Pages

Monday, December 2, 2013

அறிவாற்றல் தரும் உணவு வகைகள்

 நல்ல ஆரோக்கியமான குழந்தைகளால் மட்டுமே நல்ல விதமாக படித்து முன்னேற முடியும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தால் மட்டும் போதாது. அவர்களின் அறிவு வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காண வேண்டும்.

பால் மற்றும் பால் பொருட்களில் அறிவாற்றலை பெருக்கும் புரோடீன், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் 'டி' உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது நரம்பு மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயல்பட வைக்கிறது. இதனால் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வளர்ச்சியடைய செய்வதோடு, அவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குவதில் ஸ்ட்ராபெர்ரி, செச்ரி, அவுரி நெல்லி, நாவல் பழங்கள் சிறந்தவை. இவற்றில் ஆண்டி ஆக்சிடென்ட்  மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின் 'சி' சத்து உள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 சத்து, மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.


மூளையில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் செல்களில் கோலைன் சத்து செல் முக்கியமானது.  இது முட்டையில் அதிகம் உள்ளது. இதை குழந்தைகள் உண்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளை களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.
வைட்டமின் 'பி' மற்றும் குளுக்கோஸ் அதிகமுள்ள ஒட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் உண்பதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதோடு தினமும் ஏதாவது ஒரு தானியத்தை சேர்த்துக் கொண்டால் ரத்த ஓட்டத்தை சிர் செய்து மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.

மீன்களில் ஒமேகா 3 சத்து அதிகளவு உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற உணவு பொருட்களில் இருப்பதைவிட மீன்களில் அறிவு கூர்மைக்கு தேவையான சத்து அதிகளவு உள்ளது. இது தவிர காய்கறி, கீரை, கேரட், பீன்ஸ் போன்றவையும் குழந்தைகளின் அறிவுகூர்மையை அதிகரிக்கும்.

No comments: