Pages

Tuesday, December 3, 2013

வயிற்று பிரச்னை தீர்க்கும் புதினா


புதினா கீரையை அடிக்கடி உண்டு வந்தால், ரத்தம் விருந்தி அடையும். ஏதாவது ஒரு காரணத்தால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருந்தால், புதினா கீரையின் துவையல் நல்ல பலன் அளிக்கும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை குணமாக புதினா கஷாயம் நல்ல மருந்து. 

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, குமட்டல் வரும். சிலருக்கு இது பிரசவம் ஆகும் வரை நீடிக்கும்.இதை கட்டுப்படுத்த புதினா கீரை நல்ல மருந்து. புதினா கீரையை சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்து தெளிந்த நீரை பருகி வந்தால் வாந்தி, வாயு, வயிற்றுப்போக்கு நோய்கள் குணமாகும்.

புதினா கீரையை துவையல் அல்லது பிற உணவுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிலக்கு சீர்படும். இக்கீரையை சூப் செய்துக் குடித்து வந்தால் இதய நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தொண்டைப்புண் உள்ளவர்களுக்கு இக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் நல்ல குணம் தெரியும்.

புதினா கீரையை பற்பொடி தயார் செய்து தினமும் பல் தேய்த்தால் பல்வலி உள்ளிட்ட  நோய்கள் நீங்கும். மேற்கண்ட மருத்துவ முறைகளை அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று மேற்கொள்ளுவது நல்லது.

No comments: