Pages

Thursday, August 7, 2014

ரோஜாப்பூ தரும் அழகு பயன்கள்

ரோஜாப்பூ
அழகு பலன்களை அள்ளித் தருவதில் ரோஜாவுக்கு இணை வேறு எதுவும் இல்லை.

* ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும் இந்த ரோஜா பன்னீரை, தயாரிக்கும் விதம் இதோ...

* 50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இது தான் பன்னீர். தேவைப்படும் போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகளை போக்குவதுடன், வராமல் தடுக்கவும் உதவுகிறது. ரோஜா பன்னீர். அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர், கால் டீஸ்பூன் பால், இவை கலக்கும் அளவுக்கு ரோஜா பன்னீரை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு வயிற்றுப் பகுதியல் 5 நிமிடம் தடவி விட்டு குளியுங்கள். இதனால் வயிற்றுப் பகுதி வரிகள் மறைந்து விடும். டெலிவரி ஆவதற்கு 2 மாதங்களுக்கு முன் பிருந்தே இந்த பேஸ்ட்டைத் தடவி வரலாம். இப்படிச் செய்தால் வரிகள் விழாது.

* பிறந்த குழந்தைகள் சில நேரம் இரவில் தூங்கவே தூங்காது. இதற்கு, அரை டீஸ்பூன் கடலை மாவுடன், பயத்தமாவு, பூலாங் கிழங்கு பவுடர் தலா அரை டீஸ்பூன் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரைச் சேருங்கள். இந்த பேஸ்ட்டை குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். இந்த வாசனைக்கே குழந்தை நிம்மதியாக உறங்கும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பன்னீர்க் கூட்டணி.

* மேக்கப் போட்ட பிறகும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டேயிருக்கும். டல்லடிக்கும் முகத்தையும் டாலடிக்க வைக்கும் சக்தி பன்னீருக்கு உண்டு. அரை டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடருடன் அரை டீஸ்பூன் அரை டீஸ்பூன் சந்தனப்பவுடர் சேர்த்து, எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரை விட்டு முகத்தில் பூசி கழுவுங்கள். பிறகு `மேக்கப்' போடுங்கள். முகத்துக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் இந்த பேக், நீங்கள் வீட்டுக்கு `பேக்கப்' ஆகும் வரை உங்கள் `மேக்கப்' கலையாமல் இருக்கும்.

* அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், ஜாதிக்காய் பவுடர், சர்க்கரை, வெண்ணெய், இவை தலா கால் ஸ்பூன் எடுத்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு பேஸ்ட் செய்யுங்கள். இந்த கிரீமை வாரம் ஒரு முறை முகத்தில் மேலும் கீழுமாகப் பூசி வந்தால் பளீரென முகம் பிரகாசிக்கும். பருக்களும் மறைந்து, ஃபேஷியல் செய்தது போல் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

* ரோஜாப் பூவில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சருமத்துக்கு மிருதுத் தன்மையையும் பளபளப்பையும் கொடுப்பதுடன் நல்ல நிறத்தையும் தருகிறது.

Wednesday, August 6, 2014

கருப்புன்னு கவலையா?-சிவப்பழகியா மாறுங்க!

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன….?
பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைக
ள்.


பழ பேஷியல்


முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.


காய்கறி பேஷியல்


முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் கட்டாயமானதா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும்  வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமதுசமூதாயத்தின் நலன் கருதிதான் இருக்கும். இத்தகையகாரியங்கள் கர்ப்பிணி பெண் ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். எல்லாவித கொண்டாட்டங்களின் மத்தியில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும்.

 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என் று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம். கர்ப்பமான பெண்ணின் வீட்டார்பலரையும் இந்த விழாவிற்கு அழைப்பார்கள். அவர்கள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள்.

 இதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் ஏதேனும் அறிவியல் ரீதியான அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியானவை என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா…?

 நீங்கள் கர்ப்பமான பின்பு உங்களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது தான். கீழ்காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செய்யப்படும் சம்பிரதாயங்க ளை பற்றி பார்ப்போம்: இவை எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது.

வளையல் விழா:  ‘வளையல்க ளை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும்போது அந்த வளையலின் சத்தம் குழந்தையை சென்றடைகின்றது. செவியைமட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணரமுடியும் தன்மையை கொண்ட சிசு இத்தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்’ என் று கூறுகிறார்கள். இதுதான் நமக் கு பிரசவத்தை எளிதாக்குகின்றது.

பிரசவ இடம்: வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புவதை போல முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைத்தால் அப்பெண் ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரசத்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவ தற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும். இது உடலுறவை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொண்டிருந்தால் இந்த மன அழுத்தத்திலிருந்து அற்புதமாக தப்பிக்க முடியும். இது சிசு கேட்கும்திறனை அதிகரிக்கும். மிகவும் அதிகமான மன அழு த்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந் த எடை கொண்ட குழந்தைகள் பிற க்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப்போது நல்ல சத்தான உணவும் இதற்கு உதவும் என்று நம்புவோம். இந்த ஒரு காரியத்தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டு ம். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.

நெய் சாப்பாடு: இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல் லும்போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து பிரசவத் தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்ட விஷயமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: எந்த ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்களாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இவை அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக்கும். இது ஒரு முக்கியமான ஆலோசனையாகும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து

சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என  கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை  நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள்  இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை  நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.  

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்கவிஞ்ஞானிகள்.  ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள்  குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக்  முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு  பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக்  கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ்  தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்.

 

செம்பருத்தியின் மருத்துவ குணம்!

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.


உடல் உஷ்ணம் குறைய...

உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.


வெட்டை நோய் குணமாக...

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.



இருதயம் பலம் பெற...

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.


பேன் தொல்லை ஒழிய...

சில பெண்களுக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.


குழந்தையின் வளர்ச்சிக்கு...

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

Thursday, July 31, 2014

சூப் குடிக்கிறவரா நீங்க?

கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிறவரா நீங்க? 

ஒரு காலத்தில் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே கிடைத்து வந்த சூப், இன்று தெரு உணவாக மாறியிருக்கிறது. டீக்கடைகளுக்கு நிகராக, தெருவுக்கு இரண்டு சூப் கடைகளைப் பார்க்க முடிகிறது. காபி, டீயையும், குளிர்பானங்களையும்விட சூப் குடிப்பது ஆரோக்கியமானது என்கிற எண்ணம் படித்த, படிக்காத எல்லா மக்களிடமும் பரவியிருக்கிறது. காய்கறி சூப், தக்காளி சூப், காளான் சூப், கீரை சூப் என விதம் விதமான பெயர்ப் பலகையுடன் வரவேற்கிற சூப் கடைகளில், ஆவி பறக்க கிடைக்கிற சூப் வகைகளுக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு. சூப் உடன் கூடவே கொறிக்கக் கொடுக்கிற கார்ன்ஃப்ளேக்ஸ் கூடுதலாக கவனம் ஈர்க்கும் விஷயம்.  

சூப் ஆரோக்கியமான உணவு என்பதில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் என யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது எங்கே, எப்படி, எதைக் கொண்டு தயாராகிறது என்பதுதான் கேள்வியே. நட்சத்திர ஓட்டல்களில் விருந்துக்கு முன்னால் பரிமாறப்படுகிற சூப் வகைகள் பசியைத் தூண்டக் கூடியவை. அதை மட்டுமே நினைவில் கொண்டு, சூப் என்றால் பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றுக்கு உபாதை செய்யாதது என்கிற நினைப்பில் கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிற நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் ஒரு நிமிடம்...

‘‘சாலையோரக் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட் வாசல்களிலும் விற்கப்படுகிற சூப்களில் சுவைக்காகவும் கெட்டியாக்கவும் சேர்க்கப்படுகிற பல பொருட்களும் ஆரோக்கியக் கேட்டை வரவழைப்பவை. சூப் குடிப்பது ஆரோக்கியமானது என்பது மாறி, அனாவசிய நோய்களை நாமே தேடிச் செல்ல வைக்கிறது’’ என்கிறார் குடல் நோய் மருத்துவ நிபுணர் ராஜேந்திரன். அடுத்து அவர் சொல்கிற தகவல்கள் சூப் பிரியர்களை நிச்சயம் அதிர வைக்கும். ‘‘சூப் வகைகளை கெட்டியாக்கப் பயன்படுத்தப்படுகிற ஜவ்வரிசிக் கஞ்சி, சோள மாவு இந்த இரண்டுமே அளவு கூடும் போது, குடலை பாதிக்கலாம். சுவைக்காக சேர்க்கப்படுகிற மோனோசோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி) வயிற்று உபாதை, தலைவலி, வாய் எரிச்சல், அலர்ஜி போன்ற பல பிரச்னைகளை உருவாக்கலாம்.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் ஆபத்தானது அதில் சேர்க்கப்படுகிற கொழுப்பு பவுடர். விலங்குகளிடமிருந்து பெறப்படுகிற கொழுப்பானது பதப்படுத்தப்பட்டு, பவுடராக்கப்பட்டு, பலவித பேக்கரி தயாரிப்புகளுக்கும், சூப் தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த கொழுப்பு பவுடரானது சூப்புக்கு கெட்டித் தன்மையைக் கொடுப்பதுடன், சுவையையும் மேம்படுத்தும். சுவைக்கு அடிமையாகி, மீண்டும் மீண்டும் சூப் குடிக்கிறவர்களுக்கு, அந்தக் கொழுப்பானது கொஞ்ச நாட்களிலேயே தன் வேலையைக் காட்டத் தொடங்கும். கொழுப்பு கூடுவதால் உண்டாகிற பிரச்னைகளைப் பற்றி இங்கே புதிதாகப் பேசத் தேவையிருக்காது.

இந்த கொழுப்பு பவுடரும் குடலைத் தாக்கக் கூடியது. இத்தனை கேடுகளை உள்ளடக்கிய சூப்பை அடிக்கடி குடிப்பவர்களுக்கு ‘ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ எனப்படுகிற நெஞ்செரிச்சல், காஸ்ட்ரோ என்ட்ரைடிஸ் எனப்படுகிற சிறுகுடல் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். சூப் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிற தண்ணீர், காய்கறிகளின் தரம் என எல்லாமே கேள்விக்குரியவை என்பதால் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாராகிற சூப்பை குடிப்பவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அளவுக்குத் தீவிரமான குடல் பாதிப்புகூட உண்டாகலாம்’’ என எச்சரிக்கிறார் டாக்டர் ராஜேந்திரன்.

இன்ஸ்டன்ட் சூப்பில் எக்கச்சக்க உப்பு!

இன்ஸ்டன்ட் சூப் பவுடர் வகைகளும் விதிவிலக்கல்ல. சுவையூட்டவும், நிறம் சேர்க்கவும், கெட்டியாக்கவும் பயன்படுத்தப்படுகிற பலவித கெமிக்கல்களை தாண்டி, அவற்றில் சேர்க்கப்படுகிற அளவுக்கதிக உப்பே ஆபத்துக்கு அடிப்படையாகிறது என்கின்றன மருத்துவத் தகவல்கள். ஒருநாளைக்கு ஒருவருக்குத் தேவைப்படுகிற சராசரி உப்பின் அளவைவிட, இந்த இன்ஸ்டன்ட் சூப் பவுடர்களில் 5 மடங்கு அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. உடல் பருமன், ரத்த அழுத்தம், வயிற்றுப் புற்றுநோய், ஆஸ்டியோபொரோசிஸ், சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு என பலவித பயங்கரங்களுக்கு அஸ்திவாரம் அமைக்கும் அளவுக்கு ஆபத்தானது இந்த அதிகப்படியான உப்பு. 


ஸ்ட்ராபெர்ரி பழம் தினமும் உண்டால் பலன்கள் ஏராளம்

ஸ்ட்ராபெர்ரி பழம் தினமும் உண்டால் பலன்கள் ஏராளம் 


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது என, கூறுவதை கேட்டிருப்போம். ஏனென்றால் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம், ஆப்பிளையே மிஞ்சும் என அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  தெரியவந்த தகவல்தான் இது. வெறும் தகவல் மட்டுமல்ல, உறுதி செய்யப்பட்ட விஷயமும்கூட. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற  பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

கோடை காலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில், தோல் வறட்சியை போக்கவும், இழந்த நீர்ச்சத்தை  ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்த பழங்களே நமக்கு பெரிதும்  உதவுகின்றன. பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது.
 
அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை தேடி எடுத்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாததால்தான், பலரும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். நாம் சிறப்பான சத்துக்கள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக்கொள்ளலாம்.நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கருதப்படும் இந்த பழங்கள், தற்போது இந்தியாவில் சிறு நகரங்களில் கூட கிடைப்பதாக உள்ளது. 

இதில் நிறைந்துள்ள சத்துகள் போன்றே விலையும் சற்று அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. கோடைக்காலத்தில் பெருமளவு இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன்  வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல்  அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை பருகி பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படும். இதை தவிர்க்க ஸ்ட்ராபெர்ரி  பழச்சாறை குடித்தால் போதும். இதில், 5 பழங்களில் 250 மி.லி., அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும்  நமக்கு கிடைக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு ஊட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி பழம் உண்ணும் பழமாக மட்டுமல்ல, அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

செயற்கை கிரீம்களை பயன்படுத்தி சருமத்துக்கும், தோலுக்கும் தீங்கும் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் இதுபோன்ற பழங்களை பயன்படுத்தினாலே போதும். ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்க செய்யும் தன்மை கொண்டது. முகத்தில் உள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச்செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பில் இருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கும் இப்பழத்தை கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல மாற்றம் காணலாம்.

இன்று ஆண், பெண் அனைவருக்கும் பெரிய குறையாக இருப்பது உடலின் நிறம்தான். இதற்கும் ஸ்ட்ராபெர்ரியில் தீர்வு உண்டு. சருமத்துக்கு  இளமையை கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெறலாம். அதிலும், பழ  வகைகளில் அதிக அளவு முகத்தை பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி. சிவப்பு நிறத்தில் ஜொலிக்க  விரும்புபவர்கள், நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஒரு துணியில் கட்டி, பிழிந்து சாறு எடுக்க வேண்டும். 

இந்த சாற்றை, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். அதேபோல், 3 ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன், 7 ஸ்பூன் பாலை கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில்  குளிப்பதற்கு முன்பு முகத்தில் மாஸ்க் போல போடவும்.

நன்றாக காய்ந்ததும், முகத்தை கழுவவும். இதன் பிறகு எந்த கிரீமும் பூச வேண்டிய  அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூசுடன் அதே அளவு கேரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாக பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.  சரும அழுக்கை நீக்கி, முகத்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்யும் மிக எளிதான, பலன் தரக்கூடிய கிளன்சிங் முறை.