Pages

Showing posts with label உடல் பருமன். Show all posts
Showing posts with label உடல் பருமன். Show all posts

Wednesday, May 28, 2014

முதுகு வலி முற்றிலும் மறைய!

இன்று அவசரகதியில் இயங்கும் வாழ்க்கையின் காரணமாக அனேக
மக்களுக்கு முதுகுப்புறத்திலும், தண்டுவடத்திலும் வலி, அல்லது பல நோய்கள் தோன்றி அல்லல்படுத்துகின்றன. மருத்துவரை நாடிப்போய் சிகிச்சை பெற்றாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை, தொடர்கின்றன. கழுத்தில், முதுகில் தாக்கும் நோய்கள் பலவகைப்படுகின்றன.

Arthritis (மூட்டுவலி, வீக்கம்), Spondylosis (ஸ்பான்டிலோசிஸ்), Rheumatism, (ருமாடிசம்), Fibrasis (கட்டி) Slip disc (டிஸ்க் மற்றும் பல வெளிவருதல் தூலகருக்கு இவற்றில் தோன்றும் வலி தோள்களுக்கு (ARMS), பரவினால் அதற்குப் பெயர் Neuritis, Neuralgia, தண்டுவடத்துடன் வயிற்றினுள் இருக்கும் பகுதிகள் நுண்ணிய நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகையால் தண்டுவடத்திற்கு ஏற்படும் பாதிப்பு வயிற்றின் பகுதிகளை, பொதுவாக உடலையே பாதிக்கிறது. (உடம்பு) (ரத்தநாளம் குறுகுதல், தடை ஏத்படல்) (Cervical Stenosis).
தண்டுவடத்தில் ஏற்படும் நோய்கள் தொழிலில் செயல்பாட்டினை மிகவும் பாதிக்கும். மேற்கொண்டு தற்கால நோய்கள் தாக்க வழிவகுக்கும். இதை தடுப்பதற்கு வேண்டிய முயற்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Cervical Spondylosis மிகவும் ஆபத்தானது. சிறிய காயம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் சதைகள் பலவீனப்பட்டு. தசைநார்க்கும் சேர்ந்து பலமிழந்தால், எலும்புக்கும் நலிவடையத் தொடங்கும். அனேகர் நன்கு நடைப்பயிற்சி செய்யலாம். உடல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இருப்பினும் அவர்களுக்கு முதுகுவலி வரலாம். காரணம் தான் என்ன? அவர்கள் முதுகு சம்பந்தப்பட்ட தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அல்லது முதுகுவலிக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதனோடு தொடர்புள்ள வலுவற்ற தசைகளை வலுப்படுத்த முயற்சியெடுப்பதில்லை.

சிறிய வலி தலைவலி வந்தால் கூட மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். தண்டுவடத்தை நன்கு சோதித்து தகுந்த சிகிச்சை பெறத் தவறினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எனவே அவை சம்பந்தப்பட்ட விபரங்களை தெரிந்து கொண்டால் எச்சரிக்கையுடன் நாம் செயல்பட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

முதுகுவலிக்கான காரணங்கள்
ஏற்கனவே கூறியபடி தண்டுவடம் ஒரு முக்கியமான உறுப்பாகும். அவ்வுறுப்பும், தசைகளும் நன்கு செயல்பட்டால் தான் பிரச்சனைகள் எழா. பிரச்சனைகளின் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏறும் வயது - வலுவிழக்கும் மூட்டுகள்
முதுகுவலிக்கு முக்கியமான காரணம் உடம்பிலுள்ள எலும்புகள், மூட்டுகள் வயதாகும் போது தங்கள் செயல்திறமையை இழக்கின்றன. தண்டுவடத்திலுள்ள மூட்டுகள் (Joints) வயதாக தேய்ந்து உடையலாம் இளம்வயதில் கூட இது நேரலாம். ஆனால் ஓரிரண்டு இடங்களில் மட்டும் இம்மாதிரி பாதிப்பு இருக்கும்.

தண்டுவட தகடு தேயலாம்
தண்டுவடத்தில் உள்ள தகடுகள் (Disc) தேய்ந்து, விலகியிருக்கலாம் இதன் காரணமாக முதுகுவலி வரலாம். ஆண்களிடம் இப்பாதிப்பு அதிகமாகயிருக்கும். கடினமான வேலை, உடம்பை வருத்தி பணி புரிந்தாலோ முதுகுத்தண்டு பாதிக்கப்படும். அங்கு வரக்கூடிய நரம்புகளை அழுத்தி வலியை உண்டாக்கும். இதை சரியான விதத்தில் கவனிக்கத் தவறினால் கழுத்து தொங்க நேரிடும்.

மூட்டுகள் பாதிக்கப்படுதல்
தண்டுவடத்திலுள்ள மூட்டுகள் தேய்ந்துவிட்டால் அவற்றுள் செல்லும் நரம்புகள் குறைந்து காணப்படும். இதனால் வலி தோன்றும்.

தசைநார்கள் பாதிக்கப்படுதல்
முதுகுப்புறத்திலுள்ள எலும்புகளின் இடையுள்ள தசைகற்கள் இளகும் தன்மையை இழந்தால் (Stiff) மிகவும் மிருதுவாகயிருந்தால், முதுகில் வலி தோன்றும். இவ்வலியை கழுத்திலும் உணரலாம்.

வயிற்றுப் புண்ணும், அஜீரணமும்
அஜீரணக் கோளாறினாலும், வயிற்றுப் புண்ணாலும் ஏற்படக் கூடிய வலியானது வயிற்றின் மேற்புறத்திலுள்ள பகுதியை பாதிக்கும் சில சமயம் முதுகின் பின்புறத்தையும் பாதித்து வலி தோன்றலாம். இதைத் தவிர்க்க வாழ்க்கை வாழும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு, மன உளைச்சலைக் கட்டுப்படுத்தல், புகையிலை, ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்த்தல் உடம்பை ஆரோக்கியத்தில் வைக்கும்.

திடீரென்று வளைந்தாலோ, குனிந்தாலோ தசைநார்கள் கிழிய நேரிடலாம். டிஸ்க் பாதிக்கப்படலாம். அதிகமாக தசைநார்கள் கிழிந்தால், டிஸ்க் பழுதுபட்டு வெளியே நீட்டிக் கொள்ள நேரிடும். இதன் காரணமாக வலியெடுக்கும்.

தேகத்தை ஆக்கப்படுத்தும் பயிற்சியின்மை
Warm - up Exercise எனப்படும் தேகத்தை உற்சாகப்படுத்தும் பயிற்சியை முதலில் மேற்கொள்ளாமல், திடீரென்று உடற்பயிற்சி செய்தால், தசைகளுக்கு ஊறு நேரும். Gymnastick என்று திடீரென்று போகாமல் விட்டுவிடுதல் தசைகளைப் பாதிக்கும். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை தகுந்த முன்னேற்பாடு பயிற்சியில்லாமல் விளையாட ஆரம்பித்தல் தசைகளைப் பாதிக்கும்.

கனமான பொருட்களை தூக்குதல்
கனமான பொருட்களை தூக்குதல் முதுகுத் தண்டைப் பாதிக்கும் ஏற்கனவே பழுதுபட்டிருந்தால், விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்.

உடல் பருமன்
அளவிற்கு மீறி உடல் பருமனாகயிருந்தால், முதுகுத்தண்டுக்கு அழுத்தம் அதிகப்படும். இதனால் பாதிப்பு லேசாக இருக்கும்.

நிற்கும் உட்காரும் விதம்
நிற்கும் பொழுதோ, உட்காரும் பொழுதோ சரியான படி நிமிர்ந்து, எல்லா எலும்பு மூட்டுகளும் நேர்கோட்டிலிருக்கும் வகையில் நின்று, உட்காரமலிருந்தால் நாட்கள் செல்லச் செல்ல பாதிப்பு ஏற்படும். சதைகள், மூட்டுகள், எலும்புகள் மிகவும் பழுதடைந்து வலியை ஏற்படுத்தும்.

விபத்தில் முதுகு உடைதல்
ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவர் கை, கால்களில் பாரிச வாயு வந்தது போல் செயலிழந்து காணப்பட்டால், அந்நபர் கழுத்தில், முதுகில் அடிபட்டு எலும்பு உடைபட்டிருக்க வேண்டுமென்பது தெரிந்து கொள்ள வேண்டும். உடனே எந்தவிதமான உடம்பசைவுயில்லாமல் பார்த்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எக்ஸ்ரேயெடுத்து தகுந்த சிகிச்சை தர வேண்டும். (அடிபட்டி நபரின் முதுகுத்தண்டு வளையாமல் லேசாக இருக்கும்படி பார்த்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்).

Friday, May 2, 2014

ப‌சி‌யி‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை

க‌றிவே‌ப்‌பிலை
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம். வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது.

ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும். க‌றிவே‌ப்‌பிலை, சு‌க்கு, ‌மிளகு, ‌தி‌ப்‌பி‌லி, காய‌ம், இ‌ந்து‌ப்பு சம அளவு எடு‌த்து பொடி செ‌ய்து, சுடுசாத‌த்‌தி‌ல் கல‌ந்து நெ‌ய் ‌வி‌ட்டு ‌பிசை‌ந்து சா‌ப்‌பிட ‌ப‌சி‌யி‌ன்மை,

உண‌வி‌ல் வெறு‌ப்பு, பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய் கும‌ட்ட‌ல் ஆ‌கியவை குணமாகு‌ம். குழ‌ந்தைகளு‌க்கு‌ம் இ‌ந்த சாத‌த்தை ‌சி‌றிய அள‌வி‌ல் கொடு‌த்து வரலா‌ம். க‌றிவே‌ப்‌பிலை ஈ‌ர்‌க்குட‌ன் சே‌ர்‌த்து இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து ‌கிரா‌ம்பு, ‌தி‌ப்‌பி‌லி பொடியை சே‌ர்‌த்து குழை‌த்து தர குழ‌ந்தைகளு‌க்கு உ‌ண்டாகு‌ம் வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ந‌ன்கு ப‌சியெடு‌க்கு‌ம்.

கறிவே‌ப்‌பிலை, ‌மிளகு, ‌சீரக‌ம், வெ‌ந்தய‌ம், சு‌ண்டை வ‌ற்ற‌ல், சூரண‌த்து உ‌ப்பு சே‌ர்‌த்து உ‌ண‌வி‌ல் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர ம‌ந்த‌ம் ‌நீ‌ங்‌கி ப‌சி உ‌ண்டாகு‌ம். க‌‌றிவே‌ப்‌பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செ‌ய்து ‌தினமு‌ம் உ‌ட்கொ‌ண்டு வர, செ‌ரியாமை, ப‌சி‌யி‌ன்மை, க‌ழி‌ச்ச‌ல் இவ‌ற்றை‌ப் போ‌க்கு‌ம்.

Tuesday, April 1, 2014

வியர்வையில் குளிக்கிறீர்களா?

வியர்வை
கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை.

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும்.

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!