேர்மை உங்களுக்கு நட்பாகும். மகிழ்ச்சி என்பது நமக்குக் கிடைக்கிற பரிசல்ல... அது நாம் செய்கிற செயல்களின் விளைவு. துன்பம் என்பதும் நமக்கான தண்டனையல்ல... அதுவும் நமது செயல்களின் விளைவுதான். மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், நேர்மையாக நடந்து கொள்ளப் பழகுவதுதான் ஒரே வழி. அது உங்கள் கைகளில்தான் உள்ளது. 

கண்களுக்கான யோகா பயிற்சிகள்

பல மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி செய்பவர்கள், அதிக நேரம் டிவி பார்ப்பவர்களுக்கு என் சிற பிரத்யேக யோகா பயிற்சிகள் உள்ளன. இந்த யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் சோர்வை நீக்கலாம். தினமும் காலை நேரத்தில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் இந்த யோகா பயிற்சிகளையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

1. பயிற்சியை தொடங்கும் முன் வசதியாக விரிப்பில் அமர்ந்து இரு கண்களையும் இறுக்கமாக மூடவும். எவ்வளவு இறுக்கமாக மூட முடியுமோ அவ்வளவு இறுக்கமாக மூடவும். சில நொடிகளுக்கு பிறகு கண்களை முடிந்தவரை நன்கு திறக்கவும். பின்னர் கண்களை 5 முறை சாதாரணமாக மூடி, மூடி திறக்கவும். பின்னர் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடி சில நொடிகள் கழித்து திறக்கவும்.  

2.கண்களை மூடி ஒரு நிமிடம் ஆழமாக மூச்சுவிட வேண்டும். பின்னர் கண்களை திறந்து எதிரே இருக்கும் பொருளை கூர்மையாக பார்க்கவும். பின்னர் ஆழமாக மூச்சு விட்ட படி கண்களை மூடவும். அப்போது எதிரே இருக்கும் பொருளை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். இது கண்களின் சோர்வை நீக்கவும், கவனத்தை குவிக்கவும் உதவும் பயிற்சியாகும்.

3. கண் இமைகளை மூடி விழிகளை சுழற்றவும். முதலில் வலமிருந்து இடமாக 5 முறை சுழற்றவும். பின்னர் எதிர் திசையில் 5 முறை சுழற்றவும். பின்னர் 5 முறை கண்களை திறந்து மூடவும். 

4. கண்களை திறந்து வைத்துக் கொண்டு வசதியாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும். பின்னர் தலையை அசைக்காமல் கண்களால் எவ்வளவு தூரம் மேலே பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கவும். சில நொடிகள் இது போல் பார்க்கவும். பின்னர் இது போல் கீழே பார்க்கவும், இது போல் வலது, இடது, மூக்கின் நுனிகளை பார்க்கவும். ஒவ்வொரு கோணத்திலும் சில நொடிகள் பார்த்து விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும். இது போல் 10 முறை செய்யவும்.

5. கைகளை முன்புறமாக நீட்டவும். கை விரல்களை மடக்கி கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்கவும். இப்போது கைவிரலை கண்களுக்கு மிக அருகில் கொண்டு வரவும். பின் பின்னோக்கி செல்லவும். இவ்வாறு விரல்களை முன்னும் பின்னும் கொண்டு செல்லும் போது கண்கள் கட்டை விரலை பார்த்தபடியே இருக்க வேண்டும். இவ்வாறு 15 முறை செய்யவும்.
 6. கடைசியாக இரு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஒன்று தேய்க்கவும். பின்னர் சூடான உள்ளங்கைகளை மூடிய கண்களின் மீது பொத்தி வைக்கவும். கண்களுக்குள் இதமான வெப்பம் பரவும். பின்னர் கண்களை திறக்கவும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கண் தசைகளும், பார்வையும் பலமடையும்.