Pages

Saturday, April 5, 2014

வெயிலுக்கு இதமான மோர்

மோர்
கோடைகாலம் வந்தாலே விதம் விதமாக குளிர்பான விளம்பரங்கள் கலக்கி எடுக்கும். ஆனால் உண்மையான இயற்கை குளிர்பானத்தை நாம் மறந்து விடுகிறோம். ஏழைகளின் சக்தி என்று கருதப்படுவது, நீராகாரம். முதல் நாள் வடித்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது தான் நீராகாரம்.

அதில் உள்ள சத்துக்களை எந்த நவீன மருந்தும் தர முடியாது. அதே போன்ற மற்றொரு சத்தான பானம், மோர்,பாலை உறை ஊற்றி கிடப்பது தயிர். இந்த தயிரை மத்து கொண்டு கடைந்து வெண்ணெய் சத்தை பிரித்து எடுத்துவிடவேண்டும்.

கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைத்தபின் மோர் கிடைக்கும் இதனுடன், கறிவேப்பிலை,மல்லிதழை,இஞ்சி,பச்சை மிளகாய், போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது சுவையான மோர் தயார். மோரில் பொட்டசியம், வைட்டமின் பி12,கால்சியம்,ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரம் சத்துக்கள் நிறைந்துள்ளன. புளிப்பு,உப்பு,காரம், உவர்ப்பு என நான்கு சுவைகளையும் மோர் தரக்கூடியது. நீர் மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது.

பசியின்றி வயிறு திம்மென்று இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோர் ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசி எடுப்பதை உணர முடியும். கொளுத்தும் வெயிலில் சுற்றிவந்த பின் உடலில் உள்ள நீர்சத்து முழுமையும் ஆவியாகி விடும்.

அப்போது ஒரு டம்ளர் மோர் (முடிந்தால் மண்பானை தண்ணீர் சேர்த்து) குடித்துப்பாருங்கள். உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதை நன்றாக உணர முடியும். இது எந்த குளிர்பானத்திலும் கிடைக்காத ஒன்று, வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம்.

உடல் சூட்ட தணிக்கும். கோடைகாலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்து விடும். அதற்கு தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும் வரை மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும். குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சமாச்சாரங்கள் எதுவும் இன்றி கிடைக்கும் மோர் அருந்தி இயற்கையோடு இசைந்து வாழ்வோம்.

மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்

நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

சோர்வை போக்கும் அழகு குறிப்புகள்

அழகு
கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

* வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

* முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

* ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது.

* ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.

* வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள்.

* பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

* எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும்.

* ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது. தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

வயதானலும் அழகாக இருப்பது எப்படி
சிலர் நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார்கள்.  இதற்கு வெளித்தோற்றம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதால், இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது. அந்த வகையில் நீங்கள் நாற்பது வயதை கடந்தவரா? நாற்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா? அப்படியெனில் ஐம்பது வயதிலும் அழகாக தோற்றமளிப்பதற்கான சில வழிகள் இதோ...

• உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.

• தலைமுடியை சரியாக கவனிக்க வேண்டும். தலைமுடிக்கு டை அடிக்க விரும்பினால் அதன் வண்ணத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவும். சாதரணமாக 60-வயதை கடந்த பின்னர் டை அடிப்பது செயற்கையாகவே தெரியும்.

• தலைமுடியின் நீளத்தை கவனிக்கவும். குறைந்த நீளத்தையுடைய தலைமுடி அதிக நீளமுடைய தலைமுடியை விட நல்ல தோற்றத்தை கொடுக்கக் கூடியதாகும். பொதுவாகவே தோள்பட்டைக்கு மேலே முடி இருப்பது நன்கு பொருத்தமானதாக இருக்கும்.

• எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

• இந்த வயதில் அதிகப்படியான மேக்-கப் தவிர்ப்பது நல்லது. வயதாகும் போது குறைந்த அளவு மேக்-கப் தான் அழகாகவும், இயற்கையானதாகவும் இருக்கும். நல்ல வெளுப்பாக இருந்தால் கண்ணிமைகளுக்கும், கண்ணின் வெளிப்பகுதிகளுக்கும் பிரௌன் அல்லது கிரே நிறத்தில் வண்ணம் கொடுக்கலாம். கருமை நிறத்தில் இருந்தால், கருப்பு நிற மையை பயன்படுத்த வேண்டாம்.

Thursday, April 3, 2014

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை  குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.

உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை  தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.

தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.

வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.

உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

பிளாங்க் எக்ஸர்சைஸ்கள்

பிளாங்க்
பிளாங் எக்ஸர்சைஸ் எனக்கூறப்படும் பயிற்சிகள் கோர் பயிற்சிகளை சார்ந்ததாகும்..இது ஒரு நிலையான பயிற்சி இதன் மூலம் வயிற்றில் உள்ள தசைகள் முதுகுப்பகுதி   தோள் பகுதி ஆகியவை பலம் பெறும்.. இதில் பல வகைகள் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள தசைகளை பலம் பெற செய்கின்றது

இப்பயிற்சிகளின் மூலம் சம அளவு வலிமை உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வோர் இவற்றை  எப்போதும் தொடர்ந்து செய்வது நல்லது…. இப்பயிற்சியை செய்யும் போது மூச்சை ஆழ இழுத்து வயிற்றில் உள்ள தசைகளை சுருக்கிப்பழக்கப்படுத்த வேண்டும்….

அப்போது உங்கள் இடைப்பகுதி  மெலிய துவங்கும் … வயிற்று  தசையினை உள்ளிழுக்கும் போது மூச்சு சீராக இருத்தல் வேண்டும்… இந்த்  நிலையை டிரான்ஸ்வெர்ஸ் என்கிறோம் … இதை மனதில் இருத்தி உங்கள் வயிற்றில் உள்ள குறுக்குதசைகளை பலப்படுத்தினாலே உங்கள் இடுப்பு பகுதி சுருங்க துவங்கும் …

ரெகுலர் பிளாங் எக்ஸர்சைஸ் வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால் ரிவர்ஸ் பிளாங் பயிற்சியானது  பின்புற தசைகளுக்கு நல்ல பலனை தருகின்றது சைட் பிளாங் எக்ஸர்சைஸ் உடலின் பக்கவாட்டில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது…

இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’

வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.

அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:
வாழைப்பூ
* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.

* மூலநோய் கட்டுக்குள் வரும்.

* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.

* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.