Pages

Showing posts with label செரிமானம். Show all posts
Showing posts with label செரிமானம். Show all posts

Saturday, April 26, 2014

செரிமானப் பிரச்சினையா?

செரிமானம்
பசியால் வாடுவோரைவிட செரிமானப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அதிகமான உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவை செரிமானப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் ஆகின்றன.

நல்ல விருந்து சாப்பிட்டுவிட்டு உடனடியாகத் தூக்கத்தைப் போட்டால் செரிமானப் பிரச்சினையால் தான் திணற வேண்டியிருக்கும். பொதுவாகவே, வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்க வேண்டும். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். செரிமானப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேலும் சில யோசனைகள்...

* பிடித்த, ருசியான உணவு என்பதால் அதிகமாக உண்பது, மன அழுத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* செரிமான சக்தியை அதிகரிக்க எலுமிச்சம்பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம்பழத்தை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

* இஞ்சியும் செரிமானத்துக்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடலாம்.

* இஞ்சிச் சாறையும், எலுமிச்சைச் சாறையும் நன்றாகக் கலந்து, ஒரு ஸ்பூன் குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

* ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிச் சாறில் உப்பு போட்டுக் குடிக்கலாம்.

* ஓமம் வயிற்றுக்கு நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்.

* ஜீரண அவஸ்தை ஏற்படாமல் தவிர்க்க ஆயுர்வேதம் அளிக்கும்

குறிப்பு இது:

கோதுமை உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் அருந்தவும். மாவுப் பண்டங்களைச் சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும். பயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும். சாப்பாட்டு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருந்தால் செரிமானப் பிரச்சினையே ஏற்படாது!