Pages

Sunday, December 1, 2013

வெங்காய சமோசா

மாலை நேரத்து மழை  குளிரில் சுடச்சுட ஏதாவது சாப்பிட கிடைத்தால் உள்ளே தள்ளலாம் என தோன்றுகிறதா....? சாதாரண பஜ்ஜி, வடை, போண்டா போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக வெங்காய சமோசா செய்து சாப்பிட்டு பார்க்கலாமா?

 தேவையான  பொருட்கள்:

 முதலில் வெங்காய மசாலாவை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
               * மைதா மாவு - கால் கிலோ
               * எண்ணெய், உப்பு -தேவையான அளவு
               * அரை கிலோ பெரிய வெங்காயம்
               * ஐந்து பச்சை மிளகாய்
               * சிறிதளவு கொத்தமல்லி
               * கறிவேப்பிலை
               * ஒரு ஸ்பூன் சோம்பு
               * காரத்துக்கேற்ப மிளகாய் தூள்
               * சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும்
               * தேவையான அளவு உப்பு


செய்முறை:

முதலில் பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் இதனுடன் தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெல்லிதாக தேய்த்து, அதன் மேல் மாவை தூவவும். இன்னொரு உருண்டையை எடுத்து இதே போல் தேய்த்து அதன் மீது வைத்து, மறுபடியும் நன்கு மெல்லிதாக தேய்க்கவும்.

இதனை எண்ணெய் ஊற்றாத தோசைக்கல்லில்  போட்டு. இரு புறமும் திருப்பிப் போட்டு தனியே எடுத்து விடவும். பின் கத்தியால் நீளவாக்கில் வெட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் அளவாக எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

இப்போது, நீளவாக்கில் வெட்டி வைத்த துண்டை எடுத்து, முக்கோண வடிவில் மடித்து, ஆற வைத்த வெங்காய மசாலாவை உள்ளே வைத்து மூடி விடவும். நன்கு மூடுவதற்கு, மைதா பேஸ்ட் அல்லது தண்ணீரை பயன்படுத்தவும்.

கடாயில் எண்ணெயை  ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போடவும். பொன்னிறமாக மாறியவுடன், எடுத்து ஆற வைக்கவும். பின் சாஸ் அல்லது புதின தயிர் சட்னியை தொட்டு வாயில் வைத்தால்... ஆகா!


பளீச் முகம் வேண்டுமா?


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழ சாறு ஒரு ஸ்பூன், கேரட் சாறு ஒரு ஸ்பூன், ஈஸ்டர் தூள் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பளபளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு  அல்லது பால்  ஏடு எடுத்து கால்  ஸ்பூன் மஞ்சள் கலந்து பூசி, நல்ல மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் / பாதாம்பருப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன் என எல்லாவற்றையும் கலந்து, நன்றாக கலக்கி முகத்தில் பூசி மஸாஜ்  செய்து வந்தால் கரும்புள்ளி நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

இரவு படுக்க போகும் முன்பு புதினா சாறை  முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Saturday, November 9, 2013

Home Remedies For Beautiful Skin

Here are a few quick beauty regimes you can follow at home to look your best this season.

Home Made Face Packs:

A natural way to get smooth and supple skin is home made face packs, and what's more all the ingredients you need are readily available at your disposal in your house. Try a Tomato face pack if you have oily skin. Mash up a tomato and leave it on your face for 10-15 minutes, then wash it off with lukewarm water. To get the elusive glow, apply the honey mask in your skin.

Keep Yourself Hydrated:

Drinking at least 8-10 glasses of water per day will give it that healthy glow. Your skin tends to get dull and dry in this season and its imperative to keep it hydrated and water acts as a natural moisturizer. 

Home Made Moisturizers:

Try some home made moisturizers like yogurt and lemon juice. Papaya pulp and banana mash also work wonders for your skin. Since they're all natural, there's no harm in applying them on a daily basis. Take it off with plain water and see your skin glow with that home made nourishment.

Sunday, November 3, 2013

இதயம் காக்கும் கீரைகள்

சிறு கீரை
சைவ உணவுகளில் சகல சத்துக்களைக் கொண்டதும், உடலின் சங்கடம் தீர்த்து, சத்து சேர்ப்பதில் தலையாய பங்கு வகிக்கிறது கீரை.

சிறு கீரை:

சிறுகீரை செம்பு சாது நிறைந்தது. குடல், இதயம், மூளை, ரத மண்டலம் இவைகளுக்கு நல்ல வலிமை தரும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு கீரையை, வெறும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால், பாஷானத்தின் வீரியம் தணிந்து, அதனால் வந்த வியாதி குணமடையும்.

முளைக்கீரை:

முளைக்கீரை
முளைக்கீரைகீரையை உண்பதால், சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சி அடையும். மாலைக்கண் பார்வை குறைபாடு நீங்கும். அஜீரணக் கோளாறு, வயிற்றுப் புண் சரியாகும். வாரம் இரு முறையாவது கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், மலச்சிக்கல், நீரடைப்பு குணமடையும்.

Friday, October 4, 2013

பார்லி - சாபுதானா சுண்டல்

தேவையானவை: 

பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் 
எண்ணெய் விட்டு, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக் கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Thursday, October 3, 2013

தேவையற்ற கொழுப்பைக் குறைக்க..

நமது சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்துப் பெட்டி போன்றது. அதில் இருக்கும் மசாலாப் பொருட்கள் சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும், உடலை இளைக்கச் செய்யவும் பயன்படுகிறது.


இஞ்சி: இது மிளகாய் போல உடல் சூட்டை அதிகமாக்கி உடலில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

பூண்டு: இது இருதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும், உடலை இளைக்கச் செய்வதற்கும் இது வழி செய்கிறது.

பெருஞ்சீரகம்: இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதைத் தேயிலையோடு சேர்த்தோ, தனியாகவோ டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.

மிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்சேசின் எனும் மிளகாய்ப் பொடியிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, வியர்வை அதிகமாக வரக் காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.

சீலரி விதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றி உடல் எடையைச் சீராக ஆக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அசட்டுப் பசி வராமல் தடுக்கிறது.

பார்ஸ்லி: இது கொத்தமல்லியைப் போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலில்
அதிகப்படி நீர் தாங்காமல் வெளியேற்றி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

காராமணி இனிப்பு சுண்டல்


காராமணி இனிப்பு சுண்டல்:

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப்
பாகு வெல்லம் (பொடித்தது) - 1 கப்
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

சிவப்புக் காராமணியை வருது, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு,  வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு  காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து, எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்தால் காராமணி இனிப்பு சுண்டல் தயார்.