Pages

Thursday, April 3, 2014

புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியில் தகவல்

புத்துணர்ச்சி பானம்
மக்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி பானங்கள் பல விற்பனைசந்தையில் உள்ளன. ஆனால் இவை அதிக ரத்த அழுத்தத்தையும், மரணம் விளைவிக்ககூடிய மாரடைப்பையும் தர வல்லவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஏற்கனவே ரத்த அழுத்தத்தினாலோ, இதய நோய்களாலோ அவதிப்படுபவர்கள், இது போன்ற பானங்களை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு முன்னால், இது குறித்து வெளியிடப்பட்ட ஏழு புள்ளிவிவரக் கணக்கீடுகளையும். ஆய்வு செய்தனர். இந்தக் கணக்கீடுகளில், 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

முதலில், இந்த ஆய்வாளர்கள் ஒன்று முதல் மூன்று எண்ணிக்கை வரை சக்தி பானங்கள் குடித்தவர்களின் இதயத்துடிப்பை பரிசோதித்தார்கள். அவர்களின் ஒவ்வொரு துடிப்பிற்கும் நடுவில் 10 மில்லிசெகண்டு இடைவெளி அதிகரித்து இருந்தது. இது இதயத்துடிப்பின் சீரான தன்மையைக் குலைத்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

சக்தி பானத்தை அருந்திய 132 பேரை பரிசோதித்த அவர்கள், அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 3.5 புள்ளிகள் அதிகரித்து இருந்ததையும் கண்டறிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும், அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய நோய்த்தொற்று மற்றும் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்பு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

No comments: