Pages

Wednesday, April 1, 2015

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்...




udal edai kuraya க்கான பட முடிவு
‘இன்றைக்கு ‘கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்சினை. நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்

கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.

2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்

நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.

3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்

இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் ‘டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்


வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.

5. நார்ச் சத்து தினமும் தேவை

உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6. குறைந்த அளவு அசைவ உணவு

‘ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

7. மீன் உணவு

எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.

8. முழு தானியங்கள்

தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது.

9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

10. தொடர் உடற்பயிற்சி

தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.

11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்

அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

12. மாத்திரை

ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ‘ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?


 mooligai க்கான பட முடிவு

சுவிஸ் சாக்லெட், சிங்கப்பூர் சென்ட், சீன வாஸ்து என வெளிநாட்டு மோகம் நமக்கிருப்பது போல, சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய பாரம்பரிய மூலிகைகளின் மவுசு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மூலிகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன!

அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவையும் பல முக்கியமான மூலிகைகளுக்கு நம் நாட்டையே சார்ந்திருக்கின்றன. நம் மக்களுக்கு அவற்றின் அருமைகள் புரியாதது பற்றியும், பாராம்பரிய மூலிகைகளின் சிறப்புகள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் எஸ்.ராமசாமி பிள்ளை.

‘‘சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய நான்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் அடங்கும். இதனை சுருக்கமாக ‘ஆயுஷ்’ என்றழைப்பார்கள். இவற்றில் இயற்கை மூலிகைகளே மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று பயங்கர நோய்களாக சொல்லப்படும் பலவற்றுக்கும் மருந்தாகும் மூலிகைகளை நமது முன்னோர் அன்றே ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

 நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல... நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தையும் கண்டறிந்து, மறுபடி அது தலை தூக்கா மல் சரிப்படுத்துவதும் நம் பாரம்பரிய மருத்துவ முறையின் சிறப்பு. சித்த மருத்துவம் என்பது நமது மண்ணின் மருத்துவம். இதை மருத்துவமுறை என்பதை விட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம்.

நவீன மருத்துவத்தில் நோய் வந்த பிறகுதான் மருந்துகள் கொடுக்க முடியும். சித்த மருத்துவ மருந்துகளை நலமோடு இருக்கும் போதே உட்கொண்டு வந்தால், எந்த நோயும் வராமல் தடுத்துவிடலாம். நாவல் கொட்டை, சிறு குறிஞ்சால், ஆவாரம்பூ ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பொடியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். பொன்குரண்டியும், பூலா விருட்சமும் நேரடியாக நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வேலை செய்து நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும் இவற்றுக்கு உண்டு. காக்கட்டான், நீல அவுரி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கரந்தை ஆகிய ஐந்து கர்ப்ப மூலிகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது... மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும் என்கிறது சித்தர்களின் ஓலைச்சுவடி.

துளசி, திருநீற்றுப் பச்சிலை, ஆடாதொடா, தூதுவளை போன்ற மூலிகைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை பயனளிக்கும். நெஞ்சு சளியையும் குறைக்கும். வல்லாரை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். கண்டங்கத்தரியையும், முசுமுசுக்கையையும் உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் பட்ட சளியைக் கூட போக்கிவிடும். மணத்தக்காளி வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை குறைக்கும். இதில் உள்ள அல்கலைன் மலத்தை இளக்கிவிடும்.

உணவு செரிமானத்தையும் சரிப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டையும் சரியாக்கும். அசோக மரத்தின் பட்டைகள் பெண்களின் பிரச்னைகள் பலவற்றுக்கு மருந்தாகும். வீட்டிலேயே இவ்வகை மூலிகைகளை எளிதில் வளர்த்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். இப்படிச் செய்யாமல், நோய் வந்த பிறகு ஆங்கில மருத்துவத்தை நாடுவதையே பெரும்பாலான மக்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதோடு, மாறிவரும் நவீனச் சூழலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையும் நோய்களை அதிகரிக்கின்றன.

நமது மூலிகைகளின் அருமை தெரிந்த வெளிநாட்டினரோ, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கின்றனர். அந்த மருந்துகள் அனைத்தும் வெளிநாட்டில் தயாரானவை என்ற லேபிளோடு மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் நமக்கே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்கள் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் வரை மார்க்கெட்டிங் செய்து மக்களை வாங்க வைத்துவிடுகிறார்கள். இது நம் மக்களுக்கு தெரிவதில்லை.

சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஜுரங்களுக்கு தகுந்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. சித்த மருத்துவத்திலோ அப்போதே 64 வகை ஜுரங்களை வரையறுத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளனர். நில வேம்பு குடிநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, விஷ ஜுரத்துக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. நில வேம்பு குடிநீரின் மகத்துவத்தை இன்று ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் மொத்தம் 4,448 நோய்களை, வாதம், பித்தம், கபம் என வகைப் பிரித்து, அதற்கான மருத்துவ முறைகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

பெரும்பான்மையானவர்கள் எல்லா வகை ஆங்கில மருத்துவ முறைகளையும் பார்த்து. சிகிச்சை பலனளிக்காமல் போனவுடன்தான் சித்த மருத்துவத்துக்கு வருகிறார்கள்.

அப்போது நோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கும். அதனால் அந்த நிலையில் நோயை சரியாக்குவது சவால் நிறைந்த விஷயமாக மாறிவிடுகிறது. நோயின் ஆரம்ப நிலையில் வந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். எளிமையாக அனைவரும் பயன்பெறக்கூடிய பக்க விளைவில்லா மருத்துவம் சித்த மருத்துவம்...’’ என்று நமது பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை விளக்குகிறார் சித்த மருத்துவர் ராமசாமி பிள்ளை.

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!


 sukku க்கான பட முடிவு

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பொடி நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.


மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் 

சுக்கு ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.


Wednesday, March 11, 2015

ஆரோக்கியம் காக்கும் ஆறுவகை கீரைகள்

 greens க்கான பட முடிவு

காய்கறி வகை உணவுகளில் சகல நலங்களையும், தரும் உணவு எதுவென்றால் அவை கீரைகள்தான். கீரைகளில் உயிர்சத்துக்கள், தாது உப்புகள், கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. மாமிச உணவில் கிடைக்கும் சக்தி கீரையிலும் கிடைக்கிறது. கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதோ ஆரோக்கியம் தரும் ஆறுவகை கீரைகள்.

சிறுகீரை: சிறுகீரையை பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து, கஷாயம் செய்து சாப்பிட்டால், விஷத்தின் வீரியம் தணிந்து வந்த வியாதியும் குணமடையும்.

மிளகு தக்காளி கீரை: உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி, சிரங்குகளை குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.

முளைக்கீரை; முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியும், மாலைக்கண் பார்வை குறைவும் நீங்கும். வாரத்திற்கு இருமுறையாவது, முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோய்கள் குணமாகும். சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினசரி முளைக்கீரை கொடுத்தால், உடல் வலிமையுடன் வளர்வார்கள்.

இலட்கெட்டை கீரை: இக்கீரையை சாப்பிட்டு வர, வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான்.
காய்கறி கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும், சத்து நிறைந்தவைதான். எந்த சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.

பாற்சொறிக்கீரை: பாற்சொறிக்கீரையுடன் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிடுவார்கள். சீதபேதியுடன் கஷ்டப்படுபவர்கள், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, சீதபேதி குணமாகும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றும். உடலில் தேஜஸ் உண்டாகும்.

அரைக்கீரை; பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி, இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். ரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.


புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள்


vegetables க்கான பட முடிவு

புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் சக்தி காய்கறிகளுக்கு உண்டு. அத்தகைய சக்தி வாய்ந்த காய்கறிகள் பற்றிய குறிப்புகள்:

உருளைக்கிழங்கு: புற்றுநோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்பாகத்தில் இருப்பதால், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட வேண்டும். அதிலும், பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும், உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது.

பாகற்காய்: விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு, மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி, புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், கருவுற்ற பெண்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் பாகற்காய் உண்பதை தவிர்க்க வேண்டும்.

வெங்காயம்: வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால், வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.

தக்காளி: ஆண்கள் வாரம் பத்துமுறை, தக்காளி சாப்பிட்டால், புராஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்காமல் சாப்பிட்டால், குடல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் வரும் ஆபத்து, 60% குறைவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் உள்ள லைகோபீனின் சக்தியானது, கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதிகரிக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. செல்களைக் கொல்லவும் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.

முட்டைகோஸ்: கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் தடுக்கிறது. கீமோதெரபியுடன் முட்டைகோஸ் சாற்றை, புரோகோலி மற்றும் காலிஃபிளவர் சாற்றுடன் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, கணையப் புற்றுநோய் வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும், நோயை தடுப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆராய்ச்சி.

சாலட்: வெங்காயம், காரட், வெள்ளரி, தக்காளி சாலட் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவு ஆகும். அத்துடன் இவ்வகை உணவுகளைக் குழந்தைகள் சிறுவயதில் விரும்பிச் சாப்பிடுவார்கள். காரணம், அவர்களுடைய ஜீன்களில் அவை பதிவாகி விடுவதால் அந்த வகை உணவுகளை அவர்கள் விரும்புவார்கள். பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற தைராய்டு புற்று, கணையப் புற்று, குடல் புற்று, சிறுநீர்ப்பை புற்று போன்றவற்றை நிச்சயம் வராமல் தடுக்கலாம்.

Saturday, March 7, 2015

கம்பங்கூழ்



கம்பங்கூழ்
தேவையானவை:
நொய்யரிசி - ஒரு கைப்பிடி அளவு
கம்பு
உப்பு
தயிர்
செய்முறை:

  • கம்பை அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காய வைக்கவும். 
  • காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து (பச்சரிசி மாவு பொடிப்பது போல்) சலித்து வைக்கவும். 
  • அத்துடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். (ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்). 
  • அத்துடன் கம்பு மாவுக் கலவையை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 
  • மறுநாள் இத்துடன் தேவையான அளவிற்கு தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.
  • சின்ன வெங்காயம் அல்லது வறுத்த மோர் மிளகாயுடன் பரிமாறலாம். மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்தெடுத்து, இந்தக் கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
  • கம்பில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், இந்த கூழ் உடம்புக்கு மிகவும் நல்லது.

கேப்பை கூழ்


தேவையானவை
கேப்பை கூழ்

  • கேப்பை மாவு (ராகி / குரக்கன் / கேழ்வரகு) - ஒரு கப்

  • உப்பு - தேவையான அளவு

  • அரிசி நொய் - கால் (அ) அரை கப்

  • தயிர்

  • சின்ன வெங்காயம் (அ) மாங்காய்
செய்முறை:
கேப்பை மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரவு, ஒரு பகல் புளிக்கவிடவும்.

அரிசி நொய்யை வேக வைத்து (பொங்கி) வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும், புளித்த கேப்பை மாவை ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும். 

பாதியளவு வெந்ததும், பொங்கிய அரிசி நொய்யைச் சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். அரிசி நொய்யைப் போட்டதும் நிறம் மாறும், வெந்துவிட்டது என நினைக்க வேண்டாம்.

கையில் தண்ணீர் தொட்டு, கூழை தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாத பதத்திற்கு வெந்ததும் இறக்கிவிடவும்.

கூழை ஆற வைத்து பானை (அ) பிரிட்ஜில் வைத்து மறு நாள், இதில் தயிர், உப்பு, சேர்த்து கரைத்து பரிமாறவும். ருசியான கேப்பை கூழ் தயார்.