Pages

Saturday, September 6, 2014

பழைய சாதம் ... புதிய தகவல்!


நம் முன்னோர்கள் சத்துமிக்க உணவு சாப்பிட்டதால் தான், வயதானாலும் சிறிதும் சக்தி குறையாமல் இருந்தனர். அப்படி அவர்கள் உட்கொண்ட உணவுகளில் ஒன்று தான் பழைய சாதம்.

பழைய சாதம் சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் சுறுசுறுப்பு, பன்றிக்காய்ச்சல், உள்ளிட்ட எந்த காய்ச்சலும் அணுகாது. உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல் புண், வயிற்றுவலி குணமடையவும், சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவையும் சரியாகும். சட்டென்று ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவும், உடல் எடை குறையவும் பழைய சாதம் பயன்படுகிறது. முதல் நாள் சாதத்தில் நீருற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர் ஒருவர்.

சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை உணவாக பழைய சாதத்தை பயன்படுத்துவதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன. மறு நாள் இதை குடிக்கும் போது உடல் சூடு தணிவதோடு குடல் புண், வயிற்றுவலி போன்றவற்றை குணப்படுத்தும். இதிலிருந்து நார்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. இந்த பழைய சாதம், உணவு முறையை சில நாள் தொடந்து சாப்பிட்டால், நல்ல வித்தியாசம் தெரியும்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னெவன்றால் உடலுக்கு அதிகமான சக்த்தியை தந்து, நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதை கொடுத்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது. சைனஸ் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

No comments: