Pages

Showing posts with label குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள். Show all posts
Showing posts with label குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள். Show all posts

Saturday, January 3, 2015

இப்படித்தான் குழந்தை வளர்க்க வேண்டும்.


இப்படித்தான் குழந்தை வளர்க்க வேண்டும்.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள். அவர்கள் தலைவர்கள் ஆவதும் தயங்கி, தளர்ந்து  நிற்பதும் பெற்றோரின் வளர்ப்பில் தான் உள்ளது. கீழே காணும் ஆலோசநிகளை பின்பற்றினால், உங்கள் குழந்தையும் நாளைய தலைவன்தான்.

குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்:

* கணவன் மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை  நினைவில்  வைத்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை மிரட்டும் பொது கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

* சில தாய்மார்கள் சில விஷயங்களை கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், அப்பாகிட்டே சொல்லிடாதே என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே அப்பாக்கிட்டே சொல்லிடுவேன் என்று மிரட்டும்.