Pages

Showing posts with label பித்த நீர். Show all posts
Showing posts with label பித்த நீர். Show all posts

Sunday, February 1, 2015

ஏன் ஏற்படுகிறது கணுக்கால் வலி?


 தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால், மூட்டு வலி ஏற்படுகிறது. 35 வயது முதல் தொடங்கி, உடற்கூறுகளின் தன்மையை பொறுத்து, பாதிப்பின் கால அளவு நீடிக்கும். மனித உடலில் வாதம், பித்தம், கபம், உள்ளிட்ட 3 தோஷங்களின் அடிப்படையில் கணுக்கால் வலி ஏற்படுகிறது. காலையில் எழுந்தவுடன் வலி அதிகமாக இருக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்க முடியாது. மீண்டும் மாலை நேரத்தில் வலி துவங்கும். கால் பாதத்தில் எப்போதும் ஒரு விதமான எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

காலை அழுத்தி நடக்க முடியாததால், நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு, தொடை இடுக்கில் நெறிகட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டால், நடக்க இயலாமல் போக வாய்ப்புள்ளது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் பித்தநீருடன் சேரும் போது, தலையில் நீராக கோர்த்து, தலைவலியை ஏற்படுத்திவிடுகிறது. இப்படி தலையில் கோர்க்கும் நீர், கழுத்து வழியாக இறங்கி, கால்களின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கி விடுகிறது.

கப தோஷம், பித்தநீருடன் கபம் சேர்ந்து , நீராக மாறி, உடலின் த்ன்மைகேற்ற வகையில் பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் உருவாக்கி வலி ஏற்படுத்துகிறது. உணவில் காரத்தை சேர்த்துக் கொள்வதாலும் , குடல் அலர்ஜியால் பித்த நீர் கோர்த்து தலைவலி ஏற்பட்டு, பின் கணுக்காலுக்கு வலி ஏற்படுகிறது.