Pages

Thursday, December 19, 2013

தனியா ஒதுக்காதீங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTNKKekN9KxBoHD4eKrVapwauDsVLSqsje-HjT0Txf87gofaAfz9H039y4GnlvJWktnSk35SMMZykMzv1xGWln8aS7UPA92NKLuUmrn-3xskL9Ex-EAbGJ4_M3kFfZnwFO74WjQhkGjYI/s320/Image+003.jpg
 

 எளிமையாக கிடைக்கக் கூடிய கறிவேப்பிலையை உணவில் சேர்க்கும் போது பலர் தனியே எடுத்து வைத்து  விடுகின்றனர். ஆனால் இது சிறந்த மருத்துவம் என்றால் மிகையல்ல. நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 இலை மாலையில் 10 இலையையும் பறித்து உடனேயே மென்று சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்து விடும்.

இளநரையை தடுக்க மட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உண்விலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இளநரை போகும். கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணையில் போட்டு கா
ய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இள நரை மாறும். வைட்டமின் 'ஏ','பி','பி2','சி' போன்ற உயிர் சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்பு, இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போதும் பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பர். இவர்கள் எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பர். இவர்களுக்கு சிறந்த மருந்தாக கருவேப்பிலை திகழ்கிறது.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மன நிலை மாறும். ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும். தவிர கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகிறது. இந்த கொழுப்புப் பொருட்கள் பெரும்பாலும் எண்ணையின் மூலம் அதிகம் உடலில் சேர்கிறது. ஒரு லிட்டர் எண்ணையில் 10 கருவேப்பிலை போட்டு கா
ய்ச்சி வடிகட்டினால் எண்ணையில் உள்ள கொழுப்புச்சத்து நீங்கும். 

சிலருக்கு உணவு உட்கொள்ளும் போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும். வயிற்றுப் போக்கு குணமாக கறிவேப்பிலை 20 கிராம், சீரகம் 5 கிராம், இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேலைகள் அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.

குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் கண் பார்வை தெளிவடையும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும். கை, கால் நடுக்கத்தைப் போக்கும். வீக்கம் கட்டிகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும்.

No comments: