Pages

Tuesday, June 3, 2014

அயோடின் உப்பையும் அளவுடன் பாவிப்போம்!!

 மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள் சோடியம் குளோரைடு எனப்படும் கறி உப்பு ஆகும்.

மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் உப்புப் பாவனையும் முக்கியமானது.

நாம் உட்கொள்ளும் உப்பை சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 05 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதமுள்ள 07 கிராம் உப்பும் உடம்பில் சேர்கிறது.

ஒரு பங்கு உப்பை வெளியேற்ற 23 பங்கு தண்ணீர் தேவை. கலங்களில் உள்ளே இருக்கின்ற நீர் வெளியேறி, கலங்களுக்கு வெளியே உள்ள இந்த உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் கலங்களுக்கு வெளியே நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், இரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு முதலியவை நிகழ்கின்றன.

சோடியமானது தன்னோடு கல்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளுவதால் இரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் முதலியவை உருவாகும்.  புற்றுநோய்களும் வரக்கூடிய வாய்புண்டு.

கனிமங்கள்,  தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் முதலிய சுமார் 84 வகை ஊட்டச் சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை.

உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது.

 எப்போது சமையலறையிலும் இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேசையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ அன்றுதான் அதிலிருந்தே மனிதனின் உடல் ஆரோக்கிம் கெட்டுப்போக ஆரம்பித்து விட்டது.

'ரீஃபைனிங்' என்கிற பெயரில் அரிசி, சீனி, சர்க்கரை,  பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம்.

கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்து வருகிறோம். நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு
( Table salt ) கெடுதல் விளைவிப்பதில் சீனிக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல.

எல்லாவற்ற்றிற்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து, அயோடின் கலந்த உப்பு  ஆகும். உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு,   அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாக அயோடின் சேர்க்கப்படுகின்றது.

தைராய்டு சுரப்பியிலிருந்து, தைராக்ஸின் ஹோர்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன் கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ( Goitre ) முதலிய குறைபாடுகள் தோன்றும்.

ஆகவே, அயோடின் மிக மிக அவசியம்.

ஆனால், வெறும் 0.15 மி.கி. அயோடின் மட்டுமே  சாதாரண ஒருவருக்குதத் தேவைப்படுகிறது. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும் பால், முட்டை, அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது.

இதுதவிர, அயோடின் கலக்கும்போது கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர்,  மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் முதலிய வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன.

இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின், உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும்.

ஆகவே அயோடின் உப்பையும் அளவுடன் பாவிப்போம். அதுவே ஆரோக்கியத்தின் அவசியமும் ஆகும்.

No comments: