Pages

Wednesday, April 27, 2016

வாய் நாற்றமா? தீர்வு இருக்கு

காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைப்பது பல் துலக்குதலே. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், வாய் நாற்றத்தையும் தவிர்க்கும்.

பல் துலக்குவதன் நோக்கம்: 

பல் துலக்குவது வாயிலும், பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். பல் ஈறுகளில் இருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்கலும் சேர்ந்த கலவையே இந்த அழுக்கு. பல் துலக்கி இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளேயே இந்த அழுக்கு படியத் துவங்கும். இவை பற்களுக்கு மட்டுமில்லாமல், பல் ஈறுகளுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு பல் இழப்பிற்கும் காரணமாகிறது. எனவே தினமும் இருமுறை பல் துலக்குதலும், உணவு உண்டவுடன் வாய் கொப்பளிப்பதும் இன்றியமையாத ஒன்று. இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ பயன்படுத்தலாம்.

பல் துலக்கும் முறை:

பல் துலக்குவதற்கான நிலை, வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ளதை பொருத்து மாறுபடும்.

பெரியவர்கள்:

பல் துலக்கியின் குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பல் துவங்கி முன் பற்கள் வரை மூன்று மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின், வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும் அதே போல், கீழ் தாடையிலும் இடது, வலது, உள், வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.

இந்த சுழற்சியினை சுமார், 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் தேய்க்க வேண்டும். முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக 45 டிகிரி கோணத்தில் பிடித்து மேலும், கீழும் நகர்த்தி, உள்ளும், வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பகுதியில் மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதியில் பல் துலக்கியின் குச்சுகளை நன்றாக அழுத்திப் பிடித்து தேய்க்க வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று, முடித்து விடாமல் மறவாமல் நமது நாக்கின் புற பகுதியில் பல் துலக்கியால் முன்னும், பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்:

சிறார்களை பல் முற்றும் ஈறுகளில், பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். பச்சிளம் பல் முளைக்காத பாலகர்களுக்கும், பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுவது மிகவும் சிறந்தது. 

பிரஷ் முக்கியம்:

முருதுவான, கூர் முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய, பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர்முனை குச்சுகளை தவிர்ப்பது நல்லது. கடினமான, மற்றும் விரைப்பான குச்சுகை கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதபடுத்திவிடும்.

Tuesday, April 5, 2016

மழைக்காலத்தில் நுரையீரல் பத்திரம்


நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுக்காப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.


நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா, உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமிண்ட் உள்ளிட்ட தொழில் பணிபுரிவோருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.

நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இரண்டு வாரம் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடர வேண்டும்.

பனிகாலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, 'மாஸ்க்' அணிந்து  கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்
நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்க அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்ப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால் "கண்ட்ரோலர் " மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும். பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியம்.

உங்களுக்கு ஏற்ற காலணிகள்

நகை, உடைகள் வாங்குவதை போல செருப்புவாங்கும் போதும், அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இதுகால்களை அழகாக்குவதுடன் பாதங்களின் மென்மை தன்மையை அதிகரிக்கிறது. கால மாற்றத்திற்கு தகுந்தபடி செருப்பு அணிவதால், நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம் என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செருப்பு வாங்க கடைகளுக்கு செல்லும் போது, டிசைன்களை, குறி வைத்து தேடுவதை விட அளவு பொருத்தமாக இருக்கும் படியும் பார்த்துக் கொள்ளவேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து நான்கைந்து அடி நடந்து பார்த்துதான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணிய கூடாது.

விலை குறைந்த செருப்புகளை விட, விலைகுறைவான பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைந்தால் செருப்பின் ஆயுளும் குறையும். கால்களுக்கு பொருத்தமானதாகவும் இல்லாம அழகு கெட்டுவிடும்.

செருப்பு தரையில் வழுக்காமல், கிரிப் உள்ளபடி, அழுத்தம் இல்லாமலும், அதிக கணம் இல்லாமலும், மிருதுவாக இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ரப்பர் செருப்புகளை அணியக் கூடது. ஏனெனில் அது வழுக்குவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்துவிடும்.

வயதான பெண்களும், வாத நோய் உள்ளவர்களும் குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக பெண்களின் பாதங்கள் மிருதுவானது என்பதால், இறுக்கமான செருப்புகளையோ, ஷுக்களையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளைவிட, தோல் செருப்புகளும், ஷுக்கலுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு அடைவதோடு, அதிக வியர்வை வெளியேறி, கண் எரிச்சல் ஏற்படும். எனவே பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்ப்பது நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷுக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா என பார்த்து அணிய வேண்டும். செருப்பு மற்றும் ஷுக்களை அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால் செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது செருப்பில் இருக்கும் ஈரத்தன்மையும் நீங்கி விடும்.

உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும்

 உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும் என்பதற்காக, உணவை வெறுத்து பட்டினி கிடக்கக் கூடாது.

  * உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க, உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.

* நன்கு வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  சாப்பிட்டவுடன் ஒரு போதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டு முடிந்த பின், இரண்டு மணி நேரம் கழித்தே     படுக்கச் செல்ல வேண்டும்.


* குண்டானவர்கள், பால் சாப்பிடுவதை தவிர்த்து, ஆடை நீக்கிய பால், சூப், போன்றவற்றை பருகலாம்.

* எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

நண்பர்களிடம் பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, "டிவி' பார்த்துக் கொண்டோ உணவுப் பொருட்களை கொறிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்.

* கூல்டிரிங்ஸ், காபி, டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

செம்பட்டை முடியை கருமையாக்க!


*வறட்சியான, செம்பட்டை முடியை உடையவர்கள், ஆமணக்கு  எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* தலையில் தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால், நாளடைவில் செம்பட்டை சரியாகும்.

* நிலா ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.

* தலைக்கு குளிப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன், ஆமணக்கு எண்ணெய் தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.

* ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எலும்பு பாதிப்பா? உணவில் கவனம்

எலும்பு முறிவு, தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, குணமாகும் கால கட்டத்தில், உணவு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

கால்சியம் சத்து மிகுந்த பால் சார்ந்த உணவுகள், பச்சை இலை காய்கறிகள், கொட்டை வகைகள், பயிறு வகைகள் போன்றவை, நல்ல எலும்பை உருவாக்க உதவும்.


தவிர எலும்பு பாதிப்பு உள்ளவர்கள், சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவைகளை தவிர்த்து விட வேண்டும். வைட்டமின் 'டி' சத்து இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம். மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள், முட்டை போன்றவை, இதற்கு பேருதவியாக இருக்கும்.

மிகச் சூடான சூரிய ஒளி, கெடுதலை தரும். புரதச் சத்து உணவுகள், நல்ல சதையை உருவாகும். கொழுப்பு நீக்கிய அசைவ உணவுகளான சோயா உணவு வகைகள் நல்லது.

இதய பரிசோதனையில் இத்தனை வகைய...!


இதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய இன்று பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டதால், பலரை காப்பாற்றி விட முடிகிறது.

ஈ. சி. ஜி. (இதய மின் வரைபடம்): இதயம் சுருங்கும் போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுதும் பரவுகின்றன. இந்த மின் அலைகள் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. யில் மாறுபாடுகள் இல்லாமல் கூட இருக்கும்.

மார்பு எக்ஸ்ரே: இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையும் கண்டறியலாம்.

ரத்த பரிசோதனைகள்: அடிப்படையான ரத்த  பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் குறைபாடுகளையும் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.  
சிறப்பு ரத்த பரிசோதனைகள்: ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிய 'சி. பி. கே - எம். பி. (cpk -mv -creatine  phoshokinase myocardial band) என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் பச்ச்போகைநேஸ் என்ற என்சைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும். ட்ரோ போனின் 'டி பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான மாறுதல்களை உள்ளனவா என்பதை கண்டறிய உதவும்.

எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை : இதயத்தின் அமைப்பு, அதன் செயல்திறன், இதன் வாயிலாக கண்டு பிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றை கண்டுப்பிடித்துவிடலாம்.


டிரட்மில் பரிசோதனை: சில நோயாளிகள் இதயத்தில் உள்ள அடைப்புகளை, அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் இயந்திரத்தில் நோயாளியை நோயாளியை செயற்கையாக நடக்க வைத்து, இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை.

ஆஞ்சியோகிராம் பரிசோதனை: ரத்த குழாயில் ஏற்ப்பட்டுள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது. கை அல்லது தொடை பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனை குழாயை செலுத்தி, இதயத்துக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் செய்யப்படுகின்றது.

கதிர் இயக்கப் பரிசோதனை (நியூக்ளியர் ஸ்கேன் ):
இதய நோயாளிகளுக்கு கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களை கொடுத்து பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் இதய தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும்  முடியும். ரத்த குழாய் அடைப்பால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விடலாம்.