Pages

Showing posts with label முகம் புத்துணர்வு பெற. Show all posts
Showing posts with label முகம் புத்துணர்வு பெற. Show all posts

Wednesday, July 13, 2016

தண்ணீர் தரும் அழகு

Water
நாம் பருகும் சுத்தமான நீர் நம் உடலை சுத்தப்படுத்துகிறது. புதுப்பிக்கிறது. சருமத்திற்கு பொலிவை உண்டு பண்ணுகிறது. எடை குறைய உதவுகிறது.

சாப்பிடும் முன் தண்ணீர் பருகினால் குறைவாகச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சிக்கு இடையில் நீர் பருகுவதும் நல்லது.

முகத்தில் குறைந்தது 20 முதல் 25 முறைகளாவது குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவுங்கள். முகம் புத்துணர்வு பெறும் .

வீட்டில் பாத்ரூம் கதவு, ஜன்னலை மூடி விட்டு கொதிக்கும் நீரை பைப்பில் திறந்து விட்டாலோ, அல்லது ஆவி பறக்கும் நீரை தரையில் கொட்டி விட்டாலோ புகை எழும்பும். இதில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்த பின் உடல் வியர்வையை ஒரு சுத்தமான டவலால் துடைத்த பின் குளித்தால் பிரஸ்ஸாக இருக்கும்.

வேப்பிலை அல்லது அரைத்த 50 கிராம் இஞ்சி அல்லது இரண்டு கைப்பிடி புதினா இலைகள் அல்லது செம்பருத்தி இலைகள், பூக்கள் இவற்றை குளிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குளித்தால் உடல் சருமத்திற்கு மிகவும் நல்லது.

தினமும் எழுந்ததும் வெற்று பாதங்களுடன் திறந்த புல்வெளியில் பத்து நிமிடங்கள் நடக்கலாம். இல்லை முட்டி வரை நனையும்படி குளிர்ந்த நீரில் 10 நிமிடம் நனைத்து வைத்திருந்த பின் துடைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பண்டைய சீனர்கள், ஜப்பானியர்கள் இப்படி செய்வார்களாம். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர்கள் சுத்தமான நீர் பருக வேண்டும்.