Pages

Wednesday, May 13, 2015

சுண்டைக்காய் சாப்பிடுவது வயிற்று புண்ணுக்கு நல்லது!


 Image result for sundakkai



சுண்டைக்காய், மருத்துவ குணம் உள்ள காய். கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என, இருவகை உண்டு. சுண்டக்காயை மோரில் ஊற வைத்து, வற்றல் போட்டு வறுத்தும், வற்றல் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்க நல்ல மருந்தாகும்.

உணவில் மாதம் ஒரு முறை, கசப்பு சுண்டைக்காய் சேர்த்துக் கொண்டால், கிருமித் தொந்தரவு இருக்காது. அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவுக்கும், கிருமிகளுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்தாகும். கசப்பாக இருந்தாலும், உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி, உடலை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளை கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உண்டு. இதனால், உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும்; உடல் சோர்வு நீங்கும்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை, சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்களை போக்கும்.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி, சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி, மோரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு, தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் நீங்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி. ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்தி வந்தால் பாதிப்பு குறையும். 

ஊறுகாய்க்கு மட்டுமில்லீங்க.... உடல் நலத்துக்கும் நல்லது!


 narthangai க்கான பட முடிவு

நார்த்தங்காயை தமிழகத்தில் ஊறுகாய் போட மட்டுமே பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக விளங்குகிறது.

இதன் வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். கனியின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கி, பசியை அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வரலாம்.

உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் ரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடையும்போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் உப்பி விடும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப்பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டால், நீண்ட ஆயுளோடு வாழலாம்.

Tuesday, May 12, 2015

உங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி?


 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. ஆனால் அதை மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து, சில பெற்றோர் பிரயத்தனம் செய்கின்றனர். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.

சில குழந்தைகள் உணவை விழுங்காமல், அப்படியே வெளியே தள்ளி விடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை, சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி

உள்ளிட்ட உணவுகளும், ஜூஸ், பால் போன்றவற்றையும் கொடுப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என அவர்களுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது, உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்க வேண்டும்.

பிரட், ஆப்பிள், சூப், போன்றவற்றை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள். குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவுக்கு உணவு பிடிக்குமோ, அந்த அளவுக்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்க வேண்டும்.

அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக, எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தி விடும். புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது, குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனித்து, பின்னர் அதிகமாக அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட, நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்ட வேண்டும். குழந்தையின் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப, உணவை ருசியாக தயாரித்து அளித்தால், குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு, முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவூட்டுவது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன் கொண்டு உணவு ஊட்டும் போது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில், ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொறுமையாக, லாவகமாக, மென்மையாக உணவூட்டுவதே சரியானது.

மனஅழுத்தத்தை விரட்டியடிக்கலாம்!


 

காலம், நேரம் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் மனிதனின் லட்சியத்திற்கான பாதையும் மாறி வருகிறது. இப்படி, பம்பரமாய் சிலர் ஒருபுறம் சுற்ற, மறுபுறம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் போரடித்து, தனிமையால் மன அழுத்தத்தில் உள்ளாகுபவர்கள் அதிகம்.

வேலைக்கு சென்றால் ஒரு விதமான மன அழுத்தம் என்றால், வேலைக்கு செல்லாமல் தனிமையில் வாடும் மனஅழுத்தம், சிலரை மனநோயாளியாக்கி விடுகின்றன. சிலரை, அய்யோ பைத்தியம் பிடிச்சிரும் போல் இருக்கிறதே என்று புலம்பவும் வைக்கின்றன. காலை எழுந்தவுடன், வீட்டில் இருக்கும் அனைவரையும் வேலைக்கும், பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டின் அனைத்து வேலையையும் முடித்து, அதற்கு மேல் "டிவி' பார்த்து சலிப்பவர்களே அதிகம்.
இப்படி வீட்டில் இருந்தபடியே, தனிமையை தவிர்த்து, மன அழுத்தம் விடுபட பல வழிமுறைகள் உண்டு. எப்படி?

வீட்டில் இருந்தபடியே கைத்தொழில் செய்யலாம். அதாவது இத்தொழில் அதிக லாபம் இல்லாமலும், மனதிற்கு அமைதியை தருவதாகவும் இருந்தால் சரி என நினைப்பவர்கள், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை முதலில் தேர்ந்தெடுங்கள். அது ஓவியம் வரைதல், பெயின்டிங், பூச்செடிகள் வளர்த்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

முதலில், நாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்து அனைவரும் சென்றபின், பணியில் கவனம் செலுத்த துவங்குங்கள். மாலை அவர்கள் வரும் வரையில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், நேரம் போவதும் தெரியாது; வாழ்வை வீணடிப்பதாகவும் தோன்றாது.

தனிமை, சில நேரத்தில் கோபத்தை உண்டாக்கலாம். நம்மிடம் வந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லக்கூட பிடிக்காது. இப்படி இருப்பவர்கள், வீட்டுப் பக்கத்தில் இருக்கும், மரங்களில் அமரும் கிளி, குருவிகளின் ஓசையை பதிவு செய்து சேகரித்து வைக்கலாம்.

* வீட்டில் தோட்டம் உருவாக்கி, செடிகளை பதியம் போட்டு, செடி, மரங்கள் விற்பனை செய்யலாம்.
* பானை, பிளாஸ்டிக் பெட்டிகள், கண்ணாடிகளில் நவீன தொழில்நுட்பம் கற்று, அதில் சாதிக்கலாம்.
* உபயோகம் இல்லாமல் வீணாகும் பொருட்களை வைத்து, வீட்டு அலங்கார பொருட்களை செய்யலாம். இதனை சந்தைபடுத்தினால் கிடைக்கும் லாபம், வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பிடிப்பையும் தரும்.
* கற்று கொடுப்பதில், ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, வித்தியாசமான முறையில், செய்முறை விளக்கத்துடன் சொல்லி தரலாம்.

இதை படிக்கும் போதே, வீட்டில் இருப்பவர்கள் மனதில், அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். இன்றே புறப்படுங்கள். வித்தியாசமான முறையில், ஒவ்வொன்றையும் செய்து அசத்துங்கள்... தனிமைக்கு குட்பை சொல்லி...

சுவாரஸ்யத்துக்கு வெல்கம் சொல்லலாம்.

Friday, May 8, 2015

ஃபிரைடு ரைஸ்


 fried rice க்கான பட முடிவு
 தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 ஆழக்கு
கோஸ் - 1 கை
கேரட் - 1
பன்னீர் - 50 கிராம்
பட்டாணி - 1 கை
வெங்காயம்
வெங்காய தாள் - 2
மிளகாய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
தக்காளி - 1
கறிமசாலா - 1 ஸ்பூன்
சீரக தூள், சர்க்கரை - 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிறிதளவு
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 / 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது

செய்முறை :

* பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.

* வெங்காயம் , கேரட், பன்னீர், வெங்காய தாளை பொடியாக நறுக்கவும்.

* தக்காளியை விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும்.

* கடையில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து கோஸ், கேரட், பன்னீர், பட்டாணி, வெங்காய தாள் போட்டு வதக்கவும்( கலர் மாற கூடாது ).

* அடுத்து மிளகாய் பேஸ்ட் சேர்க்கவும் (மிளகாயை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து ).

* பின்னர் உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* கடைசியாக சாதம், மிளகு தூள், தக்காளி, சீரக தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

தனியாக உடற்பயிற்சி செய்வது அலுப்பை உண்டாக்கும்

தனியாக உடற்பயிற்சி செய்வது அலுப்பை உண்டாக்கும்• தனியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது அலுப்பாக இருப்பின், குடும்ப உறுப்பினரையோ அல்லது தோழியையோ துணையாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஜிம்மிற்கு செல்லும் போது உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நன்றாக கவனித்து, உற்சாகமூட்டி ஆலோசனை அளிக்கக்கூடியவரை துணைக்கு வைத்துக் கொண்டால் இன்னும் நல்லது.

• எந்த ஒரு உடற்பயிற்சியையும் துவங்கு முன்னர், உடலின் இறுக்கத்தை தளர்த்தி, தசைகளை நெகிழ்வூட்டும் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வது மிக அவசியம். இவை திசுக்களில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க உதவுகின்றன. பொதுவாக உடற்பயிற்சி செய்முறைகளை மிதமான வேகத்தில் துவங்கி, பின்னர் படிப்படியாக அதிகரித்துக் கொள்வது சிறந்தது.

• எடையைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால், அது எடையைக் கூட்டுவதில் தான் போய் முடியும். மாறாக, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுமுறை ஆகியவற்றின் மூலம் உடற்கட்டை ஒரே சீராக வைத்திருப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

• எனர்ஜி பார் போன்ற நவீன சத்து தின்பண்டங்களை உடற்பயிற்சிக்கு முன்னதாக சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான சர்க்கரை போன்றவை நிறைந்துள்ளன. மிகவும் பசியாக உணர்ந்தால் வாழைப்பழம் சாப்பிடலாம். இது உடனடியாக செரிமானமாகி சக்தியை தரக்கூடியது.

• இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருந்தால், உடலுக்கு தேவையான அளவு உடற்பயிற்சி இல்லை என்று அர்த்தம். அதே சமயம் மிக அதிகமான அளவில் இருந்தால், அது உடற்பயிற்சி மிதமிஞ்சி இருப்பதை குறிப்பிடுகிறது. எனவே ஒரு இதயத்துடிப்பு கருவி மூலமோ அல்லது நாடி பார்த்தோ, இதயத்துடிப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

• சிரிக்கும் போதோ, புன்னகைக்கும் போதோ, உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரந்து கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்களை அழிக்கின்றன. எனவே சிரித்து மகிழ வைக்கும் பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வாய்விட்டு சிரிப்பது முகத் தசைகளுக்கும் நல்ல பயிற்சியை அளித்து முகத்தை அழகாக்குகிறது. வாய்விட்டு சிரித்த பின் கண்ணாடியை பார்த்தால், உங்களுக்கே உண்மை புரியும்.

• மனம் தளராமல் ஒரே சீராக பொறுமையுடன் ஆரோக்கிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

Thursday, May 7, 2015

உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

* பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள். அது தவறு.

* சிலர் இடுப்புக்கு மேல்பகுதி பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு, தொடைப்பயிற்சியை வேண்டாம் என்பார்கள். இதன் மூலம் வலுவான தசைகளைக் கொண்ட, இடுப்புக்கு மேல்பகுதியை தாங்கும் சக்தி கால்களுக்கும், தொடைகளுக்கும் இல்லாமல்போகும். குச்சி போன்ற தோற்றத்தை அளிக்கும். இதுவும் முற்றிலும் தவறானது.

* சிலர் ஆர்ம்ஸ் மட்டும் வலுவாக இருந்தால்போதும் என நினைத்து, அதற்கான பயிற்சிகளை மட்டுமே செய்வார்கள். இந்த அணுகுமுறையும் தவறானது. ஆர்ம்ஸ்க்கு மட்டும் பயிற்சிகள் செய்து மற்ற தசைகளுக்குப் பயிற்சிகளைச் செய்யாமல்விட்டால் அது சீரற்ற உடல் தோற்றத்தைத் தரும். எனவே எல்லாத் தசைகளுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம்.

* பாடிபில்டர்களுக்கான பயிற்சிகள் இது என எதுவுமே இல்லை. எல்லாப் பயிற்சிகளையும் ஆண், பெண் இருபாலரும் செய்யலாம்.   ஒரு பாலினத்தினருக்கு மட்டும் எனத் தனியாக எந்தப் பயிற்சியும் இல்லை.

* உடலின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொழுப்பு இருக்கிறது என்று அதற்குரிய பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டாலும், கொழுப்பைக் குறைத்துவிட முடியாது. மொத்த உடலுக்குமான பயிற்சிகள் செய்யும்போதுதான், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும்.

* ஜிம்முக்கு செல்லும் முன்பு சுத்தமாகச் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. வயிறுமுட்ட சாப்பிடவும் கூடாது. நாம் எந்தப் பயிற்சிகளைச் செய்யப்போகிறோம், அதற்கு எந்த அளவுக்கு எரிபொருள் தேவை என்பதை அறிந்துகொண்டு, எடையைக் குறைக்கப்போகிறோமா, அதிகரிக்கப்போகிறோமா என்பதையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஜிம்முக்குச் செல்ல வேண்டும்.

* இந்த நேரத்தில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த நேரமும் பயிற்சிகள் செய்யலாம்.

* பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் சாப்பிடுவதைபோல பயிற்சி முடிந்த பிறகும், நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உணவுகளை உட்கொள்ளலாம். அவை புரதச் சத்து நிறைந்த உணவாக இருத்தல் சிறப்பு.