Pages

Wednesday, April 27, 2016

சர்க்கரை நோயாளிகளுக்கு இதயநோய் வருவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். அது என்ன? இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ளது கணையம் (பன்ச்ரியஸ்). இந்த உறுப்பு தான், இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின் தான். ஒரு வேலை, இன்சுலின் சுரப்பது குறைந்து போனாலோ அல்லது நின்று போனாலோ, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சியளர்கள் சர்க்கரை நோய்க்கும், இதயம் தொடர்பான நோய்க்கும் (cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, ரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுகோசாக மாறிய பின்னர் தான் ரத்த செல்களுக்குள் செல்லும்.


ஆனால் குளுகோசின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பண்படுத்த முடியாமல், உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதய நோய் (CVD) போன்ற நோய்கள் வருகின்றன. இன்சுலின் அளவும் ரத்தத்தின் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும் போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும், இதய நோய் வரலாம் என்கிறார்கள.

மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடைள்ள வர்களுக்குத்தான் (over வெயிட்) இன்சுலின் சுரப்பதி தடையும், ரத்தத்தில் அதிகளவு குளுக்கோசும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குதான் ஆரோகியம்ற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy  cholesterol)


  உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய், இதய நோய், இதயத்தாக்கம் போன்றவறிற்ககான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

கிழே உள்ள  சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்து போராடி சரி செய்ய உதவும். அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். இதனைக் கட்டுப் படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்தவழி.

முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்கு பிறகு 8 சதா வீதம் கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடி வயிற்றில் உள்ள கொழுப்பு குலைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுப்பிடிதர்கள். ஒரு வேளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள், ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையை குறைக்க முடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க முடியும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களை விட இதய நோய் அபாயம் மிகமிகக் குறைவு.

No comments: