Pages

Sunday, September 18, 2016

மலச்சிக்கலை போக்கும் சாம ஆசனம்


செய்முறை:

விரிப்பில் பத்மாசனம் செய்வது போல் வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைக்கவும். உள்ளங்கைகள் மேலே பார்த்தவாறு இடது கை மேல் வலது கையை வைக்க வேண்டும். முழங்கால் தரையில் பதிய நேராக அமரவும்.

சுமார் 3 விநாடிகள் இதே நிலையிலிருந்து சாதாரணமாக சுவாசிக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 10 நிமிடம் செய்யவும்.

பலன்கள்:

1. நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.

2. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.

3. தலைவலி, மலச்சிக்கல் ஆகியவை நீங்குகிறது.

4. கால்களும், முதுகுத்தண்டும் பலம் பெறுகின்றன.
 

No comments: