Pages

Friday, September 27, 2013

காலை உணவைத் தவிர்க்கலாமா?

முடிந்தவரை உணவைக் குறைத்தால் உடல் எடை குறையும் என்று பலரும் நம்புகிறார்கள். இதனால், தெரிந்தோ தெரியாமலோ காலை உணவைத் தவிர்த்தல் என்பது பலரும் செய்வதுதான்.

ஆனால், காலை உணவைத் தவிர்ப்பது என்பது பெரும் ஆபத்தில் கொண்டு விடும் என சமீபத்திய ஆய்வுகள் தெருவிக்கின்றன. கல்லை உணவைத் தவிர்ப்பதாலும், அதனால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும் உடல் பருமன், இதயக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்ற வழிவகுக்குமாம்.

காலை உணவைத் தவிர்ப்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் விரைவில் பலவீனம் அடைந்து, கலப்பாக உணர்வார்கள். இதனால், அவரவர் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். மதியம் உணவு வேலை எப்போது வரும் என்று காத்திருந்து மதியச் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கத் தோன்றும். அல்லது இடைவேளை நேரத்தில் பப்ஸ், போண்டா, வடை என்று சாப்பிட வைக்கும். இதனால் உடலில் உடனடியாக சர்க்கரை அளவு கூடும். இது பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கு வழி வகுக்கும்.

காலை உணவைத் தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவைத் தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவைத் தாமதமாக உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்களாய் இருப்பார்கள். இது இன்னும் சிக்கலை உண்டாக்கும். 

இரவு நேரத்தில் தாமதமாக உண்ணுபவர்களுக்கு இதயக் கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். காலை உணவைத் தவிர்த்தல், இரவு உணவைத் தாமதமாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.

இதனால், இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்துகிறதாம். உடலில் அதிகம் கொழுப்பு சேர்தல், உயர் ரத அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பளிகிறதாம். எனவே காலை உணவைத் தவிர்ப்பவர்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

No comments: