Pages

Friday, March 7, 2014

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. இந்த வேப்பிலையானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று பார்க்கலாம்.

• கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 - 20  நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

• முகப்பரு இருப்பவர்களுக்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்கள் படிப்படியாக குறைய தொடங்கும். 

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை
• வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.

• சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பால், எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.

Tuesday, March 4, 2014

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...

சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழந்துவிடும். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம்.  சுகாதாரமான வாழக்கைக்கு எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருக்கலாம்.

சூரிய ஒளிக்கதிரிலிருந்து வைட்டமன் டி கிடைக்கிறது. சருமத்தை பாதுகாக்க மாய்ஸரைஸ் தினமும் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி, காற்று, குளிர், அலர்ஜி சோப், வெப்பம் ஆகியவற்றிலிருந்து மாய்ஸரைஸ் சருமத்தை பாதுகாக்கும். குளியலுக்கு பிறகுதான் ப்ரதயேக க்ரீமையோ எண்ணையையோ தடவவேண்டும்.

கை, முகத்துக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புற சூழல்னாலும சருமம் பாதிப்படையலாம். சருமத்துக்கு பொருத்தமான டை மற்றும பெர்பீயூமை உபயோகிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம். சருமம் நன்றாக இருப்பதோடு உடற்பயிற்சியினால் வயதும் தெரியாது.

உடற்பயிற்சி உடலை வலமைப்படுத்தும், சருமம் சுருக்கமடையாமல் நன்றாக இருக்கும். தட்பவெப்ப மாற்றத்தாலும் சருமம் பாதிப்படையும. சருமத்துக்கேற்ற சூடான மற்றும் குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும். மேலும், வேகமாக எடை குறைப்பதை தவிர்க்க வேண்டும். வேகமாக எடை குறைப்பதால் சருமம் பாதிப்படையும்.

தேவையில்லாத டயட் மொத்த உடலையும் பாதிக்கச் செய்யும். குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதன் மூலம் சருமம் சுருக்கமடையத் தொடங்கும். சத்தான உணவை சாப்பிடவேண்டும். உணவில் புரோட்டின் சத்து கட்டாயம் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவுகளிலும் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலில் கொழுப்பை சேர்க்கும்.

 சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

ஆனால் உடலுக்கு தேவையான புரோட்டின், வைட்டமின் மற்ற தாதுப்பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இது தோல்செல் பெருக்கத்துக்கு உதவும். தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை என்றால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து சருமம் பாதிப்படைய ஆரம்பிக்கும்.

தண்ணீர் தான் நமக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். டயட் இருந்தாலும் உடற்பயிற்சி செய்தாலும் கூடுதலாக தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக தேனீர், இயற்கை குளிர்பானம் மற்றும் பழச்சாறு, காய்கறிகள் சூப் குடிக்கலாம். ஆனால், காபி மற்றும் மதுபானம் குடித்தால் உடலிலுள்ள தண்ணீர் சத்தை குறைத்துவிடும்.

புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த தூக்கமின்மையும் அதிக கவலையும் சருமத்தை பாதிக்கும். முதலில் முகத்தைத்தான் பாதிக்கும்.

உடலை விரும்பி பார்த்துக்கொண்டாலே உங்களது தோற்றம் பளபளபளப்பாக இருக்கும். முகத்தை பிரஷ் ஆக வைத்திருப்பதற்கு இப்போது நவீன பேஷ்வாஸ் நிறைய வந்துள்ளன. அதிலும் லெமன், ஆப்பிள், ஸ்ட்ராபெரி உட்பட பல்வேறு பழச்சாறு வாசனையுடன் லோசன் வந்துள்ளன. அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் முகம் எந்த நேரமும் பிரஷ்சாக இருக்கும். முகத்தில் சுருக்கங்களும் வராது.

Monday, March 3, 2014

நகங்கள் எளிதில் உடைகிறதா?

முக அழகுக்கு நேரம் செலவிடும் பெண்கள் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக இருக்க நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

நகங்களைப் பராமரிக்க இதோ சில டிப்ஸ்........

* நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும்.

* சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், அடிக்கடி நகங்கள் உடையாமல் உறுதியாகும்.

* விரல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க, தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைக்க வேண்டும்.

* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
நகங்கள் எளிதில் உடைகிறதா?

* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

* மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் சுத்தமாகும்.

Sunday, March 2, 2014

விஸ்கி ஃபேஸ் பேக்

விஸ்கி ஒரு கிருமி நாசினி என்பது நிறைய பேருக்கு தெரியாத சேதி. விஸ்கி சருமத்தில் தழும்புகளை அகற்றவல்லது. முகத்தில் பருத்தொல்லையால் அவதிப்படுவோருக்கு விஸ்கி பேஷியல் சர்வரோக நிவாரணி. விஸ்கி ஃபேஸ் பேக் செய்ய...

முட்டை வெள்ளைக்கரு - 1 ஸ்பூன்
பால் பவுடர்
எலுமிச்சை சாறு
விஸ்கி - 1 ஸ்பூன்

இவை அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். கலவை கெட்டிப்பட்டு இருக்கும். விஸ்கி பேஷியலை அப்படியே முகத்தில் தடவுங்கள். சருமத்தில் எரிச்சல்கள் அகன்று குளிர்ச்சி பரவுவதை நீங்களே உணரலாம்.
ஃபேஸ் பேக்

சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி அழுத்த துடைத்துவிட்டு கண்ணாடியில் பாருங்ளேன். உங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாது.

அழகிற்கு அழகு சேர்க்கும் குளிர் கண்ணாடிகள்

கண்களை பாதுகாக்கவும் முகத்திற்கு அழகையும், கவர்ச்சியையும் கூட்டவும், ஆண், பெண் இரு பாலருக்கும் உதவுவது குளிர் கண்ணாடிகள். குளிர் கண்ணாடிகளை வெயில் காலங்களுக்கு மட்டுமின்றி குளிர் காலங்களிலும் வாகனப் பயணிகளின் போதும் கூட உபயோகப்படுகிறது, நம் தமிழக தட்பவெப்ப நிலைக்கு கிட்டத்தட்ட வருடத்தின் முக்கால் பங்க மாதங்களும் வெயிலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது என்தால் எப்பொழுதும் குளிர் கண்ணாடிகளின் தேவை இருக்கிறது.

குளிர் கண்ணாடிகளின் உபயோகங்கள் என்று பார்க்கையில் அது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள்குளிர்ச்சி அளிக்கிறது. சூரிய கதிர்களின் யுவி அலைகளின் தாக்கத்திலிருந்து கண்களின் அடியில் உள்ள பூந்தசைகளைச் காக்கிறது. இக்கண்ணாடிகள் முகத்தின் பாதி இடத்தை மறைப்பதால் முகத்தையும் பாதுகாக்கிறது.

குளிர் கண்ணாடிகள் பல வித நிறங்களில் கிடைக்கிறது. சில நிறங்கள்

சரியான கண்ணாடியை நமக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்க சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். வட்டமான முகம் உள்ளவர்கள் நீண்ட வடிவமோ, சதுரமோ அல்லது செவ்வக வடிவத்திலோ கண்ணாடியை தேர்ந்தேடுக்கலாம். வட்டமோ, நீள்வட்டமோ கூடாது. இவர்கள் பெரிய அளவு கண்ணாடி அணியும் போது கண்ணங்களின் உருண்டை வடிவம் மறைந்து அழகாக தோற்றமளிப்பர்.

நீள் வட்ட வடிவ முகம் கொண்டவர்கள் எந்நத மாதிரி வடிவமுள்ள கண்ணாடியையும் அணியலாம். நெற்றியிலும், தாடையிலும் குறுகி, காதுப்புறம் அகன்ற டைமன்ட் வடிவமுகம் கொண்டவர்கள் நீள் வட்டம், செவ்வகம் என்று இரு வடிவங்களிலும் சிறிய அளவுள்ள கண்ணாடியை அணியலாம். கண்ணங்களுக்கு மேலே கண்ணாடி முடிவடைந்தால் தான் முகம் நீண்டு தெரியும்.

அகன்ற நெற்றியும், கூம்பிய கீழ் தாடையும் கொண்ட இதய வடிவமுகம் கொண்டவர்கள் எவியேட்டர்,ராப் காக்கின்ஸ் போன்ற ஃப்ரேம் நெற்றிப் பொட்டு வரை நீண்டிருக்கக் கூடியதை அணிவது அழகாய் இருக்கும். சதுர முகம் கொண்டவர்கள் வட்டம், நீள் வட்டம் வடிவ கண்ணாடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஓரங்கள் மடிந்து சற்றே பெரிய அளவு இவர்களுக்கு அழகாய் இருக்கும். நீண்ட முகம் கொண்டவர்கள் அகலமான ஃப்ரேமும், ஓரங்கள் அலங்கரிக்கப்பட்டதாகவும், கண்ணாடியின் காதுகள் நல்ல அகலமாக இருப்பதாகவும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதனால் முகம் அகண்டும், சிறியதாகவும் தோன்றும், வடிவத்தை விட அளவே மிகவும் முக்கியம்.

சிறிய வடிவமே இவர்களின் முக நீளத்தை குறைக்க உதவும். இன்றைக்கு பல குளிர் கண்ணாடிகள் யுவி அலைகளை தடுக்கும் வகையில் கிடைக்கிறது. 60 சதவீதத்திற்கு குறையாத யுவி பாதுகாப்பிளிக்கும் கண்ணாடிகளை பார்த்து வாங்குவது நல்லது. 

ஆடைகளின் நிறத்திற்கு பொருந்தும் படியாக அணியும் போது ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல கம்பீரத்தையும் மிடுக்கையும் அளிக்கிறது. சில நேரங்களில் ஆடை அணிகலன்களின் குறைகளையும் இக்கண்ணாடிகள் ஈடுகட்டக் கூடியவை. கண்ணாடி வாங்கும் போது ஏதோ கடைக்கு போனோம். பிடித்ததை வாங்கினோம் என்று இருக்கக்கூடாது.

Friday, February 28, 2014

முருங்கையின் மருத்துவ பயன்கள்

மூலிகைத் தாவரங்களில் ஒன்று முருங்கை 'டிரம்ஸ் டிக்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முருங்கைக்காயின் அறிவியல் பெயர் மொரிங்கா ஆலிபெரா. முருங்கையின் கீரையும், காயும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பூக்களும் ஆரோக்கியம் தரும். இதிலுள்ள சத்துக்களை இந்த வாரம் அறிந்து கொள்ளலாம்...

முருங்கை

* உலர்த்தப்பட்டு, பவுடராக தயாரிக்கப்பட்ட கீரையில் நிறைய அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன.

* முருங்கைக் காய் மற்றும் விதைகள் ஆலிக் அமிலம் நிறைந்தது. ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புச்சத்து இதிலுள்ளது.

* முருங்கை விதைகள் எண்ணைச்சத்து மிக்கது. உயிரμ உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது.

* பசுமையான முருங்கை கீரையில் 'வைட்டமின் ஏ', நிறைய அளவில் உள்ளது. 100 கிராம் கீரையில் டி.ஆர்.எல். முருங்கை 52 சதவீதம் உள்ளது. அதாவது உடலுக்கு அன்றாடம் கிடைக்க வேண்டிய வைட்டமின் தேவையைவிட 2 1/2 மடங்கு அதிகமாகவே கிடைக்கச் செய்கிறது கீரை.

* மேலும் 'வைட்டமின் ஏ', ஆனது கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உடையது. சிறந்த நோய் எதிர்ப் பொருளாகவும் செயல்படும். பார்வைத்திறன், சருமப்பொலிவு ஆகிய வற்றிற்கும் உதவுகிறது.

* முருங்கைக் காய்களில் அதிக அளவில் 'வைட்டமின் சி' உள்ளது. 100 கிராம் பூவில் 235 சதவீதம் டி.ஆர்.எல். அளவில் 'வைட்ட மின் சி' உள்ளது. இது உடலுக்கு நோய் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை வழங்குகிறது. பிரீ-ரேடிக்கல் உடலில் சேராமலும் தடுக்கிறது.

* பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான வைட்டமின் பி-6, தயமின், ரிபோ பிளேவின், பான்டோதெனிக் அமிலம், நியாசின் போன்றவை உள்ளன. இவை கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு இவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு துணைக் காரணியாக உதவுகிறது.

* கால்சியம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், செலினியம், மக்னீ சியம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும், கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவும்.

* முருங்கை இலை (கீரை) அதிக அளவில் புரதம் நிறைந்தது. மற்ற கீரைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களில் இருப்பதைவிட மிகுதியாகவே புரதச் சத்து நிறைந்திருப்பது இதன் சிறப்பு. 100 கிராம் கீரையில் 9.8 கிராம் புரதம் உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய புரத அளவில் 17.5 சதவீதம் ஆகும்.

தூக்கமின்மையில் இந்தியர்கள்

தூக்கமின்மைஇந்தியாவில் 93 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை குறைபாடு இருப்பதாக நீல்சன் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் போன்ற நாடுகளில் மருத்துவத்துறையில் இதயம் நுரையீரல் போல் இதற்கும் தனியாக சிறப்புத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இப்போதுதான் இந்த தூக்கமின்மை பிரச்சினை குறித்து தூக்க மருந்தியல் என்ற துறை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.



தூங்கிய நிறைவே இல்லை என்று வருபவர்கள் இன்னொரு வரை தூக்கத்தின் நடுவே நிறைய முறை எழுந்து கொள்வபர்கள் 3-வது வகை. இதற்கு அடுத்த வகையினர் அசாதாரணமானவர்கள். தூக்கத்தில் நடப்பது , சாப்பிடுவது, போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள். ஷிப்ட் முறையில் மாறி மாறி வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

தூக்கமின்மைக்கு முக்கியமான ஒரு காரணம் ஸ்லீப் ஆப்னியா எனப்படும் சுவாசப்பகுதியிலுள்ள தசைகள் கூடுதலாக விரிவதால் வரும் குறட்டை பிரச்சனை அதிகப்படியான குறட்டை மட்டுமல்லாது சீராக சுவாசிக்க முடியாமலும் சிலர் அவதிப்படுவார்கள். தூங்கும் போது குறட்டை வருபவர்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் டூளைக்கு போகாது.

இதனால் நுத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு பக்கவாதம் வரலாம். ஒபீசிட்டி எனப்படும் அதிக உடல் எடை வேலையில் ஏற்படும் மனஅழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவவை தூக்கமின்மை வேறு சில காரணங்கள். வளர் இளம் பருவத்திலிருந்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எல்லா வகையானது தூக்கமின்மையும் மருந்தினால் சரி செய்ய இயலாது என்பதோடு பல ஆண்டுகள் பிரச்சனைகளோடு இருந்து விட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகலாம். குறிப்பாக ஆப்னீயாவை சீஎப்மிசின் என்ற கருவி உள்ளது. இரவில் இதை பயன்படுத்தும் போது குறட்டையினால் ஏற்படும் சுவாசப்பிரச்சனை இருக்காது.

பில்ப்ஸ் ஹெலத்கேர் நீல்சன் நடத்திய ஆய்வு முடிவுகள்..........

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முக்கிமான 25 நகரங்களை சேர்ந்த 35 முதல் 60 வயது வரை உள்ள 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்கமின்மையால் அவதிப்படும் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள்.

58 சதவீதம் பேருக்கு தூக்கமின்மையால் வேலை பாதிக்கப்படுகிறது. 11 சதவீதம் பேர் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கின்றனர். 11 சதவீதம் பேர் வேலையின் போதே தூங்கி விடுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட 62 சதவீதம் பேருக்கு சுவாசம் தொடர்பான  பிரச்சனைகள் வரும் சாத்தியம் அதிகம் இருந்தது.

ஆனால் இது ஒரு பிரச்சனை என்பதை உணர்ந்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவபர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே தூக்கமின்மையும் ஒரு நோய் தான். அதை புரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும். இல்லையேல் சுவாச நோய்கள் மட்டுமல்ல, மனநோயையும் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமாக இருக்கம் ஒருவர் 6 முதல் 8 மணி நேரம் தினமும்  தூங்க வேண்டும்.  8 மணி நேரம் தூங்க முடியவில்லை என்று வருபவர்கள் முதல் வகை. நன்றாக தூங்குகிறோம். ஆனால் காலையில் எழுந்தால் மீண்டும் தூங்கலாம் என்று தான் தோன்றுகிறது.