Pages

Saturday, November 14, 2015

தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா

தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா


யோக முத்ரா என்னும் ஆசனத்தை தினமும் செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும். 


யோக முத்ரா நிலையானது ஒருவரின் இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும். சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும். மேலும் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். யோக முத்ரா நிலையின் போது இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் நன்றாக அழுந்துவதால், நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமைப் பெறும். 



இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். யோக முத்ரா நிலையை தினமும் தவறாமல் செய்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி பறந்தோடிவிடும். 



இந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.



யோக முத்ரா செய்யும் முறை :



முதலில் பத்மாசனம் போல் அமர்ந்து, பின் கைகளை பின்னே மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும். இப்படி 30 வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். 



இப்படி தினமும் 3 முதல் 45 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம்

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம்

செய்முறை: 


விரிப்பில் முழங்காலை மடக்கி கால்கள் மேல் உட்காரவும், கணுக்கால் தசைகளை கைகளால் பிடிக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் குனிந்து தலையைத் தரையில் பதிக்கவும். புட்டங்களை உயர்த்தவும், அதேசமயம் தாவான்கட்டை மார்பை அழுத்தட்டும். இதுபோல் 5 முதல் 7 முறை செய்து பார்க்கவும். 



பலன்கள்:

1. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

2. ஆஸ்துமா நோய் குணமடைய வழிசெய்கிறது.

3. மார்பு, நுரையீரல் பலம் பெறுகிறது.

வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?


வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?

30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே ஆண்குறி விறைப்புத் தன்மையை அடைந்துவிடும். 


30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும். 


உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். 


புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும். 


30 வயதுக்கு மேல் ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.

Sunday, August 30, 2015

பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை


பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை

பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை

கணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர். 


பெண்கள் வயதுக்கு வந்ததும், இடுப்பு எலும்பு வலுவாக உளுத்தங்களி, உடல் உஷ்ணத்தைக் குறைக்க மணத்தக்காளி, உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, வலுவைக் கூட்ட கொள்ளு எனப் பெண்களுக்கு பிரத்யேகமான சமையல் அம்மாவின் கைமணத்தில் மணக்கும். ஆனால், இன்றைய டீன் ஏஜ் பெண்களோ, நம் பாரம்பரிய உணவுச்சத்துக்களின் மகத்துவம் தெரியாமல், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். 



இதனால், இளம் வயதிலேயே ஒபிசிட்டி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். நாம் நன்றாக இருந்தால்தான், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க முடியும் என்பதை, ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். மாதவிடாய், கர்ப்பம், தாய்மை, மெனோபாஸ் என, உடலின் மாற்றங்களை எதிர்கொள்ள, பெண்களுக்கு அதிக பலமும் சக்தியும் தேவை. 



அந்த சத்துக்களை உணவின் மூலமே பெற முடியும். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு இவை ஐந்தும், தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களின் உடல் நலனுக்கு அவசியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

மூளைக்கு தேவையான சத்து உணவுகள்

மூளைக்கு தேவையான சத்து உணவுகள்

உடலின் அனைத்து பாகங்களைப் போல் மூளை இயங்குவதற்கும் சக்தி தேவை. ‘குளுக்கோஸ்’ எனப்படும் பிரிவே மூளைக்குத் தேவையான முக்கிய சக்தி. முழு தானிய உணவுகளிலிருந்து கிடைக்கும் சக்தி அதிக குளுக்கோஸ் இல்லாமல் அளவான முறையில் மூளைக்குத் தேவையான சக்தியை அளிக்கும். 


* மீன் உணவு மூளைக்கு சிறந்த உணவு. அசைவ உணவுக்காரர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள ஓமேகா 3 மூளைக்கு மிகவும் தேவையான ஒன்று. 


* தக்காளியிலுள்ள லைகோபன் எனும் பொருள் மூளையின் திசுக்களை வெகுவாக காக்கின்றது. எனவே தக்காளியை உணவில் நன்கு சேர்த்துக் கொள்ளுங்கள். 


* பி காம்ப்ளக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களை மருத்துவர் உதவியோடு அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள். 


* இரண்டு டேபிஸ் ஸ்பூன் அளவு பூசணிக்காய் விதைகளை தினமும் எடுத்துக் கொள்வது மூளைக்கு அவசியமான ‘ஸிங்க்’ நன்றாக கிடைக்கின்றது. இது மூளையின் சிந்திக்கும் திறனை நன்கு தூண்டுகின்றது. 


* ப்ரோகோலி எனப்படும் பச்சை காலிப்ளவர் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள வைட்டமின் கே மூளையின் கவனத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. 


* கொட்டைகள், கீரை வகைகள், பச்சை காய்கறிகள், தீட்டாத அரிசி இவை மூளைக்கு சிறந்த உணவாகும். வைட்டமின் ஈ சத்து இவைகளிலிருந்து நிறைய கிடைக்கின்றது. 

தம்பதியர்களிடையே அன்பு அதிகரிக்க மனம் விட்டு பேசுங்க


தம்பதியர்களிடையே அன்பு அதிகரிக்க மனம் விட்டு பேசுங்க

மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் – பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல… வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான். பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். 


ஆனால் ஒரு சில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, ‘பெண்கள் நம் அடிமைகள்’ என்கிற நினைப்பு இருப்பதால்… பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. 



இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர … உன்னதமான அன்பு இருக்கவே முடியாது! பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்… விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! 



பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்று தான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார்களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திர மயமாகிப் போகிறது. 



அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு. சுவாரஸ்யமான உரையாடல்கள் தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். 



அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும். 



புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது. 



வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது. எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மனஉளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.

யோகா செய்தால் உடல் எடை குறையுமா?


யோகா செய்தால் உடல் எடை குறையுமா?

நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. 


மற்ற உடற்பபயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். 



இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும். கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது. 



உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் தொடங்கும். 



நீங்கள் உடலைத் தாண்டிய‌ உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத் துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.