Pages

Thursday, March 17, 2016

குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்


 குழந்தைப் பேறுக்கு இயற்கை வழிகள்
* மிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.

* ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.

* ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.

* வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.

* உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.

* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.

* சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.

நீர்க்கடுப்பா? இதோ மருந்து


வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். 

சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.

ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். 

அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில் கட்டிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெப்பம் சம்பந்தமான பிரச்னைகள் எதுவும் வராது.

பெண்களின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை பொருட்கள்

valaipoo க்கான பட முடிவு
பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கவும் ஸ்லிம்மாக இருக்கவும், இயற்கையாக கிடைக்கும் கீழ்க்கண்ட பொருட்களை உணவாக அடிக்கடியோ, தினமுமோ சேர்த்து வரலாம்.

வெந்தயக்கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம். வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.இதன் மூலம் கொழுப்பு குறைந்து தேவையற்ற சதைகளை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும்.

அன்னாசி பழ பச்சடி

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் இலை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.

சிறுநீரகத்தின் பணி என்ன?

சிறுநீரகத்தின் பணி என்ன?

kidney க்கான பட முடிவு

உடலுக்குத் தேவையான குளூக்கோஸ், அமினோ அமிலம், வைட்டமின்கள், ஹார்மோன்கள் போன்றவற்றைத் தேக்கி வைத்துக் கொண்டு, ரத்தத்தில் உள்ள யூரியா, குளோரைடு போன்ற கழிவுப்பொருட்களைப் பிரித்தெடுத்து, வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது. வீட்டுக்கு எப்படி கழிப்பறை முக்கியமோ, அதுபோல் நம் உடலுக்கு சிறுநீரகம் முக்கியம்.


1) சிறுநீரகம் பாதிப்படைவது எதனால்?
கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடல் வலி நிவாரண மாத்திரைகளின் பக்க விளைவுகள், உணவு நச்சுகள், உடற் பருமன் உயிரணுக்கள் உற்பத்தியாகும் பையில் வீக்கம் போன்ற காரணங்களால், சிறுநீரகம் பாதிக்கப்படைகிறது.

2) சிறுநீரகம் செயலிழந்ததற்கான அறிகுறிகள்?
திடீர் சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என, இருவகை உண்டு. உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து போனால் அல்லது மருந்து ஒவ்வாமையினால், திடீரென சிறுநீரகம் செயலிழக்கும். முகம் வீங்குவது, உடலில் நீர்க்கோர்த்து உடல் பருமன் ஆவது போன்றவையே, திடீர் செயலிழப்பின் அறிகுறிகள்.

3) நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்?
சிறிது சிறிதாக, சிறுநீர்ப் பிரிவதில் சிரமம், குறைந்த அளவில் சிறுநீர் பிரிவது. பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, உடல் அரிப்பு, முகம் மற்றும் கை, கால்களில் வீக்கம் தோன்றுவது போன்றவையே, நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்.

4) சிறுநீரில் ரத்தம் வருவதற்கான காரணம்?
சிறுநீர் வெளியேறும் குழாய் மற்றும் சிறுநீர் பையில் கற்கள் அடைத்திருந்தால், சிறுநீரில் ரத்தம் வரும்; அது ஆபத்தான அறிகுறி.

5) சிறுநீரக பாதிப்பை கண்டறிய எப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்?
நாற்பது வயதை கடந்தோர், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பத்தை சேர்ந்தோர், சிறுநீரகத்தில் கல் உள்ளோர், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ளோர், ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகம் தொடர்பான, 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' செய்து கொள்வது நல்லது.

6) உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. தொடர்ந்து ரத்த அழுத்தம், 140/ 90 மி.மீ., பாதரச அளவு இருந்தால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

7) சிறுநீரக பாதிப்பு ஏற்படாமலிருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்?
ஒருவருக்கு தினமும், 5 கிராம் உப்பே போதுமான அளவு. ஆனால் தென்னிந்தியாவில், 20 கிராம் உப்பை தினம் எடுத்துக் கொள்கிறோம். இதை குறைக்க வேண்டும். உப்பு நிறைந்த பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சமையல் சோடா, சிப்ஸ், ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.

8) சிறுநீரக பாதிப்பு உள்ளோர் புரத உணவுகளை தவிர்க்க வேண்டுமாமே?
சிறுநீரக செயலிழப்பு உள்ளோர், தாங்கள் உட்கொள்ளும் புரத உணவுகளில், கவனமாக இருக்க வேண்டும். புரத உணவின் வகையிலும், அளவிலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக விலங்கின் இறைச்சிகள், மீன், கோழி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும், புரதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

9) புகைப்பிடிப்போருக்கு, சிறுநீரக பாதிப்பு இருக்குமாமே?
சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால், உடலுக்குள் நுழையும் நிகோட்டின் ரத்தக்குழாய்களை சுருக்கிவிடும். இதனால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இவ்வாறு அதிகரித்த ரத்த அழுத்தம், சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

Tuesday, March 15, 2016

ஸ்கிப்பிங் மிக சிறந்த வார்ம் அப் பயிற்சி

ஸ்கிப்பிங் மிக சிறந்த வார்ம் அப் பயிற்சி

உடலினை உறுதிசெய்ய உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்று, பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும்.

கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும்.

இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். வார்ம் அப் பயிற்சிகள் முடிந்ததும், ஸ்டிரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஸ்டிரெச்சிங் பயிற்சிகள், இறுக்கமான தசைகளைச் சற்று தளர்வடையச் செய்து, உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்க உதவும்.

இந்தப் பயிற்சிகள் உடலில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கவும், தசை நார்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் துணைபுரியும். உடல் உள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யப்படும் வார்ம் அப் பயிற்சிகளில், மிகவும் முக்கியமானது ஸ்கிப்பிங். ஸ்கிப்பிங் செய்ய சாதாரண பிளாஸ்டிக் கயிறுகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான, ஸ்கிப்பிங் ரோப் கடைகளில் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

முதுகுக்குப் பின் ஸ்கிப்பிங் ரோப் இருக்கும்படி, ஸ்கிப்பிங் கட்டைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மிதமான வேகத்தில் கைகளைச் சுழற்றி, ரோப்பை முன்புறம் கொண்டுவர வேண்டும். அதே நேரத்தில், மெதுவாகக் குதித்தபடி, ரோப் கால்களில் மாட்டிக்கொள்ளாமல் பின்பக்கம் கொண்டுவர வேண்டும். இப்படி, மித வேகத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். எனவே, உடற்பயிற்சி செய்ய எளிதில் தயாராக முடியும்.

எடை தூக்கும் பயிற்சியின் நன்மை, தீமைகள்

எடை தூக்கும் பயிற்சியின் நன்மை, தீமைகள்


எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. 


தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். 



• ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும். 



• நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். 



• தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும். ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும். 


• பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல - டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும். 



• பளு தூக்கும் போது தவறி போட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்.


வேதனை தரும் வேர்க்குரு


உணவுப்பாதை மற்றும் சுவாசப்பாதை வழியாக நம் உடலுக்குள் நுழையும் நுண் கிருமிகள், ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்து விடுகின்றன. அவற்றின் கழிவுகள், தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அவை, வியர்வை துவாரங்களை அடைத்து, கட்டிகளை உருவாக்குகின்றன. 


அதுமட்டுமின்றி, தோலின் வழியாக உட்செல்ல முற்படும் நுண் கிருமிகள், ரத்தத்தின் உள் செல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு, தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்த கட்டிகள், நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து உடைந்து சீழாக வெளியேறி, நச்சுநீர்கள் பட்ட இடங்களில் புண்ணாக மாறி, பின் ஆறி விடுகின்றன. இந்த கட்டிகள், வேர்க்குரு மற்றும் உஷ்ண கட்டிகள் எனப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், தோலை சுத்தமாக வைக்காததால், தோலுக்கடியில் பலவிதமான அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேருவதால், தோல் கடினமாகி, அதிலுள்ள செல்கள் பாதிப்படைந்து, பாதிக்கப்பட்ட செல்களிலுள்ள நுண் கிருமிகள் வெளியேற முடியாமல், தோல் மற்றும் தோலின் வெளிப்புற பகுதிகளில் கட்டிகளை உண்டாக்குகின்றன. இதுபோன்ற கட்டிகள், லேசான வீக்கமாக வந்து, பின் கட்டியாக மாறும். 
இக்கட்டிகள் வந்தால், நெரி கட்டுதல், நமைச்சல் போன்ற பல தொல்லைகளை ஏற்படுத்தும். வேர்க்குரு மற்றும் உஷ்ண கட்டிகள் வராமல் இருக்க, கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க, இளநீர், மோர், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரம் மற்றும் புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். திட உணவுகளை குறைத்து, திரவ உணவுகள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய நீர்ச்சத்துள்ள பழங்களை உண்ண வேண்டும்.