Pages

Tuesday, December 3, 2013

முடி உதிர்வதை தடுக்கும் நெல்லிக்கனி



நெல்லிக்கனியை தினமும் பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. வசந்த காலத்தில் நெல்லிக்காய் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் 'சி'  சத்து நிறைந்து உள்ளது. நமது உடலில் தோல் பகுதியில் நோய் எதுவும் ஏற்படாமல் இருக்கு, வைட்டமின் சி சத்து அவசியம். 

அது நெல்லிக்கையில் அதிகளவு உள்ளது. சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். இது வைட்டமின் சி சத்து குறைவால் ஏற்படுகிறது. இக்குறை உள்ளவர்கள் நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஜாலதோஷத்திலிருந்து தப்பலாம்.

இது தவிர நெல்லிக்கையில் பாஸ்பரஸ், புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, மாவுசத்து, நார்ச்சத்து, வைட்டமின் 'ஏ' போன்ற சத்துக்களும் உள்ளன. நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியானது. இதை உண்பதால் சிறுநீர் நன்றாக பிரியும்.

பெண்களுக்கு கர்ப்பபை நோய்கள் குணமாகும். ரத்தம் தூய்மை அடையும். நெல்லிக்காயை உலர வைத்தாலும், வேக வைத்தாலும், குளிர வைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்து குறையாது. 

பொதுவாக நெல்லிக்காயை வாங்கியவுடன் அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சிறிது மஞ்சள் மற்றும் உப்பு போட்டு 5 அல்லது 1௦ நிமிடங்கள் கழித்து ஒரு நெல்லிக்காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் உடையும் அளவு இருக்கும். அதை உடனே இறக்கி வைத்து ஒரு பாட்டிலில் நீரோடு எடுத்து வைத்துக் கொண்டால் சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

தேவையான வெந்த நெல்லிக்காயை உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய், பச்சை மிளகாய், வெந்த நெல்லிக்காய் ஆகியவற்றை புளிக்காத தயிரில் சேர்த்து நெல்லிக்காய் பச்சடி தயார் செய்யலாம். நெல்லிக்காயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நான்கு மசித்துக் கொள்ள வேண்டும். 

ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு அரை கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல வரும் போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ்மில்க் எசன்ஸ்அல்லது ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை ஒரு அரைக்கரண்டி சேர்த்து சுடு ஆறியதும், காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு சப்பாத்தி, பிரட், தோசை, இட்லி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். இது உடம்புக்கு மிகவும் நல்லது.

நெல்லிக்காயை நிறைய வாங்கி வைத்து கொண்டு அதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். தலை குளிரும். கூந்தல் கருகருவென வளரும், முடிகள் வலுவாகும். பொடுகு தொந்தரவு, முடிஉதிர்தல் குறையும்.

No comments: