Pages

Showing posts with label ஸ்டெம்செல் சிகிச்சை. Show all posts
Showing posts with label ஸ்டெம்செல் சிகிச்சை. Show all posts

Monday, July 11, 2016

ஸ்டெம்செல் சிகிச்சை எதிர்கால நம்பிக்கை


அண்மை காலமாக மருத்துவத் துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் 'ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம், பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, வெண்படலம், ரத்தம், பல், கலீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்"கள்உற்பத்தி செய்யப்படுகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சை, மருத்துவத்துறையில் ஒரு புரட்சியாகவும், மனித வாழ்வுக்கு மறுமலர்ச்சியையும் தந்து, வியத்தகு வளர்ச்சியை அடைந்து  வருகிறது. 
ஸ்டெம்செல்" சிகிச்சை இப்போது நீரழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி இதய நோய், முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட 85-க்கும் மேற்ப்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப் படுகிறது. அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து "ஸ்டெம்செல்"களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

"ஸ்டெம்செல்"  குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கியுள்ளது. இதனால் "ஸ்டெம்செல்" களை அதற்குரிய "ஸ்டெம்செல்" வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது. இப்போது தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்"களைச் சேமித்து வைப்பதே அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்"களை சேமித்து வைக்க தனியார் "ச்டேம்செல்" வங்கிகள் ரூ . 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றன. இக்கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன. அதேவேளையில் "ஸ்டெம்செல்" மூலம் சிகிச்சை பெறுவதற்குரிய வழி முறைகளையும், வங்கிகளே செய்து கொடுக்கின்றன.

இதன் காரணமாக நடுத்தர மக்களும் "ஸ்டெம்செல்" களை தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகளிடம் சேமித்து வைக்கும் பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

"ஸ்டெம்செல்" மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்ப்படும் போது, "ஸ்டெம்செல்" மூலம் இப்போது அடையும் பயனைவிட மக்கள் அடைய முடியும்.

ஆனால் இப்போதுள்ள் சூழ்நிலையில், "ஸ்டெம்செல்" சேமித்து வைக்கத் தனியார் நிறுவங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்" வங்கிகளை உருவாக்கி வருகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சையளிக்கும் வசதி தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் உள்ளது. இதில் 3 மருத்துவமனைகள் சென்னையில் உள்ளது. ஒரு மருத்துவமனை மட்டும் வேலூரில் உள்ளது.