Pages

Wednesday, December 11, 2013

அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா?

*முதலில் உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*கறிமணப் பொருட்கள் கலந்து உணவைத் தவிருங்கள்.

*அளவிற்கு அதிகமாக உணவு உட்கொள்ளாதீர்கள்.

*எந்தெந்த உணவு அயிட்டங்கள் எடுத்தல் உங்களுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதோ அதை கவனித்து வந்து தவிர்த்துவிடுங்கள்.

*புரதம் மிகுந்த உணவு எடுங்கள்.

கொழுப்புச் சத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆகாரத்தை எடுத்துக் கொண்டு விடுங்கள்.

*மதியச் சாப்பாட்டுக்குப்பின் சற்று கண்ணயர நினைத்தால் தூங்குங்கள்.

*இரவு தூக்கத்தின்போது கட்டிலின் தலைப்பாகம் உயரமாக இருக்கட்டும். கட்டிலின் தலைப்பகுதிக் கால்களுக்கு மரக்கட்டையையோ செங்கல்லையோ அண்டை கொடுத்து உயரமாக்கிக் கொள்ளுங்கள்.

-இந்த நெஞ்சு எரிச்சல் தடுப்பு முறைகளைப் பின்பற்றி வாருங்கள் நிவாரணம் கிடைக்கும்.

No comments: