Pages

Wednesday, July 13, 2016

மன நோயை அறியும் அறிகுறிகள் இதுதான் !


மனம், அறிவு, உணர்வு, நினைவாற்றல், விருப்பம், ஒழுக்கம், நடவடிக்கை, செயல் இவற்றின் மாறுபாட்டை மன நோய் என அறிந்துக்கொள்ள வேண்டும். மனநோய் என்றால் ஆயுர்வேதத்தில் மட்டுமே குணப்படுத்த முடியும் என பழங்காலத்தில் நம்பிக்கை இருந்தது.

பழங்காலத்தில் மன நோய்கள் உள்ளவர்களை சங்கிலியால், கட்டி கோவிலை சுற்றி வலம் வர வைப்பது, அடிப்பது இவை தன சிகிச்சை. சமூகத்தில் மன நோய்யை பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. ஆயுர்வேதத்தை பொருத்தவரை மனது தான். மனித சிந்தனைகளின் பிறப்பிடம். மனிதன் இறந்தால், மூளையும் இறந்துவிடும். நவீன மருத்துவ முறைகளை பொறுத்த வரை மூளை தான் பிரதானம். மனதுக்கும் மூளைக்கும் வித்யாசமில்லை. மனதில் எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் மூளையின் செயல்பாடுதான்,

மனோ வியாதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நியூரோசிஸ் உள்ளவர்களுக்கு தங்கள் குறைபாடு தெரியும். மனச்சோர்வு, மனப்பதற்றம், ஆழ்ந்த பயம், கருத்து ஆவேசம் அல்லது என்ன சுழற்சி, அதிக உணர்ச்சி வசப்படுதல், தன் உடலைப்பற்றி அதிக கவலை என்பவை நியூரோசிஸ் பிரிவில் வருபவை.

சைகோசிஸ் தீவிரமான மன வியாதி, நோயாளிகளுக்கு தன் குறைபாடு தெரியாது. தன்னைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை புரியாது. எண்ணச் சிதைவு ஏற்ப்படும். உச்சக் கட்ட மனநோய் வியாதியான  மனச் சிதைவு இந்த பிரிவை சேர்ந்தது. மன எழுச்சி நோயும் சைகோசிஸ் வியாதிதான். இவை தவிர குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகள், ஆளுமை கோளாறுகள் போன்ற மன வியாதிகள் உள்ளன. வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், இந்த மூன்றின் சேர்க்கையாலும் எதிர்பாராத விதமாக ஏற்ப்படும் உடல் மன நலிவுகளாலும் மனநோய் உண்டாகும்.

மூளையில் உள்ள நாளங்கள் எண்ணங்களை கொண்டு      செல்பவை. இவை கோபம், தூக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காதது, தவறான உணவுகளை உட்கொள்ளுதல், மனது ஒப்புக்கொள்ளாத சிந்தனைகளை அடிக்கடி யோசிப்பது, மூளையின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்த்துவது போன்றவை மனநோய் வர காரணங்களாக உள்ளன.

மனநோய் என்பது பிற நோய்களை போல சத்து குறைபட்டினாலோ அல்லது வயது காரணமாகவோ வருவதல்ல. மனதில் எழும் குழப்பங்கள், மூளை சிந்திக்கும் அளவை தாண்டி செயல்பட தூண்டுகிறது. இதனால் மூளையிலுள்ள செல்கள் மாற்றுப் பாதையில் செயல்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் மனிதனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. பணிச்சுமை, மன உளைச்சல், தேவையில்லாத சிந்தனைகளை நாள்தோறும் யோசிப்பது போன்ற அனைத்துமே மனநோயின் அடிப்படையாக உள்ளது.
  

பக்கவாதம் என்றால் என்ன?


பக்கவாதம்


உடலில் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவு குறையும் போது, மூளையின் உள்ள செல்கள் இறக்க நேரிடுவது : மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுவது ஆகியவை, பக்கவாதம் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. இறப்புக்கான காரணமான நோய்களில், இது, மூன்றாவது இடத்தில் உள்ளது. 6 நொடிக்கு ஒருவர் என, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், 15 முதல் 30 சதவீதம் பேர், படுத்த படுக்கையாகி விடுவர்.

இந்த நோய் பாதித்தால் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் எடை கூடுதல், குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்றவை இதற்கு காரணம்.

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்!

1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.

8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

14. விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ  கெடுக்கக்  கூடாது.

32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.
36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

37. ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.

38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது

39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.

41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

  42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.

44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்

45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக்  கூடாது.

46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.

49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செலும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.

50. கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

-----விகடன் பக்கத்தில் இருந்து





தண்ணீர் தரும் அழகு

Water
நாம் பருகும் சுத்தமான நீர் நம் உடலை சுத்தப்படுத்துகிறது. புதுப்பிக்கிறது. சருமத்திற்கு பொலிவை உண்டு பண்ணுகிறது. எடை குறைய உதவுகிறது.

சாப்பிடும் முன் தண்ணீர் பருகினால் குறைவாகச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சிக்கு இடையில் நீர் பருகுவதும் நல்லது.

முகத்தில் குறைந்தது 20 முதல் 25 முறைகளாவது குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவுங்கள். முகம் புத்துணர்வு பெறும் .

வீட்டில் பாத்ரூம் கதவு, ஜன்னலை மூடி விட்டு கொதிக்கும் நீரை பைப்பில் திறந்து விட்டாலோ, அல்லது ஆவி பறக்கும் நீரை தரையில் கொட்டி விட்டாலோ புகை எழும்பும். இதில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்த பின் உடல் வியர்வையை ஒரு சுத்தமான டவலால் துடைத்த பின் குளித்தால் பிரஸ்ஸாக இருக்கும்.

வேப்பிலை அல்லது அரைத்த 50 கிராம் இஞ்சி அல்லது இரண்டு கைப்பிடி புதினா இலைகள் அல்லது செம்பருத்தி இலைகள், பூக்கள் இவற்றை குளிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குளித்தால் உடல் சருமத்திற்கு மிகவும் நல்லது.

தினமும் எழுந்ததும் வெற்று பாதங்களுடன் திறந்த புல்வெளியில் பத்து நிமிடங்கள் நடக்கலாம். இல்லை முட்டி வரை நனையும்படி குளிர்ந்த நீரில் 10 நிமிடம் நனைத்து வைத்திருந்த பின் துடைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பண்டைய சீனர்கள், ஜப்பானியர்கள் இப்படி செய்வார்களாம். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர்கள் சுத்தமான நீர் பருக வேண்டும்.



வின்ஸ்டன் சர்ச்சில் - கொஞ்சம் தெருஞ்சுக்கங்க


வின்ஸ்டன் சர்ச்சில்


பதினான்கு நூல்களை எழுதி தள்ளிய எழுத்தாளன், வீரம் கொண்டு துப்பாக்கி பிடித்து ராணுவ வீரனாவார். ஓவியராக திகழ்ந்தவர். இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக விளங்கியவர். வின்ஸ்டன் சர்ச்சில், போரும் வீரமுமே வாழ்வாக, 23 வயதில் துவங்கிய அவரது போராட்ட வாழ்வு, 90 வயது வரை நீண்டது. துணிவுக்கு மருப்பெயரான சர்ச்சிலின் போர் அனுபவங்கள், 20 நூல்களாக வெளி வந்துள்ளன. இரண்டு உலகப் போர்களை முன்னின்று நடத்தியதும், ஹிட்லருக்கு சவால் விட்டதும், இந்த நூலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 'சாவ்ரோலா' என்ற நாவலை எழுதிய இவர், அந்த கதாநாயகனின் அதிரடி வெற்றிகளை கற்பனையில் கண்டதை, இவர் வாழ்விலும் அடைந்தது வியப்புக்கு உரியது.

வீரமும், நேர்மையும், கடும் உழைப்பும், பிடிவாத குணமும் கொண்ட சர்ச்சில், பல முறை தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்த வரலாற்றை, இந்த நூல் அழகாக பதிவு செய்துள்ளது.

மனித உடலின் அதிசய செய்திகள்

மனித உடலின் அதிசய செய்திகள்

மனித உடலுக்குள் ஆயிரத்துக்கு அதிகமான உறுப்புகள், சத்தமில்லாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உறுப்புகளில் ஒன்று தன் பணியை செய்ய மறுத்தால் மனிதனுக்கு சிக்கல் தான். முதலில் நம் உடலில் உள்ள நமக்கு தெரியாத உறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

நமது மூக்கு 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலை விட இரவில் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம் பட்டால் வலி தெரியாது.

சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் நான்கு கனவுகள். நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன. நம் கண் விழியின் சராசரி எடை 28 கிராம். தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்கு துவாரங்களை மூடிக்கொண்டு முனங்க முடியாது. நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனாச்மிய எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியர் என்கிறார்கள்.

நமது உடலில் உவுலா என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? 

அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறு தசையே உவுலா எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான். பிறக்கும் போது நமது உடலில், 300 எலும்புகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும். பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

எலும்பின் வெளிப்புறமே கடினமானது. உட்புறம் எலும்புகள் மென்மையானதாக இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதம். நமது ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு அடர்த்தியானது. ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது. நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் இருக்கும்.

சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு மனிதனின் கைரேகையை போலவே கால் ரேகை மற்றும் நாக்குரேகைகள் தனித் தன்மை வாய்ந்தவை.

வாய் விட்டு சிரிங்க சர்க்கரை குறையும்!



பொதுவாக நன்றாக சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், நல்ல மூடும் உருவாகும். என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.

இப்போது, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய் விட்டு சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின் அளவு குறையும் என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித் தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து, இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் சீரியசான விரிவுரையை கேட்க வைத்திருக்கிறார்கள். இனொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியசான விரிவுரையை கேட்ட நாளை விட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய் விட்டு சிரித்த நாளில், அவர்களின் குளுகோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததாம்.