Pages

Saturday, March 12, 2016

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்


பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்சனையை தீர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

மருதாணி மற்றும் தயிரையும் கலந்து தலையில் தேய்த்து பின்பு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

வால் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

கழுத்தில் தெரியும் உங்கள் வயது


 கழுத்தில் தெரியும் உங்கள் வயது
பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கருத்து போயிருக்கும்.

இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும். முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக்கூடாது. கழுத்து பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும்.

இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது. கழுத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தூக்கலாக மேக்-அப் செய்துகொண்டால், முகத்திற்கு பொருத்தமற்றதாக கழுத்து காணப்படும். 

உங்கள் கழுத்து பளிச்சிட இதோ டிப்ஸ்:

கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். சிலருக்கு ஜீவனே இல்லாமல் இருக்கும். அவர்கள் முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வெயில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். தலைமுடியில் இருக்கும் எண்ணெய் பசைகூட கழுத்தில்பட்டு கருக்கவைத்துவிடும். இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம். வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும். சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும். சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். அவர்கள் கழுத்து மட்டும் நிறம் கம்மியாகி கருத்துப்போயிருக்கும். அதே போல் கவரிங் செயின் போடும் பெண்களுக்கும் கழுத்து கருப்பாகிவிடும். இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும்.

முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கருத்து போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும். முகத்துக்கு ஏற்ற அழகை கழுத்தும் பெற்றிருந்தால் மட்டுமே பெண்கள் முழு அழகுடன் திகழ முடியும். 

ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி

 ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி

‘ஹேர் டை’ எல்லாருக்குமே சரிப்பட்டு வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும், காப்பிய காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்து இருக்கிறார்கள்.

ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை. இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான ஹேர் டை’கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன்படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் ‘ஹேர் டை’களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம், எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும். இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பை தவிர்த்து மாற்று ‘ஹேர்டை’யை பயன்படுத்த வேண்டியதுதான்.

அலர்ஜி மாற்ற வேண்டுமே தவிர விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. மேலும் ஹெர்பல் ‘ஹேர் டை’கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன. அதற்காக ‘ஹேர் டை’ உபயோகிக்கவே கூடாது என்றில்லை.

ஆனால் அளவாக உபயோகிக்க வேண்டும். ‘ஹேர் டை’ போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்கு தள்ளிப் போடலாம். எந்த ஒரு ‘ஹேர் டை’ வாங்கினாலும் அதில் இருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா? என்று பார்த்து ஒரு பிரச்சினையும் இல்லையெனில் உபயோகிக்கலாம்.

தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி

தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி

தொடர்ந்து வீட்டில் உடற்பயிற்சி செய்தவர்கள், உடலை மேலும் ஃபிட்டாக வைத்திருக்க, சில மெஷின் பயிற்சிகள் செய்வது நல்லது. இந்த வகையில் லையிங் ஸ்குவாட் பயிற்சி தொடைக்கு உறுதியை தரும் பயிற்சியாகும். இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் அழகான கவர்ச்சியான தொடையை பெறலாம். 


இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் ஸ்குவாட் கருவியில் அமர வேண்டும். இந்த நிலையில் மேடையில் எடை எதுவும் இருக்காது. பின்னர், கால்களில் எடையைத் தாங்கிக்கொள்ளும் வகையில் லாக்கை அகற்ற வேண்டும். 



இப்போது மேடையின் முழு எடையும் கால்களில் இருக்கும். மூச்சை வெளியே விட்டபடி கால் முட்டியை மடக்கி, மேடையைக் கீழே கொண்டுவர வேண்டும். சில நொடிகளுக்குப் பிறகு, மூச்சை நன்கு இழுத்து, மேடையை மேலே உயர்த்த வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 15 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். 



பலன்கள்: தொடைகள் உறுதியாகும். அழகான தோற்றம் கிடைக்கும்.

Friday, March 11, 2016

ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி


ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி

உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்ற பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். 


வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும். இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி உடலுக்கு வார்ம் அப் பயிற்சியே. இதை மட்டும் தனியாகவும் செய்யலாம். 



ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி என்பது வேறு ஒன்றும் இல்லை. நின்று கொண்டே ஜாக்கிங் செய்வது போன்றது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே மெதுவாக ஜாக்கிங் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் வேகமாகச் செய்ய வேண்டாம், மிதமான வேகத்தில் 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். 



பின்னர் படிப்படியாக நிமிடங்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம். வார்ம் அப் பயிற்சியாக செய்வதாக இருந்தால் 10 விநாடிகள் மட்டும் செய்தால் போதுமானது. பயிற்சியாக செய்வதாக இருந்தால் தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த பயிற்சி உடல் முழுவதிற்கும் பலன் தரக்கூடியது. 



பலன்கள்: உடல் முழுவதும் உள்ள தசைகள், உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிய, இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.

மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை

மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை


அபான வாயு முத்திரைமாரடைப்பை தடுக்க தினம் 10 நிமிடம் செலவு செய்யுங்கள். நண்பர்களே, இது அபான வாயு முத்திரை. தினமும் ஒரு 10 நிமிடங்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்.


ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக்கொள்ளுங்கள், பின்பு கட்டை விரலையும், நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், அவ்வளவுதான், இதுதான் அபானவாயு முத்திரை. முயலுங்கள், தொடருங்கள், இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும்.

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்


ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்


சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். 


வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம், 
கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை - 10, 
கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5. 



இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். 2 வாரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.