Pages

Sunday, September 18, 2016

விபத்துக்களில் சிக்கி தலையில் அடிபட்டால் பிழைப்பது கடினமா?


ஆண்டுதோறும், 20 லட்சம் மக்கள், விபத்துக்களில் சிக்குகின்றனர். அதில் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். மது அருந்தி விபத்துக்குள்ளனோர், 20 சதவீதம் பேர் . 10 நிமிடத்திற்கு ஒரு நபர், மூளை காயத்தால், இறக்கின்றனர்.

தலைக்கவசம் அணிவது, மது குடித்து போதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, சாலை விதிகளை சரியாக கடை பிடிப்பது, அதிவேக பயணம் செய்வதை கட்டுப்படுத்துவது ஆகியவை மூலம், இந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

வயிற்றுத் தசையை வலுப்படுத்தும் பாரிஹாசனம்

செய்முறை:  

விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும்.

இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் சாதாரண சுவாசம் மேற்கொண்டு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு மறுபக்கமும் இதே போல் செய்யவும். இதே போல் இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:
1. வயிற்றுத் தசைகள் பலம்பெறும்.
2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
3. கை, கால் வலுப்பெரும்.

மலச்சிக்கலை போக்கும் சாம ஆசனம்


செய்முறை:

விரிப்பில் பத்மாசனம் செய்வது போல் வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைக்கவும். உள்ளங்கைகள் மேலே பார்த்தவாறு இடது கை மேல் வலது கையை வைக்க வேண்டும். முழங்கால் தரையில் பதிய நேராக அமரவும்.

சுமார் 3 விநாடிகள் இதே நிலையிலிருந்து சாதாரணமாக சுவாசிக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 10 நிமிடம் செய்யவும்.

பலன்கள்:

1. நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது.

2. வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.

3. தலைவலி, மலச்சிக்கல் ஆகியவை நீங்குகிறது.

4. கால்களும், முதுகுத்தண்டும் பலம் பெறுகின்றன.
 

சகஜ யோகா தியானத்தினால் என்ன நன்மைகள்

 சகஜ யோகா

மனித வாழ்வு உடல், உள்ளம், உணர்வு, ஆன்மா ஆகியவற்றின் இயக்கமாக உள்ளது. இவற்றின் ஒருங்கிணைந்த இயக்கம் சமநிலையான, அமைதியான வாழ்வுக்கு அவசியமாகிறது. தியானத்தில் குண்டலினி விழிப்படைந்து சாதகன் கடந்த கால அல்லது எதிர் கால எண்ணங்களின் தொந்தரவு இல்லாத எண்ணங்களற்ற அமைதியான நிலையை அடைய வழிசெய்கிறது.

இதற்காக நம்முள் படைக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் கருவி (சூட்சும மண்டலம்) முள்ளந்தண்டில் 3 நாடிகள், 7 சக்கரங்கள் கொண்டது. அத்துடன் குண்டலினி சக்தி முள்ளந்தண்டில் உள்ள முக்கோண வடிவ எலும்பில் மூன்றரை சுற்று வடிவிலும், ஆன்மா இருதயத்திலும் உள்ளது. இக் குண்டலினி சக்தி எமக்குள் விழிப்படைந்து ஆன்மாவில் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

சகஜ யோகா தியானத்தின் போது குண்டலினி சக்தி விழிப்படைந்து சக்கரங்களுக்கு ஊடக மேலெழும்பி தலையுச்சி வழியாக வெளிப்படுகிறது. இது ஓர் அனுபவம். குண்டலினி சக்தியின் வெளிப்பாட்டை குளிர்ந்த காற்றாக வெளிப்படும் நுண்ணதிர்வுகளாக உள்ளம் கைகளிலும், தலையுச்சியிலும் உணரலாம். ஆன்மா விழிப்படைந்த நிலையில், குண்டலினி எங்கும் நிறைந்திருக்கும் சக்தியோடு இணைகிறது.

இதுவே தியான (யோக) நிலையாகும். இந்நிலையில் உடலில் லேசானது போன்ற உணர்வும், மனதில் எண்ணங்களற்ற அமைதிநிலையும் ஏற்படுகிறது. இந்த அமைதிநிலையே அமைதியான தூய வாழ்வின் ஆரம்பமாகும். 

Sunday, September 11, 2016

வரகு அரிசி காளான் பிரியாணி செய்வது எப்படி?

தேவையானவை:
 

வரகு அரிசி காளான் பிரியாணி
வரகு அரிசி 1/4 கிலோ
காளான் 50 கிராம்
வெங்காயம் 1 பெரியது
தக்காளி 1 பெரியது
எண்ணெய் தேவையான அளவு
நெய் சிறிதளவு
தயிர் 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
ஏலக்காய் 3
மிளகாய்பொடி 1 தேக்கரண்
மல்லிபொடி 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி
இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, இலவங்கம், புதினா, கொத்தமல்லி, மஞ்சள் - சிறிதளவு
 
செய்முறை:
வரகு அரிசி மற்றும் காளானை கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சோம்பு. இலவங்கம் 

போட்டு தாளிக்க வேண்டும். பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.அதோடு, காளான் மற்றும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் சேர்த்து வதக்க வேண்டும். பின், கழுவி வைத்துள்ள, வரகு அரிசியுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில், இரண்டு விசில் வரும் வரை, வைத்து இறக்கினால், கமகமக்கும் வரகு அரிசி காளான் பிரியாணி தயார்.

பயன்கள்:
அரிசி, கோதுமையை விட, வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம். மாவுச்சத்து குறைவாக காணப்படுவதால், உடலுக்கு நல்லது. இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் 'பி' கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன.

Thursday, September 8, 2016

நீர் மோர்


neer moru க்கான பட முடிவு
தேவையானவை
புளித்த தயிர் - 1 கப்,
தண்ணீர் - 3 கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப.


செய்முறை 
புளித்த தயிரை கடைந்து இத்துடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, கடுகை, எண்ணெய் ஊற்றி  தாளித்து பொடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை கிள்ளி போட்டு கலக்கவும்.    

நீர் மோர்


neer moru க்கான பட முடிவு
தேவையானவை
புளித்த தயிர் - 1 கப்,
தண்ணீர் - 3 கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப.


செய்முறை 
புளித்த தயிரை கடைந்து இத்துடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, கடுகை, எண்ணெய் ஊற்றி  தாளித்து பொடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை கிள்ளி போட்டு கலக்கவும்.