Pages

Wednesday, July 13, 2016

புரோட்டா சாப்பிடாதிங்க!



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்பதி கிடைக்கிறதா? அப்படியானால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் அதிகமாக காணப்படுவது பரோட்டா கடைகள் தான். அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு! விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா.

பரோட்டா எப்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் , மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள், தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது. மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு உருட்டி ஒவ்வொரு உருண்டையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி , தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பலவகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக்கும் இதில் அடங்கும்.
மைதா எப்படி தயாரிக்கிறார்கள்? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பனசாயல் பெரோசிடே (benzoyl  peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதவாகும்.  benzoyl  peroxide நாம் முடிக்கும் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள protein  உடன் சேர்ந்து, சர்க்கரை நோய் வர காரணியாய் அமைகிறது. இது தவிர alloxan  என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க, கலக்கப்படுகிறது. artificial  colours, minerals  oils , taste makers preservatives, , sugar, saccarine, ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில் aloxan  சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவழைக்க பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள alloxen  மனிதனுக்கு நீரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.  மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா  உணவு நம் ஜீரண  சக்தியை குறைத்து விடும். எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகள் மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ணுவதை தவிர்ப்பது நல்லது. சில அயல் நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா உணவுகளை உட்கொள்வதால், சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

No comments: