Pages

Sunday, April 12, 2015

கோடை காலத்தில் முகத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசையை போக்க...


 oil skin க்கான பட முடிவு
சருமம் 3 வகையானது. உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று உள்ளது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால் முக அழகு கெடும். எண்ணெய் பசை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது. 

அவை பின்வருமாறு:

எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர் கடலைமாவு, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஒட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். 

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது.

Wednesday, April 8, 2015

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

venthayam க்கான பட முடிவு

வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

* 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.

* இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

* வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

* தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

* வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அடுக்களையிலுள்ள வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ அனைவருக்கும் இயலும்.  

Tuesday, April 7, 2015

பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி


 பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி


இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது.

தற்போதை உணவு பழக்கவழக்கமும், தொழில்முறை மாற்றமும் இதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இப்பொழுது இளம்பெண்கள் வீட்டுவேலைகளில் அதிக ஆர்வம் காட்டாதமை இன்னொரு காரணம். உணவில் அதிக எண்ணெய் உள்ளமை, கட்டுக்கோப்பான உணவுப்பழக்கமின்மை போன்றவற்றால் இந்த நிலை ஏற்படுகிறது.

பெண்களிற்கு எப்பொழுதும் கொடியிடைதானே அழகு. இந்த திடீர் தொப்பைகளினால் பெண்கள் அடையும் சங்கடங்களும் அனேகம்.  உங்களுக்காகவே மிக எளிய, பயனுள்ள சில உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.

• படம் Aஇல் காட்டியபடி மல்லாந்து நேராக படுக்கவும். பின்னர், இடதுகாலை நேராக மேல் நோக்கி தூக்கி, வலது கையினால் கால்நுனி விரலை தொட முயற்சிக்கவும். இதனை செய்யும் போது, அடிவயிறு இறுகும். சற்று சிரமத்தை கொடுக்கலாம். எனினும், உடலை உறுதியாக்கி முறைமாற்றி மாற்றி செய்யவும். ஆரம்பத்தில் 15 தடவைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

• அதிக பயனைத்தரும் சற்று கடினமான பயிற்சி இது. மல்லாந்து படுத்து, முதலில் புறங்கைகளை முதுகின் பின்னால் ஆதாரமாக கொடுத்து, கால்களையும், தலைப்பகுதியையும் மேல்நோக்கி தூக்கவும். இடுப்பு பகுதி மட்டுமே தரையில் பதிந்திருக்கட்டும். கால்களை 45 பாகையில் வைத்திருங்கள். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்தபடி கால்களை முன்பின்னாகவும், மேல் கீழாகவும் நகர்த்தவும்.

இடைவெளி விட்டுவிட்டு ஐந்து ஐந்து நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க முயலுங்கள். பின்னர், கைகளை பக்கவாட்டாக நகர்த்தி படிப்படியாக முகத்தை முன்னோக்கி நகர்த்துங்கள். இதேசமயத்தில் கால்களை படத்தில் உள்ளதைப் போல மடித்து முகத்தை நோக்கி கொண்டு வாருங்கள்.

இடுப்பு மட்டும் தரையில் படிந்திருக்க, வேறு ஆதாரங்கள் இல்லாமலேயே முழங்கால்களை முகத்தால் தொடும் இலங்கை நோக்கி முயலவும். ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் சில நாட்களின் பின்னர் சாத்தியமாகும். இந்த கடினமாக இருந்தாலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.   


Wednesday, April 1, 2015

இத்தாலியன் பாஸ்தா!!!


 pasta recipes in tamil language க்கான பட முடிவு
பாஸ்தா உடலுக்கு மிகவும் சிறந்த உணவு, இது ஒரு இத்தாலியன் வகை உணவுகளில் ஒன்று. இந்த உணவை உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிட்டால், நிச்சயம் குண்டாவார்கள். இத்தகைய பாஸ்தாவை எவ்வாறு செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :
பாஸ்தா - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்

செய்முறை :
முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அதில் பாஸ்தாவை போட்டு, எண்ணெய் மற்றும் சிறிது உப்பை போட்டு, நன்கு கலக்கி, தட்டைப் போட்டு மூடி, சிறிது நேரம் வேக வைத்து, வெந்துள்ளதா என்று பார்த்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பிறகு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். 

காய்கள் அனைத்தும் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பை போட்டு, சிறிது நேரம் வேக வைக்கவும். பின் அதில் தக்காளி சாறு, கரம் மசாலா தூள், சீரகப் பொடி, மிளகாய் தூள், மாங்காய் பொடி, மிளகுத் தூள் மற்றும் சில்லி சாஸ் விட்டு நன்கு கிளறவும். அனைத்துப் பொருட்களும் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் பாஸ்தாவை போட்டு, நன்கு 5 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கவும்.
இப்போது சுவையான ஈஸியான பாஸ்தா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் துருவிய சீஸ் போட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.




கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்...




udal edai kuraya க்கான பட முடிவு
‘இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்சினை. நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்

கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்

நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்

இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் ‘டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்


வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.

5. நார்ச் சத்து தினமும் தேவை

உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6. குறைந்த அளவு அசைவ உணவு

‘ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

7. மீன் உணவு

எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.

8. முழு தானியங்கள்

தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது.

9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

10. தொடர் உடற்பயிற்சி

தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்

அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

12. மாத்திரை

ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ‘ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?


 mooligai க்கான பட முடிவு

சுவிஸ் சாக்லெட், சிங்கப்பூர் சென்ட், சீன வாஸ்து என வெளிநாட்டு மோகம் நமக்கிருப்பது போல, சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய பாரம்பரிய மூலிகைகளின் மவுசு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மூலிகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன!

அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவையும் பல முக்கியமான மூலிகைகளுக்கு நம் நாட்டையே சார்ந்திருக்கின்றன. நம் மக்களுக்கு அவற்றின் அருமைகள் புரியாதது பற்றியும், பாராம்பரிய மூலிகைகளின் சிறப்புகள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் எஸ்.ராமசாமி பிள்ளை.

‘‘சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய நான்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் அடங்கும். இதனை சுருக்கமாக ‘ஆயுஷ்’ என்றழைப்பார்கள். இவற்றில் இயற்கை மூலிகைகளே மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று பயங்கர நோய்களாக சொல்லப்படும் பலவற்றுக்கும் மருந்தாகும் மூலிகைகளை நமது முன்னோர் அன்றே ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

 நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல... நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தையும் கண்டறிந்து, மறுபடி அது தலை தூக்கா மல் சரிப்படுத்துவதும் நம் பாரம்பரிய மருத்துவ முறையின் சிறப்பு. சித்த மருத்துவம் என்பது நமது மண்ணின் மருத்துவம். இதை மருத்துவமுறை என்பதை விட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம்.

நவீன மருத்துவத்தில் நோய் வந்த பிறகுதான் மருந்துகள் கொடுக்க முடியும். சித்த மருத்துவ மருந்துகளை நலமோடு இருக்கும் போதே உட்கொண்டு வந்தால், எந்த நோயும் வராமல் தடுத்துவிடலாம். நாவல் கொட்டை, சிறு குறிஞ்சால், ஆவாரம்பூ ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பொடியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். பொன்குரண்டியும், பூலா விருட்சமும் நேரடியாக நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வேலை செய்து நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும் இவற்றுக்கு உண்டு. காக்கட்டான், நீல அவுரி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கரந்தை ஆகிய ஐந்து கர்ப்ப மூலிகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது... மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும் என்கிறது சித்தர்களின் ஓலைச்சுவடி.

துளசி, திருநீற்றுப் பச்சிலை, ஆடாதொடா, தூதுவளை போன்ற மூலிகைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை பயனளிக்கும். நெஞ்சு சளியையும் குறைக்கும். வல்லாரை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். கண்டங்கத்தரியையும், முசுமுசுக்கையையும் உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் பட்ட சளியைக் கூட போக்கிவிடும். மணத்தக்காளி வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை குறைக்கும். இதில் உள்ள அல்கலைன் மலத்தை இளக்கிவிடும்.

உணவு செரிமானத்தையும் சரிப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டையும் சரியாக்கும். அசோக மரத்தின் பட்டைகள் பெண்களின் பிரச்னைகள் பலவற்றுக்கு மருந்தாகும். வீட்டிலேயே இவ்வகை மூலிகைகளை எளிதில் வளர்த்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். இப்படிச் செய்யாமல், நோய் வந்த பிறகு ஆங்கில மருத்துவத்தை நாடுவதையே பெரும்பாலான மக்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதோடு, மாறிவரும் நவீனச் சூழலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையும் நோய்களை அதிகரிக்கின்றன.

நமது மூலிகைகளின் அருமை தெரிந்த வெளிநாட்டினரோ, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கின்றனர். அந்த மருந்துகள் அனைத்தும் வெளிநாட்டில் தயாரானவை என்ற லேபிளோடு மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் நமக்கே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்கள் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் வரை மார்க்கெட்டிங் செய்து மக்களை வாங்க வைத்துவிடுகிறார்கள். இது நம் மக்களுக்கு தெரிவதில்லை.

சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஜுரங்களுக்கு தகுந்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. சித்த மருத்துவத்திலோ அப்போதே 64 வகை ஜுரங்களை வரையறுத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளனர். நில வேம்பு குடிநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, விஷ ஜுரத்துக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. நில வேம்பு குடிநீரின் மகத்துவத்தை இன்று ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் மொத்தம் 4,448 நோய்களை, வாதம், பித்தம், கபம் என வகைப் பிரித்து, அதற்கான மருத்துவ முறைகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

பெரும்பான்மையானவர்கள் எல்லா வகை ஆங்கில மருத்துவ முறைகளையும் பார்த்து. சிகிச்சை பலனளிக்காமல் போனவுடன்தான் சித்த மருத்துவத்துக்கு வருகிறார்கள்.

அப்போது நோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கும். அதனால் அந்த நிலையில் நோயை சரியாக்குவது சவால் நிறைந்த விஷயமாக மாறிவிடுகிறது. நோயின் ஆரம்ப நிலையில் வந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். எளிமையாக அனைவரும் பயன்பெறக்கூடிய பக்க விளைவில்லா மருத்துவம் சித்த மருத்துவம்...’’ என்று நமது பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை விளக்குகிறார் சித்த மருத்துவர் ராமசாமி பிள்ளை.

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!


 sukku க்கான பட முடிவு

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பொடி நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.


மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் 

சுக்கு ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.