Pages

Wednesday, January 27, 2016

சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்

 சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்

நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றபடி சிம்பிளாக ஆக்ஸசரீஸ் அணிய வேண்டும். சின்ன பிரேஸ்லெட் மற்றும் மெல்லிய மோதிரம் உங்கள் கம்பீரத்தைக் கூட்டிக் காட்டலாம். பகட்டாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கைகளில் டஜன் கணக்கில் வளையல்களை அடுக்குவதும், காது அறுந்துவிடும் அளவுக்கு மெகா சைஸ் கம்மலை அணிவதும் கூடாது.

அதிக சத்தம் வராத கொலுசு அணியலாம். கொலுசு மற்றும் வளையல்களில் இருந்து எழும் சத்தம் பிறரை டிஸ்டர்ப் செய்யாத வகையில் இருக்க வேண்டும். கழுத்தையொட்டி மெல்லிய செயினும் விரும்பினால் அதில் சிறிய டாலரும் கோர்த்து அணியலாம். நகைகள் அணிந்து செல்ல வேண்டியது முக்கியம் என்றால் முத்துக்கள் பதித்த மாலையை அணியலாம்.

இது எந்தவித ஆடைக்கும் பொருந்திப் போவதுடன் உங்கள் தோற்றத்தையும் ரிச்சாக காட்டும். ஸ்டிராப் வைத்த ஷூக்களைத் தவிர்த்து கால் முழுக்க கவர் செய்கிற ஷூக்களை அணியலாம். பாயிண்ட் ஹீல் வகையறாக்கள் முதுகுவலியை ஏற்படுத்தும் என்பதால் மைல்டான ஹீல் வைத்த செருப்புகளை அணிவது நல்லது.

மெகா சைஸ் ஹேண்ட் பேகை விட உங்கள் பொருட்களை வைக்கப் போதுமான அளவில் இருக்கும் சின்ன ஹேண்ட் பேக் நல்லது. அதேபோல மணிகள் கோர்க்கப்பட்ட ஃபேன்ஸி ஹேண்ட் பேக்குகளைத் தவிர்க்க வேண்டும். சோர்வான அப்ரோச் தரும் டல் கலர் ஆக்ஸசரீஸைத் தவிர்ப்பது நல்லது.

அதற்காக கண்ணை குருடாக்கும் பளீர் நிறங்களுக்கும் ஆதரவு தரக்கூடாது. உங்களை பெப்பியாக காட்டும் பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்களையும் தவிர்க்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, கிரே, நேவி போன்ற நிறங்கள் நல்லது. நீங்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ற அல்லது பொருந்திப் போகிற நிறத்தில் உங்கள் ஷூ அல்லது ஹேண்ட் பேக் இருந்தால் அந்த மிக்ஸ் அண்ட் மேட்ச் காம்பினேஷன் நிச்சயம் பர்ஃபெக்ட் லுக்ட் தரும்.

சிம்பிளான சிகையலங்காரம் உங்கள் மதிப்பைக் கூட்டும். நீளமான கூந்தல் இருந்தால் சாதாரண பின்னலே போதுமானது. இல்லையெனில் வெறுமனே ரப்பர் பேண்ட் மட்டும் அணியலாம். இன்ச் கணக்கில் மேக் அப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஹேர் ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் வகையறாக்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மெல்லிய நறுமணம் தரும் பெர்ஃபியூம் போடுவதும் தனி ஸ்டைல்! ஆடையும் அலங்காரமும் எப்படி உங்கள் இமேஜை முன்னிருத்துகிறதோ அதேபோல உங்கள் சுத்தமும் உங்களின் மதிப்பீட்டை மாற்றும். சுத்தமான நக பராமரிப்பு, அலைபாயாத கூந்தல், மூக்கை உறுத்தாத பாடி ஸ்பிரே போன்றவையும் உங்கள் மீதான பிறர் பார்வையை மாற்றும்.

உங்கள் வயதும் அதற்கேற்ப நீங்கள் அணிகிற உடையும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போக வேண்டும். உங்களது தோற்றம்தான் உங்கள் கேரக்டரை முன்னிறுத்தும். சூழலுக்குத் தகுந்தபடி ஆடை அணிந்து சென்றால் உங்களை கண்ணியமாக பார்ப்பதுடன் உங்கள் டிரெஸ்ஸிங் சென்ஸ் குறித்துப் புகழவும் செய்வார்கள். 

பெண்களுக்கான சில வித்தியாசமான மருத்துவ குறிப்புகள்

homely women in india க்கான பட முடிவு

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 

இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும் 

டல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். 

நீர்ச்சுருக்கு( நீர்க்கடுப்பு)
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம். 

தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 

பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். 

மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 

டல் வப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வப்பு பெறும்.

ஹோட்டல்களில் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பெண்கள்


ஹோட்டல்களில் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பெண்கள்
பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்றும் அறைகள் என பெண்கள் செல்லும் போது,  தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது போன்ற இடங்களில் பெண்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையுடன்  நடந்து கொள்வது என தெரிந்து கொள்வது அவசியம்.


நீங்கள் உடை மாற்றும் அறைக்குள் நுழையும் முன் இந்த சோதனையை செய்து பாருங்கள். அறைக்கு வெளியே உங்களால் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடிகின்றது, ஆனால் அறைக்குள் நுழைந்த பின் உங்களால் அழைப்பு செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் உஷார் அடையவேண்டும். அங்கே கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என்பது உறுதி.



ஏன் என்றால் இந்த வகை கேமிராக்கள் தகவல்களை பரிமாற்ற செய்யும் போது அதன் மின் அலை பரிமாற்றத்தின் குறுக்கீடு காரணமாக உங்கள் மொபைல் அழைப்பை மேற்கொள்ள முடியாமல் போகும்.



பொது இடங்களில் இருக்கும் கண்ணாடிகள், உஷார்!
நாம் அன்றாடம் செல்லும் பொது இடங்கள், ஹோட்டல்கள், மால்கள், தியேட்டர்கள் மற்றும் பிற இடங்களிள் உள்ள கழிப்பறைகள், குளியலறைகள், அறைகள், உடை மாற்றும் அறைகளின் சுவர்களில் தொங்கி கொண்டிருக்கும் கண்ணாடிகளில் ஓளிந்திருக்கின்றது ஓர் அபாயம்.



உண்மையில் அவை சாதாரண கண்ணாடிகளா அல்லது 2 வழி கண்ணாடிகளா என கண்டறிவது அவசியம். இவ்வகை கண்ணாடிகளுக்கு பின் இருந்து நமது அந்தரங்கங்களை படம் பிடிக்கும் மோசடி கும்பல் பெருகிவருகின்றது. 2-வே எனப்படும் 2 வழி கண்ணாடிகள், கண்டறிவது எப்படி? இதை சோதிக்க மிக எளிய வழி உள்ளது.



கண்ணாடியின் மேற்பரப்பில் உங்கள் விரல் நுனி படும்படி வைக்கவும். அப்படி வைக்கும் போது உங்கள் விரல் நகத்திற்கும் நிழல் பிம்பமான கண்ணாடியில் உள்ள விரலுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும் என்றால் அது ஒரு சாதாரண கண்ணாடியாகும். இதற்கு மாறாக உங்கள் விரல் நேரடியாக பிம்பத்தை தொடும் என்றால் அது ஒரு 2 வழி கண்ணாடி, ஜாக்கிரதை! (யாரோ மறுபக்கத்தில் இருந்து உங்களை பார்த்து கொண்டிருக்கலாம்).



சாதாரண கண்ணாடியில் வெள்ளி பூச்சானது கண்ணாடியின் உட்புறத்தில் பூசப்பட்டுள்ளதால் இந்த இடைவெளி உருவாகின்றது. ஆனால் 2 வழி கண்ணாடிகளில் வெள்ளி பூச்சு மேற்பரப்பிலேயே பூசப்படுவதால் இடைவெளி இருக்காது. 



பொது இடங்களில் நாம் இருக்கும் போது இது போன்றவற்றை மனதில் கொண்டு எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவேண்டும்.பெண்கள் இது போல இடங்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Friday, December 18, 2015

பெண்கள் பேஸ்புக்கில் தவறாக சித்திரிக்கப்படுவதை தடுக்கும் வழிமுறை


இணையத்தில் சாதாரண பெண்களின் புகைப்படங்களை எடுத்து மோசமான பக்கங்களில் பகிரும் அவலம் மிக சர்வ சாதரணமாக நடக்கிறது. பெண்கள் இதற்காக மனம் குமுறி இணையத்தை விட்டு விலகவும் நேரிடுகறது.



ஆனால் எந்த தனிநபரின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியில்லாமல் பகிருவது, அதுவும் மோசமான பக்கங்களில் பகிருவது அதிலும் பாலியியல் சமபந்தபட்டு மோசமாக பின்னூட்டம் இடுவது சட்டப்படி குற்றம் ஆகும். 


எனவே புகைப்படம் பகிரப்பட்ட பெண்கள் அந்த பக்கங்களில் இருந்து புகைப்படத்தை எடுக்க வைக்கலாம்.

முக்கியமாக பேஸ்புக்கில் அந்த பக்கத்தை உடனே பெண்கள் ப்ளாக் செய்கிறார்கள். ஆனால் ரிப்போர்ட் செய்துவிட்டே ப்ளாக் செய்யவேண்டும். ரிப்போர்ட் செய்யும் முன் அவர்கள் புகைப்படத்துடன் இருக்கும் அந்த பக்கத்தை சேர்த்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து கொள்வதால் பிறகு தேவை என்றால் கம்ப்ளயின்ட் செய்ய வசதியாக இருக்கும்.

ஸ்க்ரீன் ஷாட்:

1. புகைப்படதுடன் அந்த பக்கத்தின் பெயரும் ஸ்க்ரீனில் தெரியும்படி வைக்கவேண்டும்.

2. வேறு Tab கள் இருந்தால் அனைத்தையும் மூடிவிட்டு இந்த பக்கம் மட்டும் தெரியும்படி வைக்கவேண்டும்.

3. விண்டோஸ் கீ போர்ட் ல் வலது பக்கத்தில் prt sc என்று எழுதப்பட்ட பட்டன் இருக்கும். அதை பிரஸ் செய்தால் ஸ்க்ரீன் காப்பியாகும்.(copy)

4.MS Paint சென்று paste செய்தால் இந்த ஸ்க்ரீன் அப்படியே சேவ் ஆகிவிடும். பிறகு அதை Folder ல் சேவ் செய்து கொள்ளலாம்.

இவை நமக்கு வழக்கு செய்ய ஒரு சாட்சியாக இருக்கும். எனவே முதலில் சாட்சியாக ஆதாரங்களை எடுத்து வைத்து கொண்டு ரிப்போர்ட் செய்தல் மிக நலம்.

Wednesday, December 2, 2015

இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்களை பாதுகாக்க சட்டம்

இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்களை பாதுகாக்க சட்டம்

உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். 

மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும். உங்களைப் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம். ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும். 


உங்கள் ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந்தாலோ, செக்ஷன் 499 படி ஒரு வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும்னிடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள். 



இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம். மேற்சொன்ன தகவல்களை வைத்து உங்களை இழிவுபடுத்தியவனை தொடர்பு கொண்டும் பனியவைக்கலாம் தைரியமாக புகார் கொடுங்கள். உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.

பெண்களுக்கு பிடிக்காத குணத்தை கொண்ட ஆண்கள்

பெண்களுக்கு பிடிக்காத குணத்தை கொண்ட ஆண்கள்

ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காது. உதாரணமாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண்களைப் பார்த்தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. 


அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். ஆண்கள் எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் பெண்கள் அடியோடு வெறுப்பார்கள்.  



பல பெண்களுடன் அந்தமாதிரியான தொடர்பில் இருக்கும் குணமுள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் பெண்கள் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்பது பெண்களின் கருத்து. பெண்களுக்கு குடிக்கும் ஆண்களை கண்டால் பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. 



ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான். சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும். சந்தேக குணம் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது

இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம்

இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம்


சமுதாயத்தில் பாதுகாப்பு குறைந்து வருவதால், இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் எப்போதும் பாதுகாப்பு உணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். 


பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். சமூக விரோதிகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ, கேலி, கிண்டல் செய்தாலோ பெண்கள் கண்டும் காணாமல் தலை குனிந்தவாறு செல்வார்கள். பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தப்பட்டால் எதிரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. 



இதற்கு ஒரு சில உத்திகளை கையாண்டாலே போதுமானது. எதிரிகளை எளிதில் வீழ்த்தி விட முடியும். சிறந்த பயிற்சி மூலமாக அந்த உத்திகளை அறிந்து கொள்ள முடியும். எதிரிகளால் தாக்குதலுக்கு உட்படும்போது பெண்கள் விடாமுயற்சியுடன், எதிர்த்து போராட வேண்டும். மனித உடலில் மென்மையான பகுதிகள் மற்றும் தாக்குதல் ஏற்பட்டு நிலைக்குலைந்து போகும் பாகங்கள் உள்ளன. 



எதிரிகளிடம் போராடும்போது, அந்த இடங்களில்தான் தாக்குதல் நடத்த வேண்டும். பயந்து அடிப்பணிந்து விடக்கூடாது. எதிர் தாக்குதல் நடத்தினால்தான், எதிரிகளுக்கும் பயம் ஏற்படும். இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. 



இருந்தாலும் சட்டம் மற்றும் ஒழுங்கு நன்றாக இருப்பதால், தொடர் சம்பவங்கள், கொடூர சம்பவங்கள் நடைபெறுவது இல்லை. இருந்தபோதிலும் தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.