Pages

Tuesday, March 8, 2016

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட பெண்களின் முகத்தில் மெல்லிய முடிகள் இருக்கும். இது இயற்கையான இன்றுதான். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்ந்திருக்கும். உண்மையில் இது உடலில் உள்ளே ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறி.

”ஆண்கள்போல் பெண்களுக்கு இப்படி மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்வதை ஹிருசிட்டிசம் என்போம். இந்த பிரச்சனைக்கான காரணங்கள் ஆண்களுக்குரிய ஆன்ட்ரஜன் பெண்களின் உடலில் அதிகமாக இருந்தால் இந்தப் பிரச்சனை வருகிறது. சில பெண்களுக்கு சினைப்பையில் கட்டிகள் வரும்போது ஆண்களுக்குரிய ஹார்மோனான ஆன்ட்ரஜன் கூடுதலாக சுரக்கும். இதுவே பெண்களுக்கு ஆண்களைப்போல் முடி வளர்வதற்கு காரணமாகிறது. 

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் உடலில் ஹார்மோன் அளவை கண்டுபிடித்து அதை சரிசெய்ய வேண்டும்.  சினைப் பையில் கட்டிகள் இருந்தால் அதற்குரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்  முகத்தில் அடர்த்தியாக வளர்ந்த முடிகளை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். லேசர் சிகிச்சையில் டையோடு லேசர் மற்றும் ஐ.பி.எல் லேசர் என இருவகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் டையோடு முறைதான் சிறந்தது.  லேசர் சிகிச்சையை மாதம் ஒருமுறை என 5 மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு வருடம் ஒருமுறை செய்ய வேண்டும். லேசர் சிகிச்சையால் முடியின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் நூறு சதவீதம் அகற்ற முடியாது.

உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள

Plie Squats க்கான பட முடிவு

Plie Squats க்கான பட முடிவு
உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.

• குந்து பயிற்சி (Squats)  : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.

• ஸ்டேப்-அப்ஸ் (Step Ups)  : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

• லாஞ்சஸ் (Lunges) : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.

• குவியல் குந்து பயிற்சி (Plie Squats) : உங்கள் கால்களை கொஞ்சம் அகலமாக அகட்டி, உங்கள் இரண்டு தொடைகளும் நேர் கோடாக வரும் அளவு அமர்ந்து எழுந்திரிக்கும் பயற்சி தான் குவியல் குந்து பயிற்சி (Plie Squats). இந்த பயிற்சியின் மூலம் உங்கள் இடை, தொடை மற்றும் பின்பாகம் பகுதிகள் வலுவாகும் மற்றும் கவர்ச்சியான தோற்றம் பெறும்.

• கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.

Monday, February 15, 2016

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை


ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும், மருத்துவமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ் ஆகும்.


இந்த முறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன. சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு ஆயுர்வேதத்தில் ‘அப்யங்கா’ என்று பெயர்.



அப்யங்காவில் உடல் முழுவதும் மூலிகை எண்ணெய்யை தடவி, மெதுவாகப்பிடித்துவிடுவார்கள். இதனால், ஆழ்ந்த தூக்கம் வரும். உடல், மனம், மூளை இம்மூன்றும் நல்ல சுறுசுறுப்பை அடையும்.



இந்த சிகிச்சையை உரிய நேரங்களில் செய்து வரும்போது தனியாக எதுவும் க்ரீம்கள் அழகு சாதன பொருட்கள் உபயோகிக்க வேண்டிய தேவையில்லை. தானாகவே முகம் பொலிவு பெறும்.



‘பிழிச்சல்’என்றொரு முறை உண்டு. இதில் இளம் சூடான மூலிகை எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி, தாள கதியில் உடலை அழுத்தித் தேய்ப்பார்கள்.



மசாஜீக்கு வந்திருப்பவரின் உடல் உபாதையைப் பொறுத்து, மசாஜ் செய்பவர்கள் முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளை காலால் மிதித்து மசாஜ் செய்வர்.



ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வீதம் குறைந்தது ஒரு வாரம் அதிகபட்சம் 3 வாரங்களுக்கு இப்படிப்பட்ட மசாஜ் செய்ய வேண்டியிருக்கும்.



இதனால், ஆர்த்திரிடிஸ், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும். இதனால் செயலில் சுறுசுறுப்பு பிறக்கும். உடல் தளர்வடையாது. முகம் தெய்வீக அம்சத்துடன் களையாக இருக்கும்.



சிரோதாரா என்ற ஆயுர்வேத சிகிச்சையானது டென்ஷனோடு வாழ்ந்துவருபவர்களுக்கு மிக அவசியமானது.



தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள், உளவுத்துறையில் இருப்பவர்கள், அரசாங்கத்தின் நிழல் சக்தியாக செயல்படுபவர்கள் மற்றும் டென்ஷனோடு வாழ்பவர்களுக்கு சிரோதாரா மிகச்சிறந்த சிகிச்சையாகும்.



மூலிகை எண்ணெய், மூலிகை சேர்க்கப்பட்ட பால், மோர் அல்லது மூலிகைச்சாற்றினை சிறிய குழல் வழியாக நெற்றியில் தொடர்ந்து விழும்படி செய்வதுதான் ‘சிரோதாரா மூலிகை சிகிச்சை முறையாகும்.



இந்த ஆயுர்வேத சிகிச்சைகளைச் செய்வதற்கு ஏற்ற காலம் கேரளாவின் மழைக்காலம்தான். அப்போது இந்த சிகிச்சை அதிக பலன் தரும். தூசிகள் இராது.



இதன் மூலம் தோலில் இருக்கும் துவாரங்கள் விரிந்து பெரிதாகும். இதனால், மூலிகை எண்ணெய் உடலினுள் இழுக்கப்பட்டு உடல் வனப்பு பெறும் உடல் உறுப்புகள் அழகு பெறும்.



மேற்கண்ட மூலிகை சிகிச்சை முறைகளை பெண்கள், மற்றும் ஆண்கள் இருவருமே செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைவரையும் கவரும் தோற்றத்துடன் இயற்கை அழகுடன் இருக்கலாம்.

Sunday, February 14, 2016

அன்பு செய்ய கற்றுக்கொடுங்கள்


 

அவருக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது. அன்பு செய்ய கற்றுக்கொடுக்க
வேண்டும். அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் அறிவுரைகளும், போதனைகளும் சொல்லப்படுகின்றன. அன்பு, இயல்பானது; உணரக்கூடியது. இல்லாத, தெரியாத, அறியாத, சாத்தியமில்லாத ஒன்றை வெளிப்படுத்தத்தான், கற்றுத்தர வேண்டும்.

நாம் சமூகமாக வாழ்கிறோம். பழகுதல் என்பது சமூகத்தின் முக்கியமான அம்சம். கலாசாரம், சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவை, பழகுவதற்கு வரைமுறைகளையும், நெறிமுறைகளையும் ஏற்படுத்தி உள்ளன.

வெளிப்படையாக, யதார்த்தமாக உணர்வுகளை காட்டுவது, அறிவீனமாக கருதப்படுகிறது. நாசூக்காக, நாகரிகமாக உணர்வுகளை காட்டும் போது இனிமையானவர், பண்பானவர் என்ற பாராட்டுகள் கிடைக்கின்றன. அந்த குணங்கள், சாத்தியமாகின்றன; சாமர்த்தியத்தின் அடையாளமாகவும் நம்பப்படுகின்றன.

அன்பை இயல்பாகவே வெளிப்படுத்துவது லகுவானதாகும். அன்பு என்றுமே சிரமப்படுத்தாது. எனவே, அதை வெளிப்படுத்த கற்றுத் தருவதை விட, அன்பை எப்படி பெறுவது, உணர்வது என்று கற்றுக்கொள்வது பயனுள்ளது. அன்பை இனங்கண்டு கொண்டாலே, அது நம்மை வந்தடையும்.

சமூகத்தில் வாழும்போது, இயல்பாக இருப்பதை விட சாமர்த்தியமாக இருப்பது, அவசியமாகிறது. இல்லாத ஒன்றை கூட, இருப்பதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் மலிந்து போய்விட்டன. எனவே, இந்த சமுதாயத்தில் வெற்றிபெற, இல்லாத அன்பை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்; கற்றுக் கொடுங்கள்.

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்


இன்றைய இளம் பெண்கள் தங்கள் சருமத்தை அழகாக்க கடைகளில் கிடைக்கும் பல்வேறு வகையான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் எந்த பலனும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

இவர்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய இந்த ஃபேஸ் பேக்கை பயன் படுத்தி சருமத்தை பொலிவாக்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை வீட்டிலிலேயே தயாரிக்கலாம். செய்வதும் மிகவும் எளிமையானது. இப்போது இந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

• கடலை மாவு - இது சருமத்தில் பருக்கள் வருவதை தடுத்து சருமம் கருமை அடைவதை தடுக்கிறது.

• வெள்ளரிக்காய் - இது வெயில் காலத்தில் சருமத்தில் வேர்குரு வருவதை தடுக்கிறது.

• கேரட் விழுது - இது சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. மேலும் சூரியனின் கடுமையான கதிர் வீச்சில் இருந்து தோலையும், தோல் திசுக்களையும் பாதுகாக்கிறது.

• தேன் - இது சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

• குளிர்ந்த பால் - இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்குகிறது.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கடலை மாவை போட்டு இதில் 1 ஸ்பூன் வெள்ளரிக்காய், கேரட் விழுதை சேர்க்கவும். அடுத்து அதில் அரை ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.

இந்த ஃபேஸ் பேக் போட்டிருக்கும் போது  சிரிக்கவோ, பேசவோ கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். - இந்த ஃபேஸ் பேக் இயற்கை அழகுடன் உங்கள் சருமத்தை மிளிரச்செய்யும்.

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, சமைப்பது என, நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டி தான். அதுக்காக வேலை பார்க்காமல் இருக்க முடியுமா...? என்றால், முடியாது தான். ஆனால், உங்களின் உணவு முறையிலும், கைகளை பராமரிப்பதிலும் சற்று கவனம் செலுத்தினால்... உங்கள் உள்ளங்கையை மென்மையாக மாற்ற முடியும். 


உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் வேசலின் தடவிக் கொள்ளலாம். உள்ளங்கை மற்றும் கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறந்தால், தோலின் சுருக்கங்கள் நீங்கி தசைகள் விரியும். 



நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓர் எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும். ஓர் உருளைக்கிழங்கை வேகவைத்து, அதில் 5 சொட்டுகள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைக் கைகளுக்குப் பூசி, தேய்த்துக் கழுவுங்கள். 



ஆலிவ் எண்ணெய், தோலுக்கு நல்ல ஈரப்பத்தைக் கொடுக்கும். உருளை, கருமையை நீக்கிவிடும். வெடிப்புகள் தொடராமல் இருக்க... நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜுஸ் குடியுங்கள். காய்ச்சிய, வெது வெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.

வெயில் காலத்தில் உச்சி முதல் பாதம் வரை பராமரிப்பு

வெயில் காலத்தில் உச்சி முதல் பாதம் வரை பராமரிப்பு


வெய்யில் காலங்களில் நம் முகம் சோர்ந்தும், எண்ணெய்ப் பசையோடும் காணப்படும். அதற்காக எல்லோரும் அழகு நிலையத்திற்கு போக முடியாது. வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எல்லா வயதினரும் உச்சி முதல் பாதம் வரை அழகை பாதுகாக்கலாம். வெயிலில் வெளியில் செல்லும் போது சன்ஸ் கிரீம் லோஷன் உபயோகப்படுத்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். 


• நம் கண்களை பாதுகாக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதிகளில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும். 



• உதட்டில் வெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும். 



• வெய்யில் காலங்களில் எண்ணெய் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்: முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 15 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும். பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.) ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும். இப்படி வாரம் இருமுறை அல்லது ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும். 



• தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும். (பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெயில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.) பின் தலையை மசாஜ் செய்யவும் 15 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு pack-ஆகப் போடவும்.(மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. 



மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.) மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப்படுத்தலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் இருக்கும். 



• பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து, குளிக்குமுன் 20 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.